தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

குஜராத் கலவர ஆவணங்கள் அழிப்பு: காங்கிரஸ், பாதிக்கப்பட்டோர் கண்டம்!

2002ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட குஜராத் கலவர வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளதற்கு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சக அமைச்சர்களையும் தப்பிக்ககை வைப்பதற்காகவும் உண்மையை மறைப்பதற்காவும் குஜராத் அரசு இவ்வாறு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், குஜராத் அரசின் இந்த நடவடிக்கையை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையிலல் சுதந்திராமான விசாரணை தேவை என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான 2002 ஆம் ஆண்டு கலவரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் உத்தரவிடக் கோரி மே மாதம் நானாவதி கமிஷனில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் விண்ணப்பித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்த குஜராத் அரசு வழக்கறிஞர் வாகீல், அரசு விதிகளின்படி தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், வாகனப் பதிவு புத்தகங்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய டைரி ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறினார்.

குஜராத் அரசின் இச்செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காகச் செய்யப்பட்ட கிரிமிணல் செயல் இது என்று கூறினார். மாநில அரசு இந்தப் பிரச்சனைகளை முழுமையாக மறைத்துவிட முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கூட்டுக் கொலை மற்றும் இன அழிப்பு தொடர்பான விசாரணை குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும்போது இவ்வாறு செய்திருப்பது, குஜராத் மாநில முதல்வரே இதில் தொடர்புடையவராயிருப்பார் என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது என்றும் மனீஷ் கூறினார்.

முதல்வர் நரேந்திர மோடியம் அவரது அமைச்சரவை சகாக்களும் குஜராத் கலவரத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற உண்மை வெளிவராமல் இருப்பதற்காகவே அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ள என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடிய குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தவிர விசாரணை ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார்.

அரசு இவ்வாறு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தோம் என்று கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகப் போராடி வரும் என்ஜிஒ அமைப்பான ஜன் சங்கர்ஷ் மஞ்சின் வழக்கறிஞர் முகல் சின்ஹா கூறியுள்ளார்.

பர்தா குறித்த சட்டத்திருத்தம் தேவை: ஆஸ்திரேலியப் போலீஸôர் கருத்து

பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன், பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை என்று கருத்து கூறியுள்ளார்.

இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி போலீஸôரால் சோதனை செய்ய முடியாததால், ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்யமுடியாது. ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.

மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து வரும் தீர்ப்பு



மதக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு தாமதமாவதர்க்கும் மிகக் குறைவான தண்டனை அளிப்பதர்க்குமான தற்போதைய ஒரு எடுத்துக்காட்டு. பிகாரில் 21 வருடங்களுக்குப் முன்னர் நவாடா மாவட்டத்தில் குலினி கிராமத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் 37 நபர்களை நிரபராதிகள் என்றும் 10 நபர்களை குற்றவாளிகள் என்றும் கூறி பீகாரின் நவாடா மாவட்டத்தின் நீதிமன்றம் கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இவழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனையை ஜூலை 29-ம் தேதி நீதி மன்றம் அறிவிக்கும் .

1990-ம் ஆண்டு மார்ச் 12-ம் நாள் ஹிந்துக்களின் ஹோலிப் பண்டிகையின் போது இந்த மதக் கலவரம் ஏற்ப்பட்டது. பெரும்பான்மையான ஹிந்து மக்கள் கிராமத்தின் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் வழியாக முன் எப்போதும் ஊர்வலம் செல்லாத முஸ்லிம்கள் வழிபாடு நடத்தும் மஜித்தின் வழியாக ஊர்வலம் செல்ல முயன்றது கலவரம் ஏற்பட காரணமாக அமைந்தது.

பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இக்க்கலவரத்தில் பட்டப் பகலில் 5 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டிக் கொள்ளப்பட்டனர். மேலும் பல முஸ்லிம்கள் காயமடைந்தனர். கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் நூற் ஆலம் , ஹபிஸ் மியாஹ், பீர் மியன், சல்மான் மியான் மற்றும் வாஹித் மியான் என்போர் ஆவர்.

அக்கிராமத்தை சார்ந்த முஹமது யூனுஸ் இக்கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 57 நபர்கள் மீது முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்ததற்காக FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். 57 குற்றவாளிகளில் 47 பேர் வழக்கை சந்தித்து வந்தனர். 9 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர். ஒருவர் இன்னமும் தலை மறைவாகியுள்ளார்.

21 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட நீதி மன்ற நீதிபதி B.P லால் 10 நபர்களை குற்றவாளிகள் என்றும் 37 நபர்களை அவர்களுக்கு எதிரான போதுமான சாட்சியங்கள் இல்லை எனக் கூறி நிரபராதிகள் என்றும் தீர்பளித்தார். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கான தண்டனையை நாளை அறிவிக்கும் என தெரிகிறது.

செவ்வாய்

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு: 1,809 மாணவர்களுக்கு அழைப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெறும் முதல் கட்ட கலந்தாய்வுக்கு மொத்தம் 1,809 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்-விளையாட்டு வீரர்கள்-ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான 55 எம்.பி.பி.எஸ். இடங்கள்-1 பி.டி.எஸ். இடம், சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 767 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வரும் 30-ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து பொதுப் பிரிவினர் உள்ளிட்ட பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 3-ம் தேதி (ஞாயிறு) கலந்தாய்வு கிடையாது.

கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்... எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து ஏற்கப்பட்ட 20,123 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. ரேங்க் பட்டியலில் 66 மாணவர்கள் 200-க்கு 200 பெற்று முன்னணியில் உள்னர். இவர்களில் பிறந்த தேதி அடிப்படையில் கம்ப்யூட்டர் ரேண்டம் எண் மூலம் முதல் 10 பேருக்கு சிறப்பிடமும் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பிரிவினர் உள்பட வகுப்பு வாரியாக ரேங்க் பட்டியல் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தயாரித்து சுகாதாரத் துறையின் இணையதளம்

ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மற்றும் அரசின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இரண்டிலும் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

50 மாற்றுத் திறனாளிகளுக்கு... தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் (3 சதவீதம்) மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கலந்தாய்வு தொடக்க தினமான ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 66 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்

குழு அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து ஊனத்தின் பாதிப்பை உறுதி செய்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

15 மாணவர்களுக்கு... ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 2 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடமும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் விண்ணப்பித்தவர்களில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 433 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 197.25 வரை வரிசையாக முதலில் உள்ள 15 மாணவர்கள் மட்டும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். படிப்பில் சேரவும் அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்குவோர்: விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 3 இடங்களுக்கான மாணவர்களை செவ்வாய் (ஜூன் 28), புதன் (ஜூன் 29) ஆகிய இரண்டு தினங்கள் அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு சான்றிதழ்களைச் சரிபார்த்து தேர்வு செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் 3 மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதியன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

ஜூலை 1 முதல் 6-ம் தேதி வரை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் அனைத்துப் பிரிவினருக்கு வரும் ஜூலை 1, 2 ஆகிய இரண்டு தினங்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவினரில் ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 198.75 வரை பெற்றுள்ள 550 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 1, 2) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் என வகுப்பு வாரியாக ஜூலை 6-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 197.75 வரை மொத்தம் 432 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 2, 4) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 65 மாணவர்கள் (ஜூலை 4 பிற்பகல் 2 மணி) அழைக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 339 மாணவர்கள் (ஜூலை 5) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 6-ல்.... தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினருக்கு ஜூலை 6-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 191.75 வரை உள்ள 261 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ல் தொடங்கி 188.00 வரை உள்ள 55 மாணவர்களும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 197.25 முதல் 185.25 வரை இடம்பெற்றுள்ள 23 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு

முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி எனும் அமைப்பு மிருகங்களை உயிரோடு அறுக்க தடை செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தது. முஸ்லீம்கள் மிருகங்களை அறுக்கும் ஹலால் முறையும் யூதர்கள் அறுக்கும் கோஷர் முறையும் மிருகங்களை உயிரோடு உள்ள நிலையில் அறுப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் கீழ் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேல் சபையில் நிறைவேறினால் இது சட்டமாக்கப்பட்டு விடும். ஆனால் டென்மார்க் நாட்டின் கிறிஸ்துவர்கள் மிருகங்கள் இறந்த பிறகு அறுப்பதுண்டு. இச்சட்டத்துக்கு நெதர்லாந்தின் 10 இலட்சம் முஸ்லீம்களும் 40,000 யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி தலைவர் மேரிஅன்னே தீம் “எங்கே மனித அல்லது மிருக சித்ரவதை ஆரம்பிக்கிறதோ அங்கே மத சுதந்திரத்தின் எல்லை முடிந்து விடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
inneram

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது. உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
DSC03051DSC03050

DSC03149
DSC03150
DSC03145
DSC03146

ம.ம.க. வை கண்டித்து சென்னை ஆர்ப்பாட்டத்தில் கொதித்து எழுந்த மக்கள் வெள்ளம் வீடியோ காட்சிகள் சில






திங்கள்

மாபெரும் கண்டனப்போர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் அருகில் செய்வாய் 28-6-2011 அன்று நடைபெறும் மாபெரும் கண்டனப்போர்  இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்!

சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்

சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும் என மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

"இந்தியாவின் சிறுபான்மையினர்: விவகாரங்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்' என்ற தலைப்பில் சென்னை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை சிறப்பு சொற்பொழிவாற்றிய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:

நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான சச்சார் கமிட்டி, இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு நிதி ஒதுக்குவது, திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த அறிக்கையில் சிறுபான்மையின சமூகத்தை பாதிக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறுபான்மையின சமூகங்கள் முழுவதும் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ரூ. 5 ஆயிரம் கோடி பட்ஜெட்டைக் கொண்ட சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்கள் கொண்டுவரப்படும்போது, ரூ. 65 ஆயிரம் கோடி பட்ஜெட் நிதியை கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட அதிக வரவு செலவு திட்டங்களைக் கொண்ட பிற துறைகளிடமிருந்து நிதி உதவியை பெற இயலாத நிலை ஏற்படும்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் வகையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகம், சம உரிமைகளுக்கான அமைச்சகமாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சச்சார் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுபோல், சம உரிமைகளுக்கான கமிஷன் அமைக்கப்பட்ட உடன், சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தை மாற்றுவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.

அப்போதுதான் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, பொருளாதார நிலையில் உயர முடியும்.

அதே நேரம் இஸ்லாமிய சமூகத்தினர், தங்களுடைய சமூகத்தின் வளர்ச்சியை குறித்து மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட சமூதாய நலனிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். லோக்பால் விவகாரம், விநாயக் சென் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் அமைதி காத்து வருவது ஏன்?

வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், இங்குள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும், அமைப்புகளும் உத்தரபிரதேசம், பிகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களை தொடங்க முன்வரவேண்டும்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தைப் பொருத்தவரை, துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்குமாறு, பல்கலைக்கழக ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அரசிடம் முறையிட்டிருப்பது தவறான முடிவு. சிறுபான்மை நிறுவனங்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு, தாங்களே தீர்வு காண வேண்டும். அரசியல் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.

கல்வி உதவித் தொகை உயர்வு: மேலும் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக ஒதுக்கப்பட்டுவந்த ரூ. 44 லட்சம் நிதி, வரும் கல்வியாண்டு முதல் ரூ. 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதுபோல் ஆராய்ச்சி (பிஎச்.டி) உதவித் தொகையை பெறும் சிறுபான்மையின மாணவர்களின் எண்ணிக்கையும் 750-லிருந்து 1,400-ஆக உயர்த்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் (எஸ்.ஐ.இ.டி.) தலைவர் மூசாராசா, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி தாளாளர் பைசூர் ரஹ்மான் சையத், கல்லூரி முதல்வர் ரௌசின் தாவூத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கை கொடுத்துக் காலை வாரிய காந்தி -வரலாறு

வரி கொடா இயக்கம் என்பது காந்தியின் வார்த்தைகளில் அரசுக்கு வரி கொடுக்காமல் இருப்பதாகும். ஆனால் தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பண்ணையார்களுக்கும் வரி கொடுக்க மறுத்தனர். இதைக் கேட்டவுடன் காந்தி துடிதுடித்து "எல்லா வரிகளும் ஜனவரி 22க்குள் கட்டப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவேன்'' என்று ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டித் தலைவருக்கு எழுதினார்.

உக்கிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்பால் மக்கள் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே காந்தியும் காங்கிரசும் திட்டமிட்டு அகிம்சை வழி ஒத்துழையாமை என நடத்திய கண்துடைப்புப் போராட்டங்களேகூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் பாதிக்கும் அளவு நடைபெற்றன. பிப்ரவரி 1922இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி வைசிராய் பின்வருமாறு லண்டனுக்குச் செய்தி அனுப்பினான்:

"நகர்ப்புறங்களில் கீழ்த்தட்டு வர்க்கங்கள் ஒத்துழையாமை இயக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் குறிப்பாக, அஸ்ஸாம், ஐக்கிய மாகாணம், வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபைப் பொறுத்தவரை அகாலிகள் போராட்டம் கிராமப்புற சீக்கியர்களைத் தழுவியுள்ளது. நாடு முழுவதும் முகமதிய ஜனத்தொகையில் பெரும் பகுதியினர் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்ததைவிட மிகப் பயங்கரத் தன்மை வாய்ந்த ஒரு குழப்ப நிலைக்கு இந்திய அரசு ஆயத்தமாகியுள்ளது.''

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் காந்தி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கை கொடுத்தார். ஒத்துழையாமை தனது கையை விட்டு நழுவுவதைக் கண்ட காந்தி அதை வாபஸ் வாங்க சரியான தருணத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1922 பிப்ரவரியில் வங்கத்தில் சௌரிசௌரா விவசாயிகள், தங்களது அமைதியான ஊர்வலத்தின்மீது தாக்குதல் தொடுத்துக் கண் மூடித்தனமாகத் துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்த போலீசாரைத் திருப்பித் தாக்கினர்; போலீசு நிலையத்திற்குத் தீ வைத்தனர். 22 போலீசாரைக் கொன்றொழித்தனர். உடனே காந்தியார், மக்கள் வன்முறையில் இறங்கிவிட்டதாகக் காரணம் காட்டி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார்; போராட்டத்தின் காலை வாரினார்.

1922 பிப்ரவரி 12ம் நாள் அவசரமாகக் கூடிய காங்கிரசு காரியக் கமிட்டி சௌரிசௌரா விவசாயிகள் "மனிதத் தன்மையற்ற முறையில்'' நடந்து கொண்டதாகச் சாடியது. "வன்முறை நிகழ்ச்சிகள் நடப்பதாலும், நாடு போதுமான அளவு அகிம்சை வழியில் இல்லை என்பதாலும் போராட்டம் நிறுத்தப்படுவதாக'' அறிவித்தது. அது மட்டுமா? "அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளைச் செலுத்துமாறு'' ஆணையிட்டது. மக்கள் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

1922 நெருக்கடி பற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்தும், காந்தி இயக்கத்தை வாபஸ் பெற்றுத் தங்களைக் காப்பாற்றினார் என்ற கண்ணோட்டமும் அப்போதைய பம்பாய் கவர்னரான லாயிட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுகிறது:

"அவர் (காந்தி) எங்களுக்குப் பெரும் திகில் உண்டாக்கி விட்டார். அவருடைய வேலைத் திட்டம் எங்கள் சிறைகளை நிரப்பிவிட்டது. மக்களை எப்போதும் கைது செய்து கொண்டே இருக்க முடியுமா என்ன? அதுவும் 3,19,000 பேர்களை! அவர் அடுத்த படியேறி வரி கொடுக்க மறுத்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்? அது ஆண்டவனுக்கே தெரியும்.''

"உலக வரலாற்றிலேயே காந்தியின் சோதனை மிகப் பிரம்மாண்டமானது. அது வெற்றிக்கு ஓரங்குல தூரத்தில் வந்துவிட்டது. அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள். காந்தி வேலைத் திட்டத்தை வாபஸ் வாங்கினார். நாங்கள் அவரைச் சிறையிலிட்டோம்.'' (ட்ரூ பியர்சனுக்கு அளித்த பேட்டி, ஆர்.பி. தத் எழுதிய "இன்றைய இந்தியா' எனும் நூலில் பக். 435)

அகிம்சையும், ஒத்துழையாமையும் காலனிய அடிப்படையைத் தகர்க்கும் போராட்டங்கள் எனக் கொள்ள முடியுமா? முடியாது. ஆயின் இதன் உண்மை நோக்கம் என்ன? போராட்ட உணர்வுகள் பொங்கி எழுந்து காலனிய ஆட்சியின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப ஆடிய நாடகங்களே இவை. பிரிட்டிசாரின் ஒத்துழைப்போடு காந்தி தயாரித்தளிக்கும் நாடகங்கள் கவர்ச்சிகரமான முறையிலே வானொலியிலும், பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது என்பது உண்மையே.

பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்க மறுப்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என மக்கள் புரிந்து கொண்ட அளவில் அது எப்போதுமே வன்முறையை எட்டிவிடும். மக்களைத் தழுவிய இந்த இயக்கங்கள் காந்தியின் கட்டுத் திட்டங்களை மீறிக் கைநழுவும் போது போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; நாடகத்தின் அடுத்த காட்சியாகக் காந்தி கைது செய்யப்படுவார்; உடனே காந்தியின் பால் மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு அவருடைய செல்வாக்கு மீண்டும் பெருகும்; சிறையிலிருக்கும் காந்தியார் போராட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்வார்; போராட்டம் "எல்லை மீறியதை'க் கண்டிப்பார்; மக்களின் உணர்வுகள் மந்தமாகிப் போராட்டங்கள் பிசுபிசுக்கும்; பிரிட்டிஷார் குதூகலிப்பர். மீண்டும் மக்கள் உணர்வு பெற்று போராட்டங்களில் சீறியெழும்போது, பிரிட்டிஷாரின் ஆசியோடு காந்தி சிறையிலிருந்து விடுதலையாவார். திசை திருப்பும் திருப்பணியைத் தொடங்கி வைப்பார். இப்படித்தான் மக்களை ஏய்க்கும் நாடகத்தை பிரிட்டிஷாரும் காந்தியும் காங்கிரசும் நடத்தி வந்துள்ளனர்.

(புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வெளியிட்ட ‘காந்தியும் காங்கிரசும் - ஒரு துரோக வரலாறு’ நூலிலிருந்து)

மனித குருதியின் மீது நிலைநாட்டப்படும் வளர்ச்சி பயங்கரவாதம்

இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் ஒரே முழக்கம் ’வளர்ச்சி’. பாசிசவாதிகள் பொதுவுடைமை வாதிகள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் ஒரே குரலில் முழங்குகின்றனர். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த இனப்படுகொலைக்கு தலைமை வகித்த மோடியும் வளர்ச்சியை பற்றி முழங்குகிறார்.

ஏழைகளின் பாங்காளான், தொழிலாளர்களின் தோழன் என கூறும் கம்யூனிஸ்டுகளும் வளர்ச்சியை பற்றித்தான் பேசுகிறார்கள். பாசிசத்திற்கு நண்பனாக சோசியலிசத்திற்கு பாதுகாவலனாக திகழும் நிதீஷ்குமாரும் வளர்ச்சியைப்பற்றித்தான் பேசுகிறார்.

நமது நாட்டில் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நடத்தப்படும் பைத்தியக்காரத்தனமான நாடகத்திற்கு அப்பாவி மக்களின் உயிர்களை பலிகொடுக்க கார்ப்பரேட் முதலைகளும், அவர்களுக்கு துணைபுரியும் ஆட்சியாளர்களும் தீர்மானித்துவிட்டார்கள் போலும். அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்களும் அதனை தொடர்ந்து நடைபெறும் மோதல்களும் இதனைத்தான் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து உருவான மோதல் சூழல் இதுவரை அடங்கவில்லை. குவாரி கம்பெனிகள் கங்கை நதியில் மணல் அள்ள தோண்டுவதற்கு எதிராக நிகமானந்தா என்ற சாது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மரணித்த பிறகும் உத்தரகாண்டின் பா.ஜ.க அரசு பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஒரிஸ்ஸாவில் கோவிந்த் பூரில் போஸ்கோ இரும்பு உருக்காலைக்கு எதிராக மக்கள் போராட்டம் எந்த நேரத்திலும் வெடித்துக் கிளம்பும் சூழல் உருவாகியுள்ளது.

இவை அனைத்தையும் மிஞ்சும் விதமாக மேற்குவங்காள மாடல் வளர்ச்சி பயங்கரவாதம் அண்மையில் ’நல்லாட்சியின் சின்னமாக’ கொண்டாடப்படும் நிதீஷ்குமாரின் பீகாரில் இம்மாத துவக்கத்தில் நடந்தேறியது.

அங்கு துணை முதல்வராக பதவி வகிக்கும் சுசில் குமார் மோடியின் ஆசியுடன் கார்ப்பரேட் குத்தகையின் வளர்ச்சி ரதம் நிரபராதிகளான மக்களின் நெஞ்சின் மீது தேரோட்டம் நடத்தியது.

ஆறுமாத பிஞ்சுக்குழந்தை, கர்ப்பிணியான பெண்மணி உள்பட 6 பேரை அநியாயமாக சுட்டுத்தள்ளிவிட்டு நிதீஷ்குமாரின் அரசு ‘ஆரோ சுந்தரம் இண்டர்நேசனல் ப்ரைவட் லிமிட்டட்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு மக்கள் பயன்படுத்தும் சாலையை தாரைவார்க்க தீர்மானித்தது. பெயரளவில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டதை தவிர வேறு எதனையும் செய்ய நீதீஷ்குமார் முன்வரவில்லை.

விசாரணை முடியும்வரை பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழஙகத் தேவையில்லை என தீர்மானித்துவிட்டு சீனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நிதீஷ்குமார். ராம்தேவ் மற்றும் அன்னா ஹஸாரேவுடன் கார்ப்பரேட் ஊடகங்கள் கட்டிப்பிணைந்த நாட்களில் பட்டப்பகலில் நடந்த அரச பயங்கரவாதத்தை ’ஊடக சூட்சித்திறன்’ மூலம் மூடி மறைத்தார் நிதீஷ்குமார்.

கார்ப்பரேட் குத்தகைகளின் வளர்ச்சிக்கு ராஜபாதையை உருவாக்க நொய்டாவிலும், ஒரிஸ்ஸாவிலும் ஆட்சியாளர்கள் வலுக்கட்டாய நடவடிக்கைக்கு தயாரானார்கள். ஆனால் பீகாரின் அராரியா மாவட்டத்தின் போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் பஜன்பூர் கிராமவாசிகளின் நடமாடும் சுதந்திரத்திற்கே தடை விதித்து கார்ப்பரேட் குத்தகைகளை பாதுகாக்க அரசு அவசரம் காட்டியது.

பீகார் இண்டஸ்ட்ரியல் ஏரியா அதாரிட்டி 2009-ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்த 35 ஏக்கர் நிலத்தில் 130 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கும் தனியார், தொழிற்சாலை இரண்டு கிராமங்களுக்கு இடையேயான முக்கிய சாலையை அடைத்துவிட்டு நடத்திவரும் கட்டிடப்பணிகள் தாம் பிரச்சனைகளுக்கு காரணமானது.

அருகிலுள்ள கிராமங்களான பஜன்பூரையும், ராம்பூரையும் இணைக்கும் முக்கிய சாலையை வளைத்து கடந்த டிசமபர் மாதம் தனியார் நிறுவனம் நிர்மாண பணிகளை துவக்கியதைத் தொடர்ந்து முந்தைய சாலைக்கு மாற்றுவழிச் சாலை என்ற குறைந்த பட்ச கோரிக்கையை முன்வைத்து இரு கிராமவாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் 1-ஆம் தேதி மாற்று வழியை ஏற்பாடு செய்கிறோம் என வாக்குறுதி அளித்த தனியார் நிறுவனம் அதனை நிறைவேற்றாமல் தொடர்ந்து நிர்மாணப்பணிகளை நடத்திவந்ததால் கிராமவாசிகள் மீண்டும் தனியார் நிறுவனத்தின் வளாகத்திற்கு அருகே போராட்டத்தை துவக்கினர்.

அவர்கள் மீது தான் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள் என குற்றம் சாட்டி போலீஸ் சரமாரியாக கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. ஆறுமாதம் பருவமுடைய பிஞ்சுக்குழந்தை ஸாஹில் அன்ஸாரி, கர்ப்பிணியான இருபத்தைந்து வயது ஸஸ்மினா ஹாத்தூன், பத்தொன்பது வயதான முஸ்தஃபா அன்ஸாரி, இருபத்திரண்டு வயதான முக்தார் அன்ஸாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

நிதீஷ்குமாருடன் ஆட்சியை பங்கிடும் பா.ஜ.கவின் மேலவை உறுப்பினரான அசோக் அகர்வாலின் மகன் சர்ச்சைக்குரிய தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். போலீசாரின் அராஜகத்திற்கு அசோக் அகர்வாலும் உடந்தையாக இருந்துள்ளார். துணைமுதல்வர் சுசில்குமார் மோடியின் உறவினர் என்பதால் அவருக்கு தெரிந்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஊடகங்கள் காட்டிய மெளன பயங்கரவாதம் மிகவும் வெட்ககேடானதாகும். ஏழ்மையான சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் ஒரு கிராமத்தில் ஜூன் 3-ஆம் தேதி நடந்த போலீஸின் அராஜக வெறியாட்டத்தை சமூக ஆர்வலர்களான பாலிவுட் இயக்குநர் மகேஷ்பட், ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிக்கொணர்ந்ததன் மூலமே தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை ஊடகங்களுக்காக ஒதுக்கிவைக்கிறார் நிதீஷ்குமார். 2010 செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் மட்டும் 1,012,13,999 ரூபாய் மதிப்பிலான விளம்பரங்களை பீகார் அரசிடமிருந்து கைப்பற்றிய ’தைனிக் ஹிந்துஸ்தான்’ என்ற ஹிந்தி பத்திரிகையிலிருந்து ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உள்ளிட்ட தேசிய பத்திரிகைகளும், உருது பத்திரிகைகளும் நிதீஷின் வாடிக்கையாளர்கள் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இவ்வாறிருக்க் நிதீஷின் இமேஜை கெடுக்க ஊடகங்கள் முயற்சி மேற்கொள்ளாது என்பதற்கான தெளிவான ஆதாரம் தான் போர்ப்ஸ்கஞ்சில் மிருகத்தனமான போலீஸ் நடவடிக்கையை குப்பைக்கூடையில் தூக்கி எறிந்த ஊடகங்களின் செயல் அமைந்துள்ளது. இத்தகையதொரு நிர்ணாயக கட்டத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் நிதீஷின் முன்னால் பிரதி உபகாரமாக வளைந்துகொடுத்தது.

வளர்ச்சியை நோக்கிய மரண பாய்ச்சலில் மக்களுக்கும், அவர்களின் உயிர், உடைமைகளுக்கும் எவ்வித மதிப்பும் இல்லை என்பதைத்தான் போர்ப்ஸ்கஞ்ச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. கார்ப்பரேட் முதலைகளும், தரகு முதலாளிகளும், வளர்ச்சி மாயாஜாலத்தின் பங்குதாரர்களாக மாறிவிட்ட ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் கோடிகள் புரளும் வர்த்தகத்தில் கமிஷனை பெறுவதற்கு சாதாரண மக்களின் உயிரை குடிக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை பீகாரில் நடந்த வளர்ச்சி பயங்கரவாதம் எடுத்தியம்புகிறது.

இது துவக்கமல்ல. முன்பு நந்திகிராமிலும், சிங்கூரிலும் நடந்தேறியது தான். இது போர்ப்ஸ்கஞ்சுடன் முடிந்துவிடக்கூடியதும் அல்ல. நாட்டின் முன்னேற்றம், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் ப்ராண்ட் அம்பாசிடர்களாக வேடமிட்டு அலையும் வளர்ச்சியின் பிதாமகன்களுக்கு தங்களது பேராசைகளை விதைக்கவும், அறுவடை செய்யவும் நிலம் மட்டும் போதும். அதனை பண்படுத்திட மரங்களை அல்ல மனிதர்களின் மண்டைகளை உடைத்தும் தாங்கள் நினைத்தைதை அடைய முயல்வார்கள் என்பதை புரிந்துக்கொள்ள இனியும் வேறு சம்பவங்கள் நடைபெறவேண்டுமா?

அ.செய்யது அலீ.

சனி

மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக! (2:222)

இந்த வசனத்தில் (2:222) மாதவிடாய் நேரத்தில் மனைவியரை விட்டு கணவர்கள் விலகியிருக்குமாறு கூறப்படுவதால் இதைத் தவிர அப்பெண்கள் தொழுகை, நோன்பு உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்யலாம் என்று சிலர் விளங்கி வைத்துள்ளனர். இது தவறாகும்.

திருக்குர்ஆனின் 4:43 வசனத்தில் தொழுகையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது குளிப்பு கடமையானவர்களாக நீங்கள் இருந்தால், குளித்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறான். இது போன்ற கருத்தை 5:6 வசனத்திலும் கூறுகிறான்.

தொழுகை, தூய்மையுடன் நிறை வேற்றப்பட வேண்டிய ஒரு வணக்கம் என்பதை இதிலிருந்து அறியலாம். மாதவிடாய் பற்றிக் குறிப்பிடும் மேற் கண்ட வசனத்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தூய்மையற்று இருக்கிறார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இவ்விரு வசனங்களையும் ஒன்றி ணைத்துப் பார்க்கும் போது மாதவிடாயின் போது தொழக் கூடாது என்பதை யாரும் அறிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டதோ அதற்கு விடை யளிக்கும் விதமாகவே இவ்வசனம் அருளப்பட்டது. மாதவிடாய் சமயத்தில் வணக்க வழிபாடுகள் செய்யலாமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அது குறித்து பதிலளிக்கும் வகையில் இறை வசனம் அருளப்பட்டிருக்கும். மாத விடாய் நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அதற்கு மட்டும் இவ்வசனத்தில் நேரடியாக விடை யளிக்கப்பட்டது. (நூல்: முஸ்லிம் 455)

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் மிகவும் இழிவாக, நடத்தப்பட்டு வந்தனர். வீட்டுக்குள் பெண்களைச் சேர்க்க மாட்டார்கள். தனியாக ஒதுக்கி விடுவார்கள். இந்த நேரத்தில் பெண்களைத் தொட மாட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொட்ட பொருள்களையும் தொட மாட்டார்கள். இந்த மூட நம்பிக்கைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை.

தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை தவாஃப் செய்வது, பள்ளிவாச லில் நுழைவது, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ஆகிய ஐந்து காரியங்கள் மட்டுமே அவர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன.மற்ற விஷயங்களில் எல்லாப் பெண்களையும் போல் அவர்களும் எல்லாப் பணிகளிலும் ஈடுபடலாம்.

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் சுவாமி அஸிமானந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்களும், அதுத்தொடர்பான உபகரணங்களும் வாங்குவதற்காக இத்தொகை வழங்கப்பட்டது என குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் முன்பதிவுச்செய்யப்படாத 4 பெட்டிகளில் குற்றவாளிகள் வெடிக்குண்டுகளை ஸ்தாபித்துள்ளனர். 13 மற்றும் 14-ஆம் நம்பர் பெட்டிகளில் வெடிக்குண்டு வெடித்துள்ளது. 15-ஆம் நம்பர் பெட்டியில் குண்டுவெடிப்பதற்கு முன்பு செயலிழக்கச்செய்யப்பட்டது.-குற்றப்பத்திரிகை கூறுகிறது.

அஸிமானந்தா, ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா, சுனில் ஜோஷி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கொலை, கொலை முயற்சி, தேசத்துரோகம், குற்றகரமான சதித்திட்டம் ஆகிய பிரிவுகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெடிக்காத குண்டுகள் இருந்த சூட்கேஸின் உறை இந்தூரில் கோத்தாரி மார்க்கெட்டில் அபிநந்தன் பேக் செண்டரில் வாங்கியது கண்டறியப்பட்டதுதான் இந்த வழக்கில் துப்பு துலங்குவதற்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

எம்.கே பேக் செண்டரில் இக்பால் ஹுஸைன் என்பவர் இந்த உறையை தைத்திருந்தார். உறையின் மீது அப்போலோ என கையால் எழுதப்பட்டிருந்தது.ஆர்.டி.எக்ஸ், டி.என்.டி, ஸல்ஃபர், பெட்ரோல் ஆகிய அதீத சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் வெடிக்குண்டை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்ஜோதாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டும் என்பது அஸிமானந்தாவின் லட்சியமாகும்.ஹிந்து கோயில்களில் போராளிகள் தாக்குதல் நடத்தினார்கள் எனக்கூறி கோபமடைந்த அஸிமானந்தா தனது உணர்வை சுனில்ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர், பரத்பாய் ஆகியோருடன் பகிர்ந்துக்கொண்டார்.

’குண்டிற்கு பதில் குண்டு’ என்பது அஸிமானந்தாவின் கொள்கையாகும்.2006 வாரணாசி குண்டுவெடிப்பிற்கு பிறகு அதற்கு பழிவாங்குவதற்காக சுனில்ஜோஷியும், அஸிமானந்தாவும் தீர்மானித்துள்ளனர்.இதற்காக உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஹிந்து தலைவர்களை கண்டு அவர்களிடம் உதவி கோருவதற்காக சுனில்ஜோஷி, பரத்பாய் ஆகியோருக்கு கட்டளையிட்டு பயணச்செலவாக 25 ஆயிரம் ரூபாயை அஸிமானந்தா அளித்துள்ளான்.

2006 ஆம் ஆண்டு மே மாதம் ஜோஷி அஸிமானந்தாவை சந்தித்து தனது பயண விபரங்களை ஒப்படைத்துள்ளான்.பரத் பாய் முதலில் ஜார்கண்ட் சென்றுள்ளான்.அங்குவைத்து தேவேந்திரகுப்தா பிஸ்டல், வெடிப்பொருட்கள், சிம்கார்டு ஆகியவற்றை வழங்கியுள்ளான்.பின்னர் பரத் பாய் ஆக்ரா மற்றும் கோரக்பூருக்கு சென்றுள்ளான்.

அதன் பின்னர் நாக்பூருக்கு சென்று இந்திரேஷ்குமாரை சந்தித்துள்ளான்.அங்குவைத்து வெடிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக இந்திரேஷ்குமார் ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளான். பின்னர் குஜராத் மாநிலம் வல்ஸாதில் பரத் பாயின் வீட்டில் வைத்து கூட்டம் நடந்தது.2006 ஜூன் மாதம் சதித்திட்டம் தீட்டிய முக்கிய கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அஸிமானந்தா, பிரக்யாசிங் தாக்கூர், டாங்கே, கல்சங்க்ரா, லோகேஷ் சர்மா, அமித் சவுகான், பரத்பாய் ஆகியோர் பங்கேற்றனர்.மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அஸிமானந்தா உத்தரவிட்டுள்ளார்.

ஹிந்துக்கள் கொலைச்செய்யப்படும் வேளையில் அரசு சம்ஜோதா எக்ஸ்பிரஸை ஓட்டுகிறது.ஆதலால், அந்த ரெயிலில்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டும் என ஜோஷி கூறியுள்ளான்.குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான பொறுப்பையும் ஜோஷி ஏற்றுக்கொண்டுள்ளான்.குண்டுவெடிப்பு நிகழ்ந்து இரண்டு தினங்களுக்குள் அஸிமானந்தா, ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் குஜராத்தில் சபரிடாம் ஆசிரமத்தில் மீண்டும் கூடியுள்ளனர்.யார் வெடிக்குண்டை தயாரித்தார்? என அஸிமானந்தா கேட்டுள்ளான்.’அது ஆசிரியரின்(டாங்கே) வேலையாகும்’ – என ஜோஷி பதிலளித்துள்ளான்.

2007-ஆம் ஆண்டு சுனில்ஜோஷி மக்கா மஸ்ஜிதிலும், இதர இடங்களிலும் கூடுதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பணம் கேட்டதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும் பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும் சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும்இ அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري ومسلم).
காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி) ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி முஸ்லிம்).

நான்கு மாதங்கள் புனிதமானது என்றும் அவைகள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகிறது. எனவே இம்மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாகும். இம்மாதங்கள் புனிதமானவைகள் என்று கூறி அல்லாஹ்வும் ரஸுலும் காட்டித்தராத வணக்க வழிபாடுகளை அரங்கேற்றுவது கூடாது.
عَنْ مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود أحمد).
முஜீபதுல் பாஹிலிய்யா நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? அறத்கு நபியவர்கள் நீங்கள் யார்? நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள் கேட்டார்கள்.

நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர் பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன் ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்’ (அபூதாவுத் அஹ்மத்).

இந்த ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைக்க முடியுமென்பது விளங்குகிறது.

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி உள்ள பலவீனமான ஹதீஸ்கள்:
إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும் அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.’

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தனது ‘அல்இலலுல் முதனாஹியா’ என்ற கிரந்தத்தில் இந்த ஹதீஸின் அற்விப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ‘அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்’ யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ‘ஸாததிப்னு அபிர்ரகாத்’ என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்) மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும் ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை’

இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).

ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்:
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம் ஷஃபான் எனது மாதம் ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205 206).
فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار
‘ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.’

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப் பக்கம்: 17).
رجب شهر الله الأصم،من صام من رجب يوماً إيماناً واحتساباً استوجب رضوان الله الأكبر
‘ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும்இ நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.’

(தப்யீனுல் அஜப் பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது பக்: 439).
من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار
‘எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).
من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ……قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب
‘ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது செல்வங்களையும் அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன் எந்த வித கேள்வி கணக்கும் தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20).
((من صام من رجب وصلى فيه أربع ركعات …. لم يمت حتى يرى مقعده من الجنة أو يرى له
‘ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால்இ அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல் அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21).
إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة
‘நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்’

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206இ 207). தப்யீனுல் அஜப் பக்: 26).

அன்றைய காஃபிர்களிடம் ரஜப் மாதத்திற்கு இருந்த அந்தஸ்து:

அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனிதமானதாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனலாகும். நாம் மேலே குறிப்பிட்ட ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபியவர்கள் ‘ரஜப் முழர்’ என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். காரணம் முழர் ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விடயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பது ஒரு காரணமாகும்.

இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தனர் அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அதீரது ரஜப் என்றால் என்ன?

அதீரது ரஜப் என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்கள் அளித்துள்ளனர்:

‘அபூ உபைதா குறிப்பிடும் போது நிச்சயமாக ‘அதீரத்’ என்பது ரஜபுடன் தொடர்புடையதாகும். நெறுக்கத்தை பெறுவதற்காக ரஜப் மாதத்தில் அறுக்கப்படும் ஒரு குர்பானியாகும். அறியாமை காலத்தில் அரபுக்கள் ஏதாவது ஒரு தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ச்சை செய்து அது நிறைவேறிவிடுமானால் நான் இவ்வாறு இவ்வாறு ரஜப் மாதத்தில் ஒரு ஆட்டை அறுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று கூறுவது தான் அதீரத் என்கிறார்.’ (கரீபுல் ஹதீஸ் 1: 195 196).

அபூதாவுத் குறிப்பிடும் போது: ‘அதீரத்’ என்பது ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்.

அல்கத்தாபி குறிப்பிடும் போது: ‘அல் அதீதர்’ என்பது ஹதீஸிலிருந்து விளங்குவது அது ரஜப் மாதம் பலியிடப்படும் ஒரு ஆடாகும்.

இதில் சரியான கருத்து: ‘அதீரத்’ என்பது அறியாமைக் கால மக்கள் எந்த வித நேர்ச்சையுமின்றி நிறைவேற்றும் ஒரு குர்பானியாகும். அழ்ஹாவில் நிறைவேற்றும் உழ்ஹியாவை போன்று இவர்களிடம் இந்த நடை முறை இருந்து வந்தது. அவர்களில் நேர்ச்சைவைத்து அதை நிறைவேற்றுபவர்களும் இருந்தனர்.

அதீரத்தின் சட்டமென்ன?
عَنِ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ وَالْعَتِيرَةُ فِي رَجَبٍ (البخاري ومسلم).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பரஅ’ என்பதும் ‘அதீரத்’ என்பதும் இல்லை. பரஅ என்றால் ஒட்டகத்திற்கு கிடைக்கும் முதல் குட்டியை தங்களது கடவுள்களுக்காக அறுத்துப் பலியிடுவதாகும். அதீரத் என்றால் ரஜப் மாதத்தில் (ஒரு ஆட்டை அறுத்து பலியிடுவதாகும்) நிறைவேற்றப்படும் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புஹாரி முஸ்லிம்).

‘அதீரத்’ விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். இதில் சரியான கருத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்: அதீரத் என்பதை நிறைவேற்றுவதற்கு சில ஹதீஸ்களில் அனுமதி இருந்தாலும் நாம் மேற்குறிப்பிட் ஹதீஸின் மூலம் அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. அது தடுக்கப்பட்டு விட்டது. மேற்சொன்ன ஹதீஸின் மூலம் அது மாற்றப்பட்டு விட்டது என்பதற்குரிய காரணங்கள்: மேற்சொன்ன ஹதீஸை அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களாகும். அவர்கள் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு கைபர் வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதீரத் என்ற இந்த வழக்கம் அறியாமைக் காலம் முதல் உள்ள ஒன்றாகும்.

பரஅ அதீரத் என்பது மாற்றப்பட்டு விட்ட ஒன்று என்று பெரும் பாலான அறிஞர்களின் கருத்தென காலி இயாழ் குறிப்பிடுவதாக இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள். (அல்மஜ்மூஃ 8: 446).

இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி (ரஹ்) மற்றும் இமாம் இப்னுல் முன்திர் (ரஹ்) அவர்களும் அதீரத் என்பது தடுக்கப்பட்ட ஒன்று நிறைவேற்றக்கூடாத ஒன்று என குறிப்பிடுகின்றனர்.

ரஜப் மாதத்தை விஷேச நோன்பு தொழுகை உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்:

ரஜப் மாதத்தில் விஷேச நோன்பு தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை மற்றும் அதிகமான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் என்பதை நாம் ஆரம்பத்திலே சுற்றிக்காட்டினோம். எனவே இம்மாத்தில் விஷேச நோன்புக்கோ தொழுகைக்கோ எந்த ஆதாரமுமில்லை.

இப்னு அபீ ஷைபா தனது முஸன்னப் எனும் கிரந்தத்தில் குறிப்பிடும் போது ‘ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள் மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும்.’ (முஸன்னப் 3: 203). ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் பார்க்க: (இர்வாஉல் அலீல் 4:113).

அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்’

(அல்முஃனி 3: 167 அஷ்ஷரஹுல் கபீர் 2: 52 மஜ்மூஉல் பதாவா 25: 291).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: ‘ரஜப் மாதத்தை வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பதென்பது நூதனமான ஒரு நடை முறையாகும் அதை விட்டு விலகி இருப்பது அவசியமான ஒன்றாகும். ரஜப் மாதத்தில் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பது வெறுக்கத்தக்க ஒரு விடயம். இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறஞர்களும் இதே கருத்தில் உள்ளனர்.’ (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2: 624 625).

முஸ்னத் மற்றும் ஏனைய கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபி மொழியில்இ நபியவர்கள் புனிதமான மாதங்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். புனிதமான மாதங்கள்: ரஜப் துல்கஃதா துல்ஹிஜ்ஜா முஹர்ரம். எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) 25: 290 291).

ரஜப் மாதத்தில் உம்ரா செய்யலாமா?
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجَبٍ ழூ(البخاري).
உர்வதிப்னு ஸுபைர் (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்: ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை.’ (புஹாரி).

‘அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் உம்ரா செய்தார்கள் என்று கூறிய போது அதை ஆயிஷா (ரலி) அவர்கள் நிறாகரித்தார்கள். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மறுப்பேதும் தெரிவிக்காது அமைதியாக இருந்தார்கள்’ (புஹாரி முஸ்லிம்).

ஒரு சிலர் ரஜப் மாத்தில் உம்ரா செய்வது சிறப்பிற்குரிய காரியம் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நாம் மேற்குறிப்பிட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து நபியவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இதுவும் ஒரு பித்ஆவாகும்.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும் பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை.

மிஃராஜ் எந்த வருடம் நிகழ்ந்தது என்பதிலே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன. அது குறிப்பாக இந்த ஆண்டில் இந்தத்திகதியில் நிகழ்ந்தது என ஆதாரம் இருந்தாலும் அதை சிறப்பிப்பதற்கு நபியுடைய வழிகாட்டல் இல்லாமல் எவருக்கும் சிறப்பிக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் செய்வாரெனில் அது தெளிவான பித்அத்தாகும் அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைப்பதற்கு பதிலாக அவனது கோபம் தான் கிடைக்கும்.

மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர் ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும்.

‘நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி முஸ்லிம்).

அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி செய்யப்படும் அமல்களுக்கு மாத்திரம் தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தராத விடயங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த பெறுமதியுமில்லை அவைகள் நிராகரிக்கப்படும். எனவே பித்அத்துக்களை விட்டு எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருப்போமாக.
dharulathar

வியாழன்

எம்.பி.பி.எஸ். அனைத்துப் பிரிவு கட் - ஆஃப் 199-சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு?



தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கான (ஓ.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பி.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களில் பலர், பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்காத காரணத்தால் அனைத்துப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-லிருந்து 199-ஆகக் குறைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டுடன் (கட்-ஆஃப் 197.5) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அனைத்துப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆக அதிகரித்துள்ளது.

இதே போன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் இந்த ஆண்டு 197.75-ஆக (கடந்த ஆண்டு 195.50) அதிகரித்துள்ளது.

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.சி.--199.00



பி.சி.--197.75

பி.சி. (எம்)--196.50

எம்.பி.சி./டி.சி.--196.25

எஸ்.சி.---192.00

எஸ்.சி. (ஏ)--188.50

எஸ்.டி.--188.50

ஓ.சி.-அனைத்துப் பிரிவினர்; பி.சி.-பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; பிசிஎம்-பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர்; எம்.பி.சி.-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.-தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.ஏ.-தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர்; எஸ்.டி.-பழங்குடி வகுப்பினர்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற ஆர்வம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அதிக கட்-ஆஃப் மதிப்பெண் (அனைத்துப் பிரிவினர் கட்-ஆஃப் 199) காரணமாக சென்னை கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அரிதாகியுள்ளது. எனினும் வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 எடுத்துள்ள மாணவர்களுக்கு சென்னை கல்லூரிகள் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சென்னை மருத்துவக் கல்லூரி: 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட "எம்எம்சி' எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பது ஏராளமான மாணவர்களின் கனவாக உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 44 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 37 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 5 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 28 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 21 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 4 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு சென்னை மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 140 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி: 1838-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 39 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 34 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 4 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 26 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 19 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 4 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 127 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி: 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 26 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 23 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 3 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 17 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 12 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 3 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

ரேங்க் பட்டியலில்...எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கான மொத்த இடங்கள் 512. இந்த 512 இடங்களில் இடம்பெற்றுள்ள முற்பட்ட வகுப்பினர் (எஃப்.ஓ.சி.)-45 பேர்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)-342 பேர்; பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பி.சி.எம்.)-17 பேர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (எம்.பி.சி.) சேர்ந்தவர்கள்-91 பேர்; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-14 பேர்; தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர் (எஸ்.சி.ஏ.)-2 பேர்; பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) - 1 மாணவர்;

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்றிலும் மொத்தம் 352 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்துப் பிரிவினருக்கும் உரிய இடங்கள் 512-ஐ, சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 352-உடன் ஒப்பிட்டாலே கடும் போட்டி இருப்பது தெளிவாகி விடும்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய பாடங்களில் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ 66 மாணவர்கள் பெற்றுள்ளதால், சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 44 அனைத்துப் பிரிவினர் இடங்களும் ரேங்க் பட்டியல் அடிப்படையில் வரிசையாக நிரம்பி, மீதமுள்ள 22 பேருக்கு வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.75-ல் மட்டும் 69 மாணவர்கள் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199.50-ல் 114 பேர் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ல் மட்டும் 120 பேர் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199-ல் 147 மாணவர்கள் உள்ளனர்.

இத்தகைய கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி காரணமாக சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகள் ஏதாவது ஒன்றில் வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைக்க கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஐ பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களை காக்க புதிய சட்டங்கள்

கல்வி, வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்டவைகளில் சிறுபான்மையின மக்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர அரசாங்கத்திடம் முன் மாதிரி பட்டியல் தயாராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.


இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறுபான்மையின மக்களையும் அவர்களது உரிமைகளையும் காப்பதற்காக நிறுவப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து நடப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வரை அபராதமும், 3 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டத்தை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கவும் இந்த கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த முன் மாதிரி சட்டபடிவங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைச்சரவை மூலம் சம உரிமை கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள், சச்சார் கமிட்டி வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகவும், தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்படும் முஸ்லிம் மக்கள் தங்களது அடிப்படை வசதிகளான கல்வி, வேலை மற்றும் நிலம் போன்றவைகளில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கொண்டுமே இந்தியா முழுவதும் நிறுவப்பட உள்ளது என்றும் செய்தியாளர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்,அருளாளனிடம் சிறப்போம்

இந்த உலகில் நபிமார்கள் என்று சொல்லப்படும் இறைவனின் தூதர்கள் செய்த இஸ்லாமியப் பிரச்சாரத்தை நாமும் தினமும் செய்ய வேண்டும் அந்த பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துக் கொள்வது அல்லாஹ்வைப் பற்றிய பிரச்சாரமாகும்.
 
இன்றைக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் மாற்றுமத அன்பர்களானாலும், அல்லது  இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு திரியும் அதிமான முஸ்லீம் பெயர் தாங்கிகளாக இருந்தாலும் இஸ்லாத்தை சரி வர புரியாததற்காண முக்கிய காரணம் இஸ்லாம் கூறும் கடவுல் கொள்கையை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.


அந்தக் கடவுல் கொள்கைளை அவர்கள் சரியாக அறிந்து கொண்டால் தமது வாழ்வில் வெற்றி பெருவது மிகவும் சுலபமாகிவிடும் என்பதை அறியாதுள்ளார்கள் என்பதே மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.

இதன் காரணத்தினால் தான் இஸ்லாம் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை ஒரு முக்கிய விஷயமாக நமக்கு எடுத்து சொல்கிறது.




உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர்.(22:67)

உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!(28:87)

அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும் அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.அவன் பக்கமே அழைக்கிறேன்.மீளுதலும் அவன் பக்கமே உள்ளது என்று கூறுவீராக!(13:36)

இதுவே எனது பாதை நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.அல்லாஹ் தூயவன் நான் இணை கற்பிப்பவன் அல்லன் என்று (முஹம்மதே!)கூறுவிராக!(12:108)

அல்லாஹ் நபி(ஸல்)அவர்களுக்கு இடக்கூடிய கட்டளைகளில் மிக முக்கியமான ஒன்றாக இதனை சொல்லிக் காட்டுகிறான்.அதாவது நபியவர்கள் செய்த முழுமையான பிரச்சாரத்தைப் பற்றி குறிப்பிடும் போது நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.


அதாவது இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதென்றாலே அது அல்;லாஹ்வைப் பற்றிய பிரச்சாரம் தான் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் படி மேற்கண்ட வசனத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் உணர்துகிறான்.

நபியவர்களை உலகுக்கு அனுப்பியதன் நோக்கம்.

அல்லாஹ் இந்த உலகத்திற்கு நபி(ஸல்)அவர்களை அனுப்பியதன் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

நபியே!(முஹம்மதே!)உம்மை சாட்சியாகவும்,நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும்,ஒளி வீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.(33:45,46)
நபியவர்களை அல்லாஹ் ஐந்து விஷயங்களுக்காக இந்த உலகுக்கு அனுப்பியதாக சொல்கிறான்.

1.சாட்சியாளராக.

2.நற்செய்தி கூறக்கூடியவராக.

3.எச்சரிக்கை செய்யக் கூடியவராக.

4.அல்லாஹ்வின் விருப்பப் படி அவனை நோக்கி அழைப்பவராக.

5.ஒளி வீசும் விளக்காக.

இந்த ஐந்து விஷயங்களில் நான்காவதாக அல்லாஹ்வின் விருப்பப் படி அவனை நோக்கி அழைக்கக் கூடியவராக நபியை அனுப்பியிருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அல்லாஹ்வின் இந்தக் கட்டளையில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன.அதாவது அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க வேண்டும் என்பது முதலாவது.இரண்டாவது அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் போது நபியாக இருந்தாலும் தன்னிச்சையாக அல்லாஹ்வைப் பற்றி எதையும் கூறி அவன் பக்கம் அழைக்கக் கூடாது அவன் தன்னைப் பற்றி எதனை விரும்புகிறானோ,தன்னைப் பற்றி தனது தூதருக்கு எதனை கூறியுள்ளானோ அவைகளைக் கூறித்தான் அழைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?

இந்தக் கேள்விக்கு அல்லாஹ் மிகத் தெளிவாக பதில் தருகிறான்.

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!(3:110)

அனைத்து மக்களுக்கும் நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து,அல்லாஹ்வை நம்ப வேண்டும் இந்தக் காரணத்திற்காகத்தான் அல்லாஹ் நம்மை மிகச் சிறந்த சமூகமாக சிலாகித்துச் சொல்கிறான்.

அதே போல் மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கமாக அதே அத்தியாயத்தில் இன்னோர் இடத்தில் மிக அழகாக அல்லாஹ் கூறுகிறான்.

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(3:104)

அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்.

அல்லாஹ்வை நோக்கி(மக்களை)அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்?(41:33)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை) பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப் பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது.(முஸ்லிம் : 4831)

பிரச்சாரத்திற்கு பிரத்தியேகமான நேரமா?

இன்று நம்மில் அதிகமானவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துப் பிரச்சாரம் செய்வதென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களை ஒன்று சேர்த்து பயான் ஒன்றை செய்தால் அதுதான் பிரச்சாரம் என்று நினைகிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பொருத்தவரை அதற்கெண்று இடமோ,நேரமோ தேவையில்லை கிடைக்கும் நேரத்தை கிடைக்கும் இடத்தில் பயண்படுத்த வேண்டும். அப்படித்தான் நபிமார்களின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

நபி நூஹ்(அலை)அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது நபி நூஹ் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்டுகிறான்.

என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும் பகலிலும் நான் அழைத்தேன் என்று அவர் கூறினார்.(71:05)

மேற்கண்ட வசனத்திலிருந்து நபி நூஹ் அவர்களின் பிரச்சாரம் நேரத்தை குறி வைத்து செய்யப் செய்யப்பட்டதல்ல மாறாக கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இரவு,பகல் என்று கூட பார்க்கவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது.

சிறையிலும் சீரான பிரச்சாரம்.

பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்த நபி யூசுப்(அலை)அவர்கள் கூட இடத்தை குறி வைக்காமல் தான் சிறையில் இருந்தாலும் பிரச்சாரம்; செய்வதற்கு அது தடை கல்லாக ஆகிவிடக் கூடாது என்பதால் அங்கும் தனது இறைவனின் பக்கம் அழைப்பதை தொடர்ந்தார்கள்.

என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள்(இருப்பது)சிறந்ததா? அல்லது அடக்கியாலும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்(இருப்பது சிறந்ததா?)வா(12:39)

எப்படி பிரச்சாரம் செய்வது?

இன்றைய காலத்தில் எத்தனையோ பேர் பிரச்சாரத்தின் யுக்கி தெரியாமலும்,நபிமார்களின் பிரச்சார முறையைப் புரியாமலும் தாங்கள் நினைத்த விதத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் எதை எல்லாமோ செய்வதற்கு எத்தனிக்கிறார்கள்.

ஆனால் பிரச்சாரத்திற்கான அழகிய முறையை அல்லாஹ் மிக இலேசான முறையில் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.

விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விளகியோரை அறிந்தவன் நேர்வழி பெற்றோறையும் அவன் அறிந்தவன்.(16:125)

அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய கட்டளைகளைப் பற்றியும் நாம் பிரச்சாரம் செய்கின்ற போது விவேகத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.ஆனால் இன்று தங்களை பிரச்சாரகர்கள் என்று கூறிக் கொள்ளும் அதிகமானவர்களிடம் வேகம் மாத்திரம் தான் இருக்கிறதே தவிர விவேகம் இல்;லை.மார்க்க பிரச்சாரத்தில்; விவேகம் இல்லாத வேகத்தால் எந்தப் பயனும் நிகழ்ந்துவிடாது.

ஆதலால் ஒவ்வொரு பிரச்சாரகரும் எந்தளவு பிரச்சாரத்தில் வேகம் காட்டுகிறோமோ அதைவிட அதிகமாக விவேகமும் நம்மிடம் இருக்க வேண்டும்.

அது போல் நம்முடைய பிரச்சாரம் அதைக் கேட்கின்ற மக்களுக்கு அழகான உபதேசமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கெட்ட வார்த்தைகள் பேசி,அசிங்கமான முறையில் நடந்தால் நமது பிரச்சாரத்தில் எந்தவொரு நன்மையும் நிகழாது.

கண்டிப்பாக நாம் பேசும் பேச்சுக்களில் மிகவும் கவணமாக இருக்க வெண்டும்.
குர்ஆனையும்,ஹதீஸையும் பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் இந்த இரண்டுக்கும் எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடியவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.அந்த அடிப்படையில் மிக அழகிய முறையில் பிரச்சாரம் செய்து தூய்மையான இஸ்லாத்தை உலகறியச் செய்யும் இந்தத் தூய பணியை தொடர்ந்தும் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!