தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்!

கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்.

விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான் அலைவார்கள்.  உச்சி மண்டையைப் பிளக்கின்ற உச்சி வெயிலின் கோரப் பிடியிலிருந்தும் கொடூர வெப்பத்திலிருந்தும் தப்பிப்பதற்காகத் தான் கோடை விடுமுறை!

கோடை விடுமுறையின் இந்த நோக்கத்தையே இவர்களின் வெயில் விளையாட்டு தகர்த்தெறிந்து விடுகின்றது; தவிடுபொடியாக்கி விடுகின்றது.
இதற்கு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே இருந்து விடலாம். அதன் காரணமாகக் கோடை வெயிலின் கொடூரத்தை விட்டும் அவர்கள் தப்பலாம்.
கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றிகண்ட கண்ட நபர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது,பெண்களைக் கேலி செய்வதுசினிமா பார்ப்பதுஅரட்டை அடிப்பதுஊதாரித்தனமாகச் செலவு செய்வது போன்ற வீணானபாவமான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
புகை பிடிப்பதிலிருந்து போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்ற பாவச் செயல்களிலும் பலியாகி விடுகின்றனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாணவமாணவியரை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாககோடை காலப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.
அந்தந்த மாவட்டப் பகுதிகளில் நடத்தப்படுகின்ற இந்த முகாம்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி அவர்களது கோடை கால விடுமுறையை மார்க்கக் கல்விஒழுக்க வாழ்க்கை போன்றவற்றைப் பெறுகின்ற வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று கல்வி என்பது உலகக் கல்விமார்க்கக் கல்வி என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு விட்டது. உலகக் கல்வி ஒரு குழந்தையின் நாள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. மார்க்கக் கல்வியைப் பொறுத்த வரை காலையில் ஒரு மணி நேரம் அல்லது மாலையில் ஒரு மணி நேரம் என்ற ஓரக் கல்வியாக ஆகி விட்டது. பலருக்கு அதற்குக் கூட நேரமில்லை.
மக்தப் மதரஸாக்களில் இந்த ஓர நேரங்களில் ஓத வருகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இருநூறு அல்லது முன்னூறு இருக்கும். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரேயொரு ஆசிரியர் தான் இருப்பார். அலிப் சபர் ஆபே சபர் பா என்று கூட்டாக ராகம் போட்டு ஒரு பாட்டு பாடி விட்டுக் கலைந்து விடுகின்றனர்.
இந்தக் கூட்டுக் கல்வியில் குழந்தைகள் என்ன கற்று விடப் போகின்றார்கள்சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில் தான் கோடைகாலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.
குறைந்த நாட்களில் இஸ்லாமியக் கொள்கை விளக்கம்தொழுகைப் பயிற்சிதொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள்அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்மனனம் செய்தல் போன்ற ஒரு குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பி மார்க்கக் கல்வி பயிலச் செய்யுங்கள். கொடிய நரகத்திலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.  [அல்குர்ஆன் 66:6]


நன்றி: ஏகத்துவம்

மாணவர்கள் தங்களது கோடைகால விடுமுறையை பயனுள்ள வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை   ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டு (2012) TNTJ நடத்தும் கோடைகால பயிற்சி முகாம்களின் இடங்கள் மற்றும் தொடர்பு எண்கள்!


திங்கள்

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு


இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.
இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.
இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர்.
மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு செய்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் இன்ஷா அல்லாஹ் திறக்கப்பட உள்ளது.
அனைவரும் துஆ செய்யுங்கள். இதற்காக ஆர்வத்துடன் வெளியூர் மக்கள் குழும வேண்டாம் எனபதற்காக கடைசி நேரத்தில் இச்செய்தி வெளியிடப்படுகிறது.
நல்ல படியாக பிரச்சனை ஏதுமில்லாமல் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இறைப்பணி நடக்க வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வட்டாட்சியர் ஆணை