தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி

வந்து போகும் வருடங்கள்!!!


கால சக்கரத்தை சூழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்:

இரவையும் பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவில் சான்றை ஒளியிளக்க செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.  [அல்குர்ஆன் 17:12]
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளையும் செய்து புததாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தடபுடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள (?) எஸ்எம்எஸ்கள் மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும அன்பு வெளிப்படும்.
இந்த விழாக்கோலம் நம் சகோதரர்களையும் விட்டபாடில்லை...

இஸ்லாமிய வருட பிறப்பானாலும், ஆங்கில வருட பிறப்பானாலும் அல்லது பிறந்த நாளானாலும் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சுpந்தித்து பார்த்தால் அதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

உலகத்தில் ஏதாவது சாதனை செய்தோ அல்லது கஷ்டப் பட்டு எதையாவது அடைந்தாலோ அதில் கொண்டாடுவதற்கு அhத்தம் உள்ளது. முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரு பெருநாட்களும் இவ்விதத்திலேயே அமைந்துள்ளன. ஒரு மாதம் இறைவனுக்காக தன்னுடைய பசியையும் தாகத்தையும் இச்சைகளையும் துறந்து இறையச்சம் என்ற உன்னதத்தை அடைந்தோம் என்பதற்காகத்தான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.

எல்லா தியாகங்களையும் செய்து தன்னுடைய வாழ்விலே மனித குலத்திற்கு  முன்னுதாரணமாக உள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாகவும் நாமும் இறைவனுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத்தயார் என வெளிகாட்டும் விதமாக இறைவன் சொன்ன வழியிலேயே அறுத்து பலியிட்டு ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. 

புத்தாண்டை அடைவதற்கு நம்முடைய உயிரை நம்முடைய கையிலா பிடித்து வைத்திருந்தோம் கொண்டாடுவதற்கு? புத்தாண்டு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் வல்ல இறைவன் கொடுக்கும் வரம்  அதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அதை கொண்டாடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.

ஒரு தினம் கொண்டாடப்படுவதற்கு அறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதும் அடிப்படையாக இருக்குமேயானால் அதில் மனித சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்திட வாய்ப்புண்டு. வெறும் கூத்து கும்மாளம் போதை ஆட்டங்கள் போன்ற கேளிக்கைகளால் ஒருதினம் அனுஷ்டிக்கப்படுகிறதென்றால் அதனால் பெரும் பயன் எதுவும் உலகிற்கு கிடைத்து விடுவதில்லை. 

புதுவருடத்தை அடைந்து விட்டோம் என்பதாலும் அதில் வரக்கூடிய நாட்கள் சந்தோஷமாகவும் நல்லதாகவும் அமைய வேண்டும் என்பதாலும் அவ்வருடத்தின் முதல் தினத்தை கொண்டாடுவதாக மக்களில் சிலர் கூறுகின்றனர்.

நாட்களும் வருடங்களும் நல்லதாகவும் சந்தோஷமாகவும் அமைய வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கான அனுகுமுறை வீண் கேளிக்கை ஆட்டங்கள் என்பது நியாய உணர்வுள்ள யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது. 

மனித வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தால் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தன. பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படியெல்லாம் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு பலமாதிரியாக மருவி நம்முன் வந்து நிற்கிறது என்பதை அறியலாம்.

கி.மு. 2000ம் ஆண்டில் மெசபடோமியாவினர் இளவேனிற் காலத்தை (மார்ச் 25) புத்தாண்டாகக் கொண்டாடினர். எகிப்தியர்கள் மற்றும் பாரசீகர்களும் அப்படியே கொண்டாடினர். 

கிரேக்கர்கள் குளிர்காலத்தில் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். ஆரம்ப ரோம காலண்மரிலும் மார்ச் ஒன்றாம் தேதி தான் புதவருடம். ஆதில் பத்து மாதங்கள் தான் இருந்தன. மார்ச் தான் முதல் மாதம். செப்டம்பர் 7வதுமாதம், அக்டோபர் 8வது மாதம், நவம்பர் 9, டிசம்பர் 10 என்ற விதத்தில் தான் இருந்தது.
அதன் பிறகு கி.மு 700க்குப் பின் வந்த ரோம இரண்டாம் மன்னன் நுமா பொன்டிலியஸ் என்பவர் தான் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தார். இந்த காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 

பிறகு கி.பி. 46ல் ஜூலியஸ் சீசர் தான் சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை உருவாக்கினார். இவர் தான் ஜானஸ்(துயரௌ) என்ற சூரியக்கடவுளின் பெயரால் ஜனவரியில் கொண்டாட்டத்தை உருவாக்கினார். இந்த ஜானஸ் என்ற கடவுளுக்கு இரண்டு முகங்கள் வைக்கப்பட்டன. 

ஒருமுகத்துக்கு பழைய வருடம் என்றும் மற்றொரு முகத்துக்கு புதிய வருடம் என்றும் பெயரிடப்பட்டிருந்தன. இப்படி புத்தாண்டை அவர்கள் ஒரு வணக்கம் போன்று கொண்டாடியிருந்ததை இவ்வரலாற்றுக் குறிப்பிலிருந்து நாம் அறிய முடிகிறது. ரோமானியர்கள் தங்கள் ஆலுவலகங்களில் ஜனவரி 1ஐ விருந்து கேளிக்கைகளுடன் கொண்டாடியுள்ளனர். பிறகு பழைய வழக்கம் என்ற பெயரில் மக்களைத் திருப்திப் படுத்த மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.

அந்தக் காலகட்டத்தில் கிருஸ்தவ ஐரோப்பாவில் டிசம்பர் 25 இயேசு பிறந்தநாள், மார்ச் 1ம் தேதி யnரெஉயைவழைn னயல அதாவது ஜிப்ரயில் மர்யமிடம் உணர்த்திய நாள், மார்ச் 25ந்தேதி ஈஸ்டர் கொண்டாட்டம் என்ற ரீதியில் அவர்களின் வழிமுறை இருந்திருக்கிறது.

இப்படி மூடநம்பிக்கைகளாலும் இணைவைப்பு என்ற பாவத்தினாலும் அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்தப் புத்தாண்டு கொண்டாடடங்கள்  நமக்குத் தேவையா? நூம் அதை கொண்டாட அனுமதி உள்ளதா?

அதைக் கொண்டாடுவதன் மூலம் மார்க்கத்திற்கல்லவா நாம் மாறு செய்கிறோம்?

ஒரு கொண்டாட்டத்தின் மூலம் எதுவாக இருக்கிறதென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இஸ்லாம் கொண்டாடச் சொல்லும் தினங்களை எண்ணப் பார்த்தாயா? அவைகளில் முழுமையான இறைஅழைப்பும் நினைவுகூறும் மகத்தான இரட்சகனுக்குச் செய்யப்படக்கூடிய தியாகப் படிப்பினைகளும் மறுமைக்கு வழிகாட்டலும் அல்லவா நிறைந்துள்ளது. அவற்றில் அல்லவா மனித சமுதாயத்துக்கு பலன் இருக்கிறது. 

இனறைய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மனிதர்களின் மூளைசசலவையாய் இருக்கிறது. மனிதர்களுக்கு பயன்மிக்க வழி காட்டலும் வளமான பின்னனியில்லாமலும் இருக்கிறது. 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:

இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வண்ஙகுவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்யுங்கள் (அல்குர்ஆன்: 41:37)
.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே!  (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அஹ்மது 4968)

எனவே நன்மைகளாய் காட்டப்படும் இப்படிப்பட்ட கலாச்சார சூழ்ச்சிகளில் சிக்கி அல்லாஹ் நமக்கு தந்திருக்கும் தனித்தன்மையை இழந்து விடாதவாறு அல்லாஹ்வின் பேரருளை பெற முயற்சிப்போமாக!

புதன்

எஜமானியைப் பெற்றெடுக்கும் தாய்


எஜமானியைப் பெற்றெடுக்கும் தாய்
ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : புகாரி 4777
மேற்கண்ட ஹதீஸுக்கு நாம் கீழ்க்கண்ட வகையில் விளக்கம் கொடுத்து வருகின்றோம்.
பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும்.
எஜமான்னை ஒருத்தி பெற்றெடுப்பாள் என்பதை இன்றைய நவீன உலகம் வேறுவகையில் நிரூபித்து வருகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில், வாடகைத்தாய் முறை அதிகரித்து வருகின்றது. கணவனின் விந்தணுவையும், மனைவியின் கரு முட்டையையும், (IVF முறையில் ஒன்று சேர்த்து) வேறொரு வாடகைப் பெண்ணின் கருவறைக்குள் வைத்து கரு வளர்த்தெடுக்கப்படுகின்றது. அந்த வாடகைத் தாய்க்கு, அந்த 10 மாதங்களுக்கு மாதச் சம்பளமும், பெற்றெடுத்த பின் ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகின்றது. ஹிந்தி நடிகர் அமீர்கான் தம்பதியினருக்கு தற்போது அவ்வாறு குழந்தை பிறந்துள்ளது சமீபத்திய தகவல்.
அதாவது வயிற்றில் இருக்கும் குழந்தை சம்பளம் கொடுக்கும் எஜமானியாகவும் பெற்றவள் சம்பளம் வாங்குபவளாகவும் இருக்கிறாள். இந்த வகையிலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு பொருந்திப் போகிறது.
தகவல் பைசல் ரியாத்
தகவல் ஃபெய்ஸல், ரியாத்

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! ஏன்? ஏதற்கு!!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)
இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.

உரிமைகளையும் கடமைகளையும் மார்க்கரீதியாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயமோ- தங்களின் இடஒதுக்கீடு உரிமையை பெறுவதில் அலட்சிய போக்குடன் இருந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்தே உரிமைகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை கண்டு கொள்ளாமல் இருந்து, பிறகு ஓரங்கட்டி பிறகு தீவிரவாதி முத்திரை குத்தி வருகின்றனர்.

அடிமை இந்தியாவில் போராட்ட வீரர்களாகவும், சுதந்திர இந்தியாவில் அடிமைகளை போலவும் நடத்தப்படும் இந்த இஸ்லாமிய சமுதாயம் தன் நிலையை உணர்ந்து தனக்கு உண்டான வலிமையை கேட்டுப் பெற்று தானும் மண்ணின் மைந்தன் என்ற உரிமையை நிலைநாட்ட கிடைக்கவிருக்கும் களமே இந்த பிப்ரவரி 14 ல் நடைபெறவிருக்கும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

ஞாயிறு

சமுதாய இயக்கங்களுக்கும் அரசியல் ஆசை ஏன்?


சமுதாய இயக்கங்களுக்கும் அரசியல் ஆசை ஏன்
சமுதாய இயக்கமாக தங்களின் பணியைத் துவக்குபவர்கள் இறுதியில் அரசியலில் போட்டியிடுவது என்ற இறுதிக் கட்டத்தை அடைவதற்கு என்ன காரணம்? உதாரணமாக பாமக, விடுதலை சிறுத்தைகள், யாதவ மஹா சபை, நாம் தமிழர், தமுமுக போன்றவை. அரசியலை நோக்கி அவர்களைத் தூண்டுவது எது?
- ஷி. அப்துல்சமது, பட்டுக்கோட்டை, தஞ்சை
தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு இயக்கம் நடத்துபவர்கள் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லா விட்டால் அவர்களால் தொடர்ந்து இயக்கம் நடத்த இயலாது என்பது இயற்கையானதுதான். ஆர்வத்துடன் நல்ல நோக்கத்தில் களம் இறங்கிய இவர்கள் தங்களுக்குப் பின்னால் மக்கள் திரண்டதைக் கண்டபின் நாம் ஏன் எவ்விதப் பலனும் இல்லாமல் உழைக்க வேண்டும். இந்த மக்களை வைத்து நமது இயக்கத்துக்கும் நமக்கும் ஆதாயம் அடைந்தால் என்ன என்ற சிந்தனை ஏற்படுகிறது.
கூட்டத்தைக் காட்டி ஆதாயம் அடையும் ஒரே வழி அரசியல்தான் என்று இவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
ஆனால் நாம் செய்யும் உழைப்புக்கான கூலி மறுமையில் கிடைத்தால் போதும்; இவ்வுலகில் ஒன்றும் கிடைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியவர்கள் மட்டும்தான் எவ்வளவு கூட்டத்தைக் கண்டாலும். எத்தகைய வாய்ப்புகளைப் பெற்றாலும் அதை தமது ஆதாயத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள்.
உணர்வு 16:12

சனி

ஸஃபர் மாதமும்! நாமும்!!

மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அரும்மறையில் கூறுகின்றான்...

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன் 6:59)

இறையருளால் இஸ்லாமிய ஆண்டுக்கணக்கில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை நாமெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அடைய இருக்கிறோம். இம்மாதத்தில் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் இஸ்லாம் காட்டித்தராத, இஸ்லாத்திற்கு முரணான எண்ணங்கொள்வதும், அதற்கேற்ற காரியங்களைச் செய்வதுமாய் இருக்கின்றனர். அவைகளை மூடநம்பிக்கைகளாய் அவர்கள் கருதுவதுமில்லை...

வியாழன்

4.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! போராட்டங்களால் பெற்ற இரண்டாவது வெற்றி

தமிழகத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நமது போராங்களால் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு நமக்கு கிடைத்தது. அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்ற முதல் வெற்றி! 

முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு தரவேணடும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவடடங்கள் தோறும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு தற்போது வீரியத்துடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் 4.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 

இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான் எனினும் நம்முடைய போராட்டங்களின பயனாக விளைகின்ற பலனை முதலில் அறுவடை செய்வோம். பிற்காலங்களில் அது அதிகரித்திடவும் தேவையான பணிகளை செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.aa
Thanks : DINAMALAR

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை



மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

ஞாயிறு

டான்பாஸ்கோ கை அழியாமல் உள்ளதாமே


டான்பாஸ்கோ கை அழியாமல் உள்ளதாமே?
பல ஆண்டுகள் கழித்தும் புனித டான் போஸ்கோவின் கை அழியாமல் இருப்பதாகவும், அதனோடு இணைத்து மெழுகுச்சிலை ஊர்வலம் வருவது குறித்தும் செய்திகள் வெளியாகிறதே, அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சாத்தியமா?
- யி. முஹம்மது இம்ரான், குரோம்பேட்டை
இயேசு எந்தக் கொள்கையைப் போதித்தாரோ அந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து பவுல் என்பவர் புது மதத்தை உருவாக்கினார். அந்த மதத்துக்கும் இயேசுவுக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றாலும் அதற்கு கிறித்தவமதம் என்று பெயரிட்டுக் கொண்டனர்.