தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

சனி

இனப்படுகொலை:சஞ்சீவ் பட்டிற்கு அளித்த பாதுகாப்பு வாபஸ்

குஜராத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குஜராத் போலீஸ் திரும்பப பெற்றுக் கொண்டுள்ளது.
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்த நடந்த வன்முறைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கிருப்பதாக  உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அவர் தனது பிரமாண பத்திரத்தில், “2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரங்கள் குறித்து முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, இந்துக்கள் தங்களது கோபத்தை காட்ட அனுமதிக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கினார்’என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால் தான் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு பரிந்துரைத்தது. எனினும் மாநில அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்காமல் 5 போலீஸாரை அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தது.
இந்நிலையில் அந்த பாதுகாப்பும் வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை மாநில காவல்துறை இயக்குநர் பிறப்பித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் பட், இது இரண்டாவது முறையாக எஸ்.ஐ.பியின் சிபாரிசை மீறி பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். என்னைக் குறித்து கவலையில்லை. எனது குடும்பத்தின் பாதுகாப்பு புனரமைக்கப்பட வேண்டும் என்றார்.
மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததைத் தொடர்ந்து குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தும் நானாவதி கமிஷன் சஞ்சீவ் பட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினைக் குறித்து சஞ்சீவ் பட் விவரிக்க வருகிற மே-16-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
thanks:-thoothuonline.com

பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ



அஹ்மதாபாத்:துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது. சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது.பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்த சி.பி.ஐ ஐ.ஜி கந்தசாமி கூடுதல் விபரங்களை தெரிவிக்கவில்லை.
சொஹ்ரபுத்தீன் ஷேக் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரின் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இம்மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டது. பிரஜாபதியைன் தயார் நர்மதாபாய் தொடுத்த வழக்கை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
இரட்டைப் படுகொலைக்கு சாட்சியாக மாறியதால் தனது மகனை குஜராத் போலீஸ் சுட்டுக்கொன்றதாக நர்மதாபாய் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.சொஹ்ரபுத்தீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளான டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் பிரஜாபதி கொலை வழக்கிலும் குற்றவாளிகளாவர். இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு குஜராத் அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
thanks:-thoothuonline.com

வெள்ளி

வருத்தம் தெரிவிக்கும் ம.ம,க வை கண்டு வருந்துகிறோம்...

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.4:88
இதையும் நம் சமுதாய நண்பர்கள் சாதாரணமான விசயமாக நினைத்தால், அது நம் ஈமானின் பலவீனத்தையே காட்டும், சாய்பாபா வை பற்றியும் அவரின் கொள்கைகள் பற்றியும் நன்கறிந்தவர்கள் அவர் இறப்பால் வருத்தப்படவே முடியாது, ரோடு போட்டார், தண்ணீர்  குழாய் அமைத்தார் என்பதற்காக ஒருவரை சமூக சேவகர் என்று போற்றவேண்டும் என்றால், வாஜ்பாயும் மோடியையும் கூட சமூக சேவகர்கள் ஆகிவிடுவார்கள், 
"ஒரு வாதத்திற்காக சாய்பாபா சில சமூக சேவைகளை செய்தார் என்றே வைத்துக்கொள்வோம், அதற்காக தான் இந்த அறிக்கைகளும் போஸ்டர்களும் என்றால் அவர் செய்த நன்மைகளை விட பித்தலாட்டங்களும் தீமைகளின் பட்டியலும் அதிகமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றதே அதை ஏன் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவில்லை?",  
அதிகமான மக்களை வழி கெடுத்ததால் ஒருவனை அறிவாளி என்று போற்ற முடியாது மாறாக அவனே பெரிய வழிகேடன் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக  இருக்கவேண்டும், தன்னை கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக்கொண்டவர், 
தன் மகிமையால் மற்றவர்களின்  நோய்களை குணமாக்குகின்றேன் என்று சொன்னவர் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ள முடியாமல் மாண்டுபோகின்றார், அதுவும் நான் 96 வயதுவரை வாழ்வேன் என்று  முன்னறிவிப்பு  செய்து பத்து வருடங்களுக்கு முன்பாகவே மரணித்திருக்கிறார் , இந்த தருணத்தில் அவர் மரணத்தின் மூலம் பொய்த்துப்போன அவர் தத்துவங்களையும், முன்னறிவிப்புகளையும்  அவரின் பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எடுத்து சொல்லி, இறைவன் என்பவன், பிறப்பு,  இறப்பு , அசதி, மறதி, சோம்பல், பசி, உறக்கம், உணவு, தேவை, நோய், முதுமை, இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன், கவுள் என்பவன் நித்திய ஜீவன், எந்த மனிதரும் கடவுளாக முடியாது என்ற சிந்தனையை ஊட்டி சத்திய மார்க்கத்தின் பக்கம் அவர்களை அழைப்பது தான் ஒரு முஸ்லிமிற்கு உள்ள கடமையாகும், அதை செய்ய இயலாதவர்கள் குறித்த பட்சம் வாய்மூடி மௌனமாகவாவது இருக்கலாம், மாறாக அவர் (சாஹிபாபா) சமூக சேவகர் என்றும் ஆன்மீக வாதி என்றும் நற்சான்று கொடுத்து அவர் மரணம் வருதமளிக்கின்றது என்று அறிக்கைவிடுவதும், போஸ்டர் அடிப்பதும், அவரை நம்பி ஏமாந்த பக்தர்களை ஊக்குவிப்பதாகவே அமையும், முஸ்லிம் லீக் மட்டும் அல்ல தி.மு,க, ஆ,தி,மு,க கூட இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி இருக்க வாய்ப்பில்லை, மாற்று அரசியல், என்று சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்டவர்கள், குறித்த பட்சம் இதுபோன்ற போஸ்டர்களை அடித்து மூன்றாம்தர அரசியல் செய்து சமுதாய மானத்தை கப்பலேற்றமல் இருந்தாலே போதும் என்பதுதான் சமுதாய மக்களின் வேண்டுகோள்.

" யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு." 3.177
-abujasra

மே 16 முதல் எம்பிபிஎஸ் விண்ணப்ப வினியோகம்: ஜூன் 21ல் தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவிருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு மருத்துவக்கல்வி துறை இயக்குனர் ஷீலா நிருபர்களிடம் கூறியதாவது,

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பு மே மாதம் 15-ம் தேதி வெளியிடப்படும். மே 16-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2-ம் தேதிக்குள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும். ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

மாற்றுத்திறனாளிகள், ஸ்போர்ட்ஸ் கோட்டா பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் மாதம் 30-ம் தேதியும், மற்ற பிரிவினர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 1, 945 இடங்களில் அனைத்து இந்திய அளவிலான ஒதுக்கீட்டில் 292 இடமும், மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் ஆயிரத்து 653 இடங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரியில் உள்ள மொத்தம் ஆயிரத்து 10 சீட்களில், மானேஜ்மென்ட் வகைக்கு 375 சீட்களும், மீதி 635 மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தமிழகத்தில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் உள்ள 100 சீட்களில் 15 சதம் அனைத்து இந்தியகோட்டாவின்படியும், மாநில அரசுக்கு 85 சதமும் பிரித்து சேர்க்கை நடக்கும். தனியார் பல் மருத்துவக் கல்லூரி மொத்தம் 17 உள்ளது. இதில் ஆயிரத்து 420 சீட்களில் 529 மானேஜ்மென்ட் கோட்டாவும், மாநில அரசு கோட்டா 891 சீட்டும் பகிரப்படும்.
English summary

சீனாவில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு கலந்த பால்பவுடர் கைப்பற்றப்பட்டது

சீனாவின் தெற்குபகுதியைச் சேர்ந்த ஒரு நகரத்தில் "மெலமைன்" எனப்படும் நச்சுப்பொருள் கலந்த 26 டன் பால்பவுடரை அந்நாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மெலனைன் என்ற ரசாயனப் பொருள் பால்பவுடரில் கலந்துள்ள புரதச் சத்துக்களை அளவிட்டு அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விதமான நச்சுப் பொருளும் கூட.

சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் இருக்கும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கடையில் இருந்து மெலமைன் கலந்த 26 டன் பால்பவுடரை பொலிசார் கைப்பற்றினர்.

இந்த பால்பவுடர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்னும் உபயோகப்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை குறித்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சீனாவில் 2008ல் "மெலமைன்" கலந்த பாலை குடித்ததால் ஆறு குழந்தைகள் பலியாகினர். மேலும் மூன்று லட்சம் குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
newsonews

வியாழன்

பொய்யென்று தெரிந்த பின்பும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அசத்தியவாதிகள் மூன்று அணிகளாக நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மக்கத்து முஷ்ரிக்குகள், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரே இந்த மூன்று சாரார்.
இவர்கள் மூவரும் தாங்கள் தான் சரியான பாதையில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். மூன்று சாராருமே சத்தியத்தில் இருப்பதாகச் சாதித்தது மக்களை வெகுவாகப் பாதித்தது. எது சத்தியம்? யார் சொல்வது சத்தியம்? என்று மக்கள் தடுமாறினர். உண்மையிலேயே தூய இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு இது தடைக்கல்லாக அமைந்தது.
அல்லாஹ் இந்தத் தருணத்தில் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்கு தன் தூதருக்கு ஓர் ஆயுதத்தை வழங்கினான்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)

இது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வலுவான ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கும் வழங்கியிருந்தான். இதைக் கொண்டு அவர்கள் அரசனின் கண்களில் விரலை விட்டு அசைத்தார்கள். அசத்தியத்திற்கு ஆதரவாக ஆணவத்தில் அவன் எடுத்து வைத்த வாதத்திற்கு இப்ராஹீம் நபி ஆப்பு வைத்ததை வெகுவாக அல்லாஹ் பாராட்டிச் சொல்கிறான்.


தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)

அசத்தியத்தில் இருக்கும் துரோகிகளுக்கு, அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் வாக்குறுதி தருகின்றான். இதன் மூலம் அசத்தியத்தில் இருப்பவர்கள் கூட தங்கள் வாதத் திறமையினால் ஜெயித்து விடுவார்கள் என்ற கருத்துக்கு மரண அடி கொடுக்கின்றான்.
இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியதுடன் அப்படி வாதம் செய்த போது, அசத்தியவாதிகள் தோற்று ஓடியதையும் அழகாக எடுத்துரைத்து, நபி (ஸல்) அவர்களுக்குத் தெம்பூட்டுகின்றான்.
அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.
இதன் படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அசத்தியவாதிகளுக்கு எதிராக அறை கூவல் விடுத்த போது மக்கத்து முஷ்ரிக்குகள் இதற்கு முன்வரவில்லை. அதனால் சத்தியத்திற்கு அது மாபெரும் வெற்றியாக அமைந்தது.
ஆனால் இதற்குப் பின்னாலும் யூத, கிறித்தவர்கள் வாதத்திற்கு வராததுடன் வாய் மூடி நிற்கவில்லை. தங்கள் மார்க்கங்கள் தான் சரியானவை என்று குருட்டுத் தனமாக சாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது ஆயுதத்தை வழங்குகின்றான். அது தான் முபாஹலா ஆகும்.

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் ”வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:61)

இந்த வசனத்தின் மூலம் முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
வேதக்காரர்கள் தங்கள் அணியின் பக்கம் சத்தியம் இருக்கின்றது என்றால் அவர்கள் இந்த முபாஹலாவுக்கு வரவேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம்! அசத்தியத்திற்குள்ள வீண் பிடிவாதம்! எனவே சத்தியம் வென்றது. அசத்தியம் அழிந்தது.
இதன் பிறகு இஸ்லாம் தான் அரபகத்தின் இறுதியான மார்க்கமானது. மக்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க், யூத, கிறித்தவ கொள்கைகளைத் தூக்கி எறிந்தனர்.
(அல்லாஹ் வழங்கியுள்ள இந்த இரண்டு ஆயுதங்கள் முஸ்­லிமல்லாதவர்களிடம் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. முஸ்­லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் உண்மை அறியும் கருவியாக, மெட்டல் டிடெக்டராக இந்த ஆயுதங்களைத் தந்திருக்கின்றான்.
முஸ்­லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றுக் கருத்துள்ளவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அதற்கு வரவில்லை என்றால் வர மறுப்பவர்களின் சாயம் அங்கேயே நன்றாக வெளுத்து விடும். அதற்கு மேலும் அவர்கள் தங்கள் நிலையைச் சரி கண்டால் அடுத்த வழி முபாஹலா தான்.
இதற்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் வரவில்லை என்றால் அவர்களிடம் உண்மை அறவே இல்லை என்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த இரண்டு தரப்பைக் குறித்து இறை நம்பிக்கையாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்? அதையும் அல்லாஹ்வே கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49:9)

இரண்டு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியில்லை என்பதை நாம் இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
தற்போது தவ்ஹீது ஜமாஅத்தின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்ட போது யார் சொல்வது உண்மை என்று அறிய முடியாமல் மக்கள் தடுமாறினார்கள். அப்போது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம். வரவில்லை.
ஏதேதோ சாக்கு சொன்னார்கள். இரண்டு தரப்பும் மூளையைப் போட்டு கசக்கும் ஆய்வு விவகாரங்கள் எல்லாம் இதில் இல்லை, பேசப்போவது உலக விஷயம் தான். இதற்கு வாதத் திறமையும் தேவையில்லை, ஆதாரங்கள் தான் தேவை என்றெல்லாம் சமாதானம் சொல்­லி அழைத்துப் பார்த்தோம். அப்போதும் வர மறுத்தார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எங்களிடம் உண்மையில்லை என்று தங்களது மவுனத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.
இதிலேயே அவர்களது முகத்திரை கிழிந்து அல்லாஹ் உண்மையின் பக்கம் வெற்றியைத் தந்தான். ஆனால் இதற்குப் பிறகும் தங்களை நியாயப்படுத்தி வந்ததால் அடுத்த ஆயுதமாக முபாஹலாவைக் கையிலெடுத்தோம். அதற்கும் மவுனத்தையே பதிலளித்தார்கள். வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பொய்யர்கள் என்பதைப் போட்டுடைத்து விட்டார்கள்.
இன்னொரு சாரார் இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதாவது அநீதி இழைக்கப்பட்டவனும் வேண்டும், அநியாயக்காரனும் வேண்டும், செருப்பால் அடித்தவனும் வேண்டும், அடி வாங்கியவனும் வேண்டும் என்ற நிலைபாடு தான் இது!
இந்த சாரார் இரண்டுமே வேண்டாம் என்று முடிவெடுத்தால் கூட அதை வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறலாம். ஆனால் இரண்டுமே வேண்டும் என்று சொல்வது நயவஞ்சக நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும் முடிவு தானே தவிர அல்லாஹ்வின் வசனத்திற்கு ஒப்பான முடிவல்ல.
எனவே இது போன்ற இரட்டை நிலை எடுப்பதை விடுத்து, குர்ஆனும் ஹதீசும் கூறும் வழியில் சத்தியத்தின் பக்கம் நின்று ஏகத்துவத்தைக் காக்கும் ஒரே நிலையை எடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக!

சொர்க்கத்தில் ஓரு வசந்த மாளிகை..


இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.
நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள்.
அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு இல்லத்தை எழுப்ப வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்.
பலரும் எப்படியாவது இந்த உலகில் ஒரு (வீட்டை) மாளிகையை கட்டிவிட வேண்டும் என்ற வேட்கையோடு அலைகின்றனர். இந்த எண்ணத்தை நிறைவேற்றிட எண்ணிலடங்கா துன்பத்தை அடைகின்றனர்.
பலர் வெளிநாடுகளில் அவதிப்படுவதற்கான காரணங்களில் இந்த இலட்சியமும் ஒன்றே.
இவ்வுலகில் நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை இருப்பதின் மகிமையை நாம் உணர்வதாலே அதற்காக எதையும் சந்திக்க, சகிக்க தயாராக உள்ளோம். மார்க்க விதிகளை மீறாமல் ஒருவர் இவ்வாறு ஒரு இல்லத்தை எழுப்புகிறார் என்றால் அதை குற்றம் கூற முடியாது.
அழியும் இந்த உலகிலேயே நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை வேண்டும் எனில் நாம் என்றென்றும் தங்கக்கூடிய, நிலையான மறுமையில் நமக்கென்று ஒரு மாளிகை வேண்டாமா? என்று சிந்திக்க வேண்டும்.
இவ்வுலகில் ஒருவர் சொந்தவீடு இல்லாமலேயே வாழ்ந்து, மரணித்தும் விட்டார் எனில் அது ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் நாம் இங்கேயே நிரந்தமாக தங்கப்போவதில்லை. ஆனால் மறுமையில் நமக்கென ஒரு மாளிகை இல்லையெனில் அது இவ்வுலகில் ஏற்படும் இழப்பை விட பெரும் இழப்பே.
எனவே இவ்வுலகில் ஒரு இல்லத்தை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதை விட சற்று அதிகமாகவே, இல்லை மிகவும் அதிகமாகவே மறுமையில் ஒரு மாளிகையை எழுப்ப வேண்டும் என ஆசைப்பட வேண்டும்.
இவ்வுலகில் வீட்டை கட்டுவதற்காக எடுக்கும் முயற்சிகளை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மறுமையின் மாளிகைக்காக முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது என்ன சாதாரண மாளிகையா?
சிறப்பு மாளிகை
"சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகல் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிருந்தோ மேற்கிருந்தோ பயணிக்கின்ற ஒயுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?'' என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், "இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்'' என பதிலத்தார்கள்.
அறிவிப்பவர் ; அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி 3256
மறுமை நாளில் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பதை பல்வேறு நபிமொழியிலிருந்து விளங்கி கொள்ள முடிகிறது. மேற்கண்ட செய்தியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. மேலும் சிலருக்கு சொர்க்கத்தில் சிறப்பு மாளிகை, அறை அளிக்கப்பட்டிருக்கும் எனவும், அதை ஏனையோர் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் எனவும் மேற்கண்ட செய்தி கூறுகிறது.
அல்லாஹ் மறுமையில் தரவிருக்கும் மாளிகை சாதாரண மாளிகையல்ல. அது சிறப்பு மாளிகை என்பதை இச்செய்தியிருந்து அறியலாம்.
உயர்ந்த சொர்க்கவாசிகளுக்கு இந்த மாளிகையை வழங்கி, அவர்களை தனி மரியாதயுடன் கௌரவிக்கின்றான்.
இவ்வுலகில் சில நிகழ்ச்சிகளின் போது வி.ஐ.பி க்கள் உட்கார உயர்ரக சீட், உற்சாக வரவேற்பு என தனி மரியாதை அளிக்கப்படுவதை ஏனையோர் ஆர்வத்துடன் பார்த்து, அவ்வாறு நாமும் தனிமரியாதை செய்யப்படமாட்டோமா என ஏங்குகின்றனர். இவ்வுலகில் சாதாரண மனிதர்களால் தனிமரியாதை செய்யப்படுவதைவிட அகிலத்தையும் படைத்தாளும் இறைவனால் கௌரவிக்கப்படுவதே மிகவும் சிறந்த காரியம்.
முத்து மாளிகை
நாம் ஒரு வீட்டை செங்கல், மணல் ,சிமெண்ட், ஜல்லிபோன்ற வைகளை வைத்தே கட்டுகிறோம். யாரேனும் மிக அரிதாக முழுவதும் டைல்ஸ் பதித்துள்ள வீட்டை கட்டியிருப்பதை கண்டால் அதையே வியப்புடன், ஆசையுடன் பாக்கின்றோம். மறுமையில் இறைவன் வழங்கவிருக்கும் வீடு இவ்வுலகில் உள்ள வீட்டை போன்றதல்ல. முழுக்க முழுக்க முத்துக்களால் ஆன முத்து மாளிகை அது. அதோடு மனிதனின் ஆசைக்கேற்றவாறு கண்கவரும் வடிவமைப்பும் அதில் செய்யப்பட்டிருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர் களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல் : முஸ்லிம் 5458
இப்படி ஒரு மாளிகையை எவ்வளவு பெரிய பணக்காரனாலும்கட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக கூறலாம். மறுமையில் உள்ள அம்மாளிகையின் உயரம் அறுபது மைல் என நபிகளார் கூறியுள்ளார்கள்.
இவ்வுலகில் ஒரு மைல் நீளத்தில் உள்ள கட்டடமே மக்களால் அதிசயத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அறுபது மைல் நீளமுள்ள மாளிகையை கற்பனை செய்து பாருங்கள். சந்தேகமற இது ஒரு வசந்த மாளிகையே.
கீழே ஆறுகள்
மனிதனையும், தண்ணீரையும் பிரித்து பார்க்கவே முடியாது என்கிற அளவிற்கு மனிதனின் வாழ்க்கையில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கின்றது. மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் தண்ணீரும் ஒன்று.
அது போல ஆறு, அருவி போன்றவைகளும் மனிதனுக்கு மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இதில் குளிப்பது ஒரு வித சந்தோஷத்தை அளிப்பதனாலே பல ஆயிரங்களை செலவு செய்து, வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் பயணம் புறப்பட்டேனும் இவற்றில் குளிக்க மனிதன் விரும்புகிறான்.
இறைவன் தரும் மாளிகையில் இவற்றிருக்கும் பஞ்சமில்லை. மாளிகையின் கீழே வசதியாக பல ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் என இறைவன் தெரிவிக்கிறான்.
மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான். அல்குர்ஆன் 39 : 20
தூய்மையான வசிப்பிடம்
என்னதான் பெரிய மாளிகையாக இருந்தாலும் அது தூய்மையாக இல்லையெனில் பார்ப்பதற்கு களையற்று காணப்படும். அதில் நாம் தங்குவது மன மகிழ்ச்சியை தராது. எனவே இறைவன் நமக்களிக்கும் மாளிகையை தூய்மையானதாகவே தருகிறான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 9 : 72
ஹூருல் ஈன்' எனும் கண்ணழகியர்
சொர்க்கத்தில் உள்ள அந்த மாளிகையில் இது போன்ற இன்பங்களை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல் ஹூருல் ஈன்' எனும் பெண்களையும் இறைவன் அளிக்கின்றான்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
அவர்கள் கூறியதாவது: (சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்; மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், "என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழல் இருக்க வேண்டும்'' என்பார்.
-பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.-
ஆனால், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?'' என்பதிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. "இன்னின்னதை நீ கேட்கலாம்!'' என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்' என்று இறைவன் கூறுவான்'' என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய ஹூருல் ஈன்' எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்'' என்று கூறுவார்கள்.
அப்போது அந்த மனிதர் "எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை'' என்று (மகிழ்ந்து) கூறுவார்.
அறிவிப்பவர் ; நுஅமான் பின் அபீஅய்யாஷ், நூல் : முஸ்லிம் 311
மிகக் குறைந்த தரமுடைய சொர்க்கவாசிகளின் நிலை இந்த ஹதீஸில் விவரிக்கப்படுகின்றது. அவர்களுக்கு அந்த மாளிகையில் ஹூருல் ஈன்' எனும் கண்ணழகியர்கள் வழங்கப்படுவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
ஒருவனுக்கு பெரும் மாளிகையிருந்து அதில் அவன் தனியே இருக்க நேர்ந்தால் அதை விட கொடுமை வேறொன்றும் இல்லை எனலாம். எனவே தான் வெறும் மாளிகையை மட்டும் தருவதோடு நிற்காமல் அதில் நாம் இன்பமுற தக்க துணைகளையும் இறைவன் ஏற்படுத்தி தருகிறான்.
கண்ணழகியர்களுடன் மேலும் வழங்கப்படுகின்ற இன்பங்களை அறிகிற போது அது இன்பங்கள் நிறைந்த இன்ப மாளிகை என்பதை அறியலாம்.
மறுமையில் இறைவன் தரவிருக்கும் மாளிகை இவ்வளவு இன்பங்களும், வசதிகளும் நிறைந்த மாளிகை என்பதை அறிந்துவிட்ட போது அதை பெறுவதற்காக நாம் சில முயற்சிளை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மையான துணைவியர்
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழல்
அவர்களை நுழையச் செய்வோம். (அல்குர்ஆன் 4:57)
அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 55:58)
அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள். (அல்குர்ஆன் 55:70)
(அப்பெண்களை) நாமே அழகுறப் படைத்தோம். அவர்களைக் கன்னியராகவும் ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 56:36,37)
சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒரும். மேலும், அப் பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விட மேலானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர),
நூல் : புகாரி (6568)
பள்ளிவாசல் கட்டுதல்
மறுமையில் தனக்கென்று ஒரு மாளிகையை எழுப்ப விரும்புபவர்களுக்கு பல வழிமுறைகளை நபிகளார் கற்றுத்தந்துள்ளார்கள். அவற்றில் பள்ளிவாசல் கட்டுதலும் ஒன்றாகும்.
இவ்வுலகில் இறைவனுக்காக ஒரு இல்லத்தை எழுப்ப உதவினால் மறுமையில் நமக்காக ஒரு மாளிகையை இறைவன் எழுப்புகிறான்.
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது உஸ்மான் (ரலி)
அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்' என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல்கவ்லானீ
நூல்கள் : புகாரி 450, முஸ்லிம் 926
பள்ளிவாசல் பணி என்று வரும்போது கணக்குபார்க்காமல் நம்மால் முடிந்த பொருளாதாரத்தை அள்ளிவழங்கிட முன்வர வேண்டும். மறுமையில் நமக்குரிய மாளிகை எழுப்பப்பட நாம் வழங்கும் முன்பணம்என்று எண்ணி இச்செயல் அதிகம் ஈடுபாடு கொள்ளவேண்டும்.
உபரியான தொழுகைகள்
ஒரு நாளைக்கு கடமையான தொழுகைகள் தவிர உபரியாக 12 ரக்அத்துகள் தொழுபவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை இறைவன் தருகிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
உம்மு ஹபீபா (ரலி)
அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ர), முஸ்லிம் 1319
கடமையான தொழுகைகளிலேயே அலட்சியமாக இருக்கும் நாம் இந்த செய்தியை எப்போதும் நினைவில் நிறுத்தி, கடமையான வணக்கங்களில் கவனம் செலுத்தவதோடு உபரியான தொழுகைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.
பள்ளிவாசலுடன் தொடர்பு
இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் மறுமையில் இறைவன் நமக்கான மாளிகையை தயார் செய்கிறான் என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்வாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாகையை ஆயத்தப்படுத்துகிறான்.
அறிவிப்பவர் அபூஹரைரா (ரலி),
நூல் : புகாரி 662
பள்ளிவாசலுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வது ஏராளமான நன்மைகளை பெற்றுத்தருவதோடு மறுமை மாளிகை நம்வசமாகுவதற்கும் காரணமாக திகழ்கிறது.
இறைவனை அஞ்சுதல்
உலகில் வாழும் போது இறையச்சத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மறுமையில் உயர்ந்த மாளிகைகளை தருவதாக இறைவன் வாக்களிக் கின்றான்.
தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
அல்குர்ஆன் 39 : 20
தீமைகள் நம்மை அண்டுவதற்கு இறையச்சம், இறை பயம் நம்மிடம் இல்லாததே காரணம் என்பதை சொல்புரியவேண்டியதில்லை. நம்மை உண்மை முஸ்மாக
மாற்றக்கூடிய இறைபயத்தை இறைவனிடம் வேண்டிட வேண்டும்.
கவனிக்க ...
இவ்வுலகில் ஒரு வீட்டை கட்டிமுடிக்க பெரும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்போதும் அது பலருக்கு பகல் கனவாகவே தோன்றுகிறது. ஆனால் மறுமையில் ஒரு இல்லத்தை, மாளிகையை எழுப்ப இது போன்ற சிரமங்களை அனுபவிக்க வேண்டியதில்லை என்பதை மேற்கண்ட தகவல்களிருந்து அறிகிறோம்.
என் இறைவா சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக என்று ஃபிர்அவ்னின் மனைவி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததை அனைத்து முஃமின்களுக்கும் இறைவன் உதாரணமாக கூறுகிறான்.
அல்குர்ஆன் 66:11
நாமும் இறைவனிடம் பிரார்த்தனை புரிவதோடு இறைவனும் இறைத் தூதரும் கற்றுத்தந்துள்ள மேற்கண்ட எளிய செயல்களை செய்தாலே
அந்த மாளிகை நம்வசமாகும் என்பதை இந்நேரத்தில் கவனிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலையான மறுமையின் வசந்த மாளிகைக்கு சொந்தக்காரராக மாறுவோமாக.
onlinepj.com (ஏப்ரல் தீன்குலப் பெண்மணி - 2011)--thanks:-qatartawheedjamath


திங்கள்

சுத்ரா - தடுப்பு


தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவரும் தனக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261

770 عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் (தொழும் போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.
அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (858)


மக்களுக்குத் தொழவைக்கும் இமாம் தனக்கு ஏதாவது ஒரு பொருளைத் தடுப்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் தடுப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை

773 عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும் போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்துவருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (862)


தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.தூண் சுவர் கைத்தடி ஈட்டி ஒட்டகம் ஆகிய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுப்பாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள் : புகாரீ (496), முஸ்லிம் (786)

நான் ஸலமா பின் அல் அக்வஃ (ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவனாக இருந்தேன். ஸலமா (ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுகின்றீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : யஸீத் பின் அபீ உபைத்,
நூல் : புகாரீ (502), முஸ்லிம் (788)

பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்கள் : புகாரீ (376)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டு, தொழுமிடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 973, முஸ்லிம் 863

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (தடுப்பாக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 972, முஸ்லிம் 862

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்? என்று கேட்டேன். ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிவு
நூல் : புகாரீ (507)

தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 496, முஸ்லிம் 786

... பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தக் கைத்தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்கள்: புகாரீ 376, முஸ்லிம் 778

'நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்' என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். 'ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்?' என்று கேட்டேன். 'ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள்' என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: புகாரீ 507

தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே செல்வது குற்றமாகும்.

'தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைம் (ரலி)
நூல்கள்: புகாரீ 510, முஸ்லிம் 785

நன்றி : ஆன்லைன்பி.ஜே.காம் & நூல் : தொழுகை & FRTJ

2ஜி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை

இரண்டாம் தலைமுறை செல்லிட தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை திங்களன்று தாக்கல் செய்துள்ள முதலாவது கூடுதல் குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் வேறு நான்கு பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்த ஊழல் விசாரணையில் பெயர் அடிபட்டிருந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரை சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்திருக்கவில்லை.

தில்லியில் இவ்வழக்கை விசாரித்து வருகின்ற விசேட நீதிபதி ஓ.பி.சைனியின் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழி தவிர கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத் குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முதல்வர் ஷாகித் உஸ்மான் பால்வாவின் சகோதரரான ஆஸிஃப் பல்வா, குஸெகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநரான ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் முரானி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

லஞ்ச ஒழிப்பு சட்டம் பிரிவு எண் 7 மற்றும் 11ன் கீழ் கனிமொழியின் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஊழல் வழியாக வந்த செல்வத்தை ஏற்றுக்கொண்டது தொடர்பான சட்டப் பிரிவுகள் இவை.

கனிமொழி, ஷரத் குமார், முரானி ஆகியோரை சி.பி.ஐ. இன்னும் கைது செய்திருக்கவில்லை.

இவர்கள் வரும் மே 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்றக் காவலில் இருந்துவருகின்ற ஆஸிஃப் பல்வாவும் ராஜீவ் அகர்வாலும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஊழல் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி தொகை வேறு நிறுவனங்கள் வழியாகக் கைமாறியுள்ளது என்று விசாரணைகள் காட்டுவதாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவை புதிய காந்தியாகவும்,லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகவும் சித்தரிப்பதன் மோசடியை வெளிச்சம் போட்டு காட்டி ஹாஷ்மியுடன் வரலாற்றாய்வாளர் டாக்டர் கே.என்.பணிக்கர், பிரபல திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் ஆகியோரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தை துவக்கம் முதலே நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ஆகும் என ஷப்னம் ஹாஷிம் தெரிவிக்கிறார். லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின் மூலம் ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் முயன்றனர். ஹஸாரேவுடன் லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தில் பங்கேற்ற பலரும் ஆர்.எஸ்.எஸ் விரித்த வலையில் சிக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின் உடலுழைப்பு ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவாதிகள் எடுத்துக்கொண்டனர். அவர்கள் விநியோகித்த மடக்கோலைகள் அனைத்து சிறுபான்மையினருக்கு எதிரானவையாகும். நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தாம் ஆனால் சமூகத்தை அழிவை நோக்கி வழிநடத்துபவர்களை ஆதரிக்கவியலாது என ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.

ஹஸாரேயை மகாத்மா காந்தியுடனும், ஜெயபிரகாஷ் நாராயணனுடனும் ஒப்பீடுச் செய்ததைக் குறித்து வரலாற்றாய்வாளர் டாக்டர் கே.என்.பணிக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரலாற்றில் ஒரேயொரு காந்தி மட்டுமே இருந்துள்ளார். ஆனால், அவர் ஒருபோதும் ஜனநாயக கட்டமைப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. ஹஸாரேவின் போராட்டம் முழுவதும் ‘நானும்!நீங்களும்!’ என்ற பார்வைதான் தென்பட்டது. ஆனால், காந்தியின் போராட்டத்தில் ஒருபோதும் எதிரி மனப்பான்மை இல்லை என தெரிவித்த கே.என்.பணிக்கர் குஜராத் முதல்வர் மோடியை பாராட்டிய ஹஸாரேவை கடுமையாக விமர்சித்தார்.

குஜராத்தில் தற்போதும் சிறுபான்மையினர் வேட்டையாடப்படுகின்றனர் என்பது நாடு முழுவதும் தெரியும். இதனை ஹஸாரே அங்கீகரிக்கிறாரா? என கே.என்.பணிக்கர் கேள்வி தொடுக்கிறார்.

தற்போதைய ஜனலோக்பால் மசோதா ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக உள்ளது. இது அதிகார மையப்படுத்தலுக்கும் அவசர நிலைக்கும் காரணமாகும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஃபாசிசத்திற்கு ஆதரவான, அவசரநிலைக்கு சமமான சூழலைத்தான் இது உருவாக்கும் என கே.என்.பணிக்கர் தெரிவித்துள்ளார்.

லோக்பால் மசோதா ஊழலை தடுக்க போதுமானதல்ல. உலகமயமாக்கலின் ஒரு பகுதியான கொள்கைரீதியான தலையீடுகளும் ஊழலாகும். லோக்பால் மசோதா தப்பிப்பதற்கான சட்டமாகும். அரசுக்கு இது பாதுகாப்பு அளிப்பதாகும்.

ஹஸாரேவின் போராட்டம் பெரும் நகரங்களில் மட்டுமே நடந்தது. ஊடகங்கள்தாம் இப்போராட்டத்தை ஊதிப் பெருக்கியது. மணிப்பூரில் இரோம் ஷர்மிளாவும், ஆந்திரபிரதேசத்தில் போற்றி ஸ்ரீராமலுவும் நடத்தும் போராட்டங்களுக்கு ஹஸாரேயின் போராட்டத்திற்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை. வெறும் ஐந்து தினங்கள் மட்டுமே ஹஸாரே போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால், ஸ்ரீராமலுவோ தனது வாழ்க்கையையே போராட்டமாக ஒதுக்கிவைத்துள்ளார். ஷர்மிளா கடந்த 10 ஆண்டுகளாக போராட்டத்தை தொடர்கிறார் என தெரிவித்த கே.என்.பணிக்கர் அரசியல்வாதிகளுக்கெதிரான ஹஸாரேயின் நிலைப்பாட்டினையும் விமர்சித்துள்ளார்.

தான் அரசியல்வாதிகளுக்கு எதிரானவன் என ஹஸாரே கூறுகிறார். அரசியல் இல்லாமல் ஜனநாயகம் எவ்வாறு நிலைபெறும் என கே.என்.பணிக்கர் கேள்வி எழுப்புகிறார். லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இவர்கள் பதில் கூறவில்லை என கே.என்.பணிக்கர் குற்றஞ்சாட்டினார்.
thoothu

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.
அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.
கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை  எப்படியாவது  தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.
முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத  அளவுக்கு எரித்துள்ளனர்.
இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த  அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”
2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.
ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்  என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.
குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”
(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.
வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும்  அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.
ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.
நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?
கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில்  போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?
vinavu
___________________________________________________________________________
தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் அவசியம் அவற்றை வாசித்துப் பார்க்க வேண்டும்.

வெள்ளி

யோகா சாமியார் ராம்தேவ்;;;;;;

யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை.

இப்பொழுது புதியதொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர்தாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். கடந்த 10 ஆண்டுகளில் அவர் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல இடங்களிலும் சொத்துக்களை குவித்துள்ள சுவாமிஜிக்கு கோயில்கள் நிறைந்த ஹரித்துவாரில் மட்டும் 1000 கோடிக்கான சொத்துக்கள் உள்ளனவாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சஞ்சரித்த சுவாமி ராம்தேவ் இன்று ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர். தனக்கு சொந்தமான சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வக்கில்லாத ராம்தேவின் நம்பமுடியாத வளர்ச்சியின் பின்னணியைக் குறித்து சி.பி.ஐ விசாரித்து உண்மையை வெளிக்கொணர கோரியது நாத்திகர்கள் அல்லர். மாறாக அகில பாரதீய அகாரா பரிஷத்தின் செய்தித்தொடர்பாளர் பாபா
ஹட்யோகிதான். இதேக் கோரிக்கையை முன்வைத்து பலரும் முன்வந்துள்ளனர்.

வட இந்தியர்களுக்கு மத்தியில் ஆஷ்தா தொலைக்காட்சி சேனல் மற்றும் இதர சேனல்கள் வாயிலாக அதிகாலைகளில் யோகா பயிற்சியை துவங்கிய ராம்தேவின் வளர்ச்சி திடீரென உருவானதாகும்.

ராம்தேவால் உருவாக்கப்பட்டதுதான் உடல் நலனுக்கான பயிற்சியான யோகா கலை என பல மக்களும் தவறாகவே விளங்கி தொலைக்காட்சிக்கு முன்பாக உட்கார்ந்து பயிற்சி எடுத்துவருகின்றனர்.

சுவாமி என்ற நிலையில் கட்சி பேதமற்ற அனைவரும் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ராம்தேவின் பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளையின் வருமானம் குவியத் துவங்கியது. திவ்யயோக மந்திர், திவ்ய யோகா ஆசிரமம், திவ்யா ஃபார்மஸி, பதஞ்சலி ஹெர்பல், பதஞ்சலி யோகாபீடம், பதஞ்சலி யோகா பல்கலைக்கழகம், பதஞ்சலி மெகா ஃபுட் பார்க், நிவாரண தியானம், ஆயுர்வேதா சிகிட்சை மையம் என அறக்கட்டளையின் கீழ் நிறுவனங்களின் பட்டியல் நீளுகிறது.

பெருமளவிலான நிலங்களும், ஆஷ்த தொலைக்காட்சியின் பெரும் பங்குத் தொகையும் ராம்தேவுக்கு சொந்தமாகும். ஹரித்துவாருக்கு வெளியே வந்தால் ராம்தேவின் சொத்துக்களை கண்டுபிடிக்க தனியாக சர்வே நடத்தவேண்டிவரும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சங்கர்தேவ் என்ற சன்னியாசி சந்தேகமான நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து ராம்தேவின் ஆசிரமத்தின் செயல்பாடுகளில் மர்மம் நீடிக்கிறது என ஹட்யோகி கூறுகிறார்.

ராம்தேவின் ஆசிரமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளில் மோசடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மருந்துகளில் அஸ்திகள் இருப்பதாக சுட்டிக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். ஆனால், பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் சுவாமிஜிக்கு ஆதரவாக களமிறங்கியதால் பிருந்தா கப்சிப்பானார்.

மக்கள் ஆதரவு அதிகரித்தைத் தொடர்ந்து சுவாமிஜியின் கண்கள் அரசியலை நோட்டமிடத் துவங்கின. அதற்கான முயற்சியிலும் இறங்கினார் அவர். ஜூன் மாதம் கட்சியை அறிவிப்பேன் என அவர் கூறியதும் அவரை ஆதரித்த பல கட்சிகளும் மெதுவாக நழுவ துவங்கினர். ஏனெனில் தங்களுடைய வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் யோகாவுக்கு கிடைத்த மரியாதை சுவாமிஜியின் அரசியல் கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் 'கறுப்புப் பணத்திற்கான போர்' என பிரகடனப்படுத்தி ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அவர். இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதற்கிடையேதான் ராம்தேவின் சட்டத்திற்கு புறம்பான வருமானத்தைக் குறித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. அதில் முக்கியமானவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கியதுக் குறித்து ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய ராம்தேவை அருணாச்சல மாநில காங்கிரஸ் எம்.பியான நினோங் எரிங் 'ப்ளடி இந்தியன் டாக்' என திட்டியது சமீபத்திய சர்ச்சையாகும்.

காங்கிரஸ் எம்.பியை பாராளுமன்றத்தில் நுழைய அனுமதிக்கமாட்டோம் என ராம்தேவ் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். எம்.பியிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே ராம்தேவை ஆதரித்து பாசிச பா.ஜ.க களமிறங்கியுள்ளது. சாமியார்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதல்லவா?

மாத்யமத்திலிருந்து

இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்திடுவோம்...



அதிகமான முஸ்ம்கள், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக இருக்கிற அநேகமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம், அவர்கள் அழகிய மார்க்கத்தின் அடிப்படையை அறியாமல் இருப்பதுதான். அதேசமயம், தவறிழைக்கின்ற முஸ்லிம்கள்
அனைவரும் மார்க்கத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பொதுவாக கருத்தைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கி சென்றுவிடமுடியாது. காரணம், கட்டுக்கோப்பான மார்க்கத்தின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்திருந்தும் அதன் கட்டளைகளுக்குக் கட்டுப்படாமல் வாழ்கின்ற முஸ்லிம்களை கண்கூடாகக் காண்கிறோம். மார்க்கத்திலே மொழியப்பட்டுள்ள முக்கியமான விஷயங்கள் எவை? எவை ஹராம்? எவை ஹலால்? முஸ்முடைய முதன்மையான பண்புகள் என்ன? என்பதையெல்லாம் இவர்கள் அறிந்துள்ளார்கள். ஆயினும், மகத்தான மார்க்கத்திற்கு தோதுவாக தங்களைத் திருத்திக்கொள்வதற்கு பதிலாக, தங்களின் சுயவிருப்பத்திற்கு சார்பாக மார்க்க போதனைகளை மாற்றி, வளைத்து, திரித்து பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள். இத்தகையவர்கள், சன்மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள கடமையான செயல்களில் சிலதை மட்டும் செயல்படுத்திவிட்டு, மற்றவைகளை மற்றவர்களின் விமர்சனத் திற்கு, எதிர்ப்புக்கு பயந்து நிராகரித்து விடுகிறார்கள். அதுபோலவே தடுக்கப்பட்டுள்ள காரியங்களில் சிலதைவிட்டும் விலகிவிட்டு, அவற்றில் சிலவற்றை பதவி, காசு பணம் போன்ற உலக நலனுக்காக சுயநலத்துக்காக கண்மூடித்தனமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், மார்க்கச் செய்திகளில் தங்களின் சுயவிருப்பத்திற்கு சாதகமாக இருக்கிற சிலதை செயல்படுத்திவிட்டு, தங்களின் கருத்துக்கும் கயமைத்தனத்துக்கும் பாதகமாக, எதிராக தெரிவதை மறுப்பவர்களாக புறக் கணிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த தன்மை இருப்பதால், தீனில் தெரிந்தே தவறிழைப்பவர்களாக, தடம்புரளக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்
கள். ஆகவே, இத்தகைய தன்மை ஒரு முஸ்லிமிடத்தில் இருக்கலாமா? எந்த மக்கள் இந்த மோசமான பண்பினை வைத்திருந்தார்கள்? இவ்வாறு நடந்துகொண்டவர்கள் எந்நிலையை சந்தித்தார்கள்? என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பனீ இஸ்ராயீல்களின் பண்பு :
இஸ்ராயீல் என்று குறிப்பிடப்படுகிற யஃகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களுக்கு பனீஇஸ்ராயீல்கள் என்று பெயர். பனீஇஸ்ராயீல்களில் இருந்து அல்லாஹ் பல தூதர்களை அனுப்பினான். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் உள்ளவர்கள்தான், மூஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்கள். இவ்வாறாக முன்சென்ற சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் யார் யார்? அந்த சமுதாய மக்கள் சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு முன்னாலும், அறிந்து கொள்கின்ற போதும், அறிந்த பிறகும் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? என்பதை அல்லாஹ் தனது திருமறையில் தெரிவித்துள்ளான். இதன்மூலம் பனீஇஸ்ராயீல் சமுதாயத்தின் செயல்பாடுகளை படிக்கும்போது, அந்த சமுதாய மக்களில் இறைவனின் கோபத்தை சம்பாதித்தவர்கள், அவனின் தண்டனையை தேடிக்கொண்டவர்கள், தங்களின் திருத்தூதருக்கு மாறுசெய்தவர்களெல்லாம் இந்த பண்பினைப் பெற்றிருந்தார்கள் என்ற பேருண்மையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இதற்கான ஆதாரங்களை காண்போம்.
இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர்
அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர்.
மற்றும் சிலரைக் கொன்றனர்.
(அல்குர்ஆன் 5 : 70)
இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர் களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். "நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்துவிலகிவிட்டார்'' என்று அல்லாஹ் கூறினான். அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! அல்லாஹ் நன்மை செய்வோரை விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 5 : 12,13)
பனீஇஸ்ராயீல் சமுதாயத்தை சார்ந்த சிலர், தங்களின் மனோஇச்சைக்கு மனவிருப்பத்துக்கு மாறுபட்டதாக இருப்பதை தூதர்கள் கொண்டுவரும்போது அத்தூதர்களையே கொலைசெய்கின்ற கொலைகாரர்களாக, மாபாதகர்களாக இருந்தார்கள். இவ்வாறு தங்களுக்கு தோதுவாக மார்க்கத்தின் போதனைகளை எதிர்ப்பார்த்ததின் விளைவாகவே அவற்றில் சிலதை மட்டும் எடுத்துக்கொண்டு, சிலதை ஏறெடுத்தும் பார்க்காதவர்களாக இருந்தார்கள். இதை முன்சென்ற வசனங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அந்த வகையிலே அவர்கள் அலட்சியப்படுத்திய காரியங்களையும் அல்லாஹ் அருள்மறையில் அறிவித்திருக்கிறான்.
அவற்றைக் காண்போம்.
"அல்லாஹ்வைத்தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோ ருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். "உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!'' என்று உங்களிடம் உறுதிமொழி எடுத்த போது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள். பின்னர் நீங்கள் உங்களைக் கொலைசெய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக்கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி
இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
(அல்குர்ஆன் 2 : 83, 84, 85)
பனீஇஸ்ராயில்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்ட வேதத்திலே, கைதிகளிடம் ஈட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் உரிமையாளர்களை வெளியேற்றா தீர்கள்' என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அவற்றில் ஒன்றுக்கு மட்டும் கட்டுப்பட்டுவிட்டு மற்றொன்றுக்கு கட்டுப்படாமல் இருந்தார்கள், வரம்புமீறினார்கள். கைதிகளிடம் ஈட்டுத்தொகையை பெற்றுகொள்ளலாம் என்பதை ஏற்று நடைமுறைப்படுத்திய அவர்கள், வீட்டின் உரிமையாளர்களை விரட்டக்கூடாது என்ற வேதவரிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த காரியத்தை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான். ஆகவே, இவ்வாறு வேதத்தில் சிலதை மட்டும் ஏற்றுக்கொண்டு சிலதை மறுக்கின்ற மதிகெட்ட தன்மையை, அரைகுறை நிலைபாட்டினை விட்டும் நாம் விலகிக்கொள்ளவேண்டும். மார்க்கத்தை முழுமையாக பின்பற்றும் முஸ்லிம்களாக மாறவேண்டும்.
வேதக்காரர்களின் பண்பு :
முன்னால் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயங்களான யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தார்கள்.
அல்லாஹ் அவர்களை வேதக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி,அவர்கள் சம்பந்தமாக அதிகமான வசனங்களை அருளியுள்ளான்.
அந்த வேதக்காரர்களிடம் குடிகொண்டிருந்த செயல்பாடுகளைப் பற்றி அறிவித்துள்ளான். அதன்படி, அந்த வேதக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கிற சிலதை மட்டும் ஏற்றுகொள்வது, மற்ற சிலதை நிரகாரிப்பது என்ற மாபாதகமான மோசமான பண்பினை பெற்றிருந்ததால்தான், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேதத்தின் கட்டளைகளுக்கு கட்டுப்படாதவர்களாக இருந்து, இறுதிவேதமான திருக்குர்ஆனின் போதனைகளை புறக் கணிப்பவர்களாகவும் ஏகஇறைவனுக்கு மாறுசெய்பவர்களாகவும் நபிகளாரை பின்பற்ற மறுப்பவர்களாகவும் வாழ்ந்தார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்துவிடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.
(அல்குர்ஆன் 5 : 15)
(முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். "அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 13 : 36)
யூதர்களின் பண்பு :
குறிப்பிட்டு சொன்னால், இந்த மோசமான பண்பில் ஊறிப்போனவர்களாக யூதர்கள் இருந்தார்கள். இதை பின்வரும் வசனங்களின் வாயிலாக விளங்கிக்கொள்ளலாம். "மூஸா (அலை) அவர்களை தூதராக நம்பிக்கை கொண்டோம்; அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத் வேதத்தை பின்பற்றுகிறோம்'' என்று சொல்லக்கூடிய யூதர்கள் தங்களுடைய இந்த கூற்றில் உண்மையானவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மார்க்கத்தின் சட்டதிட்டங்களை தங்களுக்கு தோதுவாக மறைக்கக்கூடிய மாற்றக்கூடிய மறுக்ககூடிய வேலைகளை செய்தார்கள்.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே! கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை
அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது)
உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும்வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 5 : 41)
"எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை'' என்று அவர்கள் கூறிய போது அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. "ஒளியாகவும், மனிதர்களுக்கு நேர் வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை அருளியவன் யார்? அதை ஏடுகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறீர்கள்! அதைப் பகிரங்கப் படுத்துகிறீர்கள். அதிகமானதை மறைத்தும் வருகிறீர்கள்! நீங்களும், உங்கள் முன்னோர்களும் அறிந்திராதவை உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கேட்டு, அல்லாஹ் எனக்
கூறுவீராக! பின்னர் அவர்கள் மூழ்கிக் கிடப்பதில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டு விடுவீராக!
(அல்குர்ஆன் 6 : 91)
இரத்தம், தானாக இறந்தவை, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு
அறுக்கபட்டவை போன்றவை முஸ்லிம்களாகிய நமக்கு ஹராமாக்கப்பட்டிருப்பது போல, யூதர்களுக்கு கொழுப்பை அல்லாஹ் தடுத்திருந்தான். கூரிய நகமுடைய உயிரினங்களை சாப்பிடுவதையும் தடுத்திருந்தான். ஆனால் அவர்கள் இந்த கட்டுப்பாடுகளை கவனிக்காமல் தெரிந்தே வரம்புமீறுபவர்களாகஇருந்தார்கள், அநீதி இழைத்தார்கள். இதற்கு ஆதாரமாக இருக்கிற இறைவசனத்தையும் ஹதீஸையும் காண்போம்.
நகமுடைய ஒவ்வொன்றையும் யூதர்களுக்குத் தடை செய்திருந்தோம். ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளில் அவற்றின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்திருப்பவை, அல்லது எலும்புடன் கலந்து விட்டவை தவிர மற்றவைகளை (கொழுப்புகளை) அவர்களுக்குத் தடை செய்திருந்தோம். அவர்கள் அநீதி இழைத்ததற்காக இவ்வாறு நாம் தண்டித்தோம். நாம் உண்மையே கூறுகிறோம்.
(அல்குர்ஆன் 6 : 146)
இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறினார்கள்: (ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) "அல்லாஹ் இன்னாரை அழிப்பானாக! நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் சாபம் யூதர்கள் மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள்' என்று கூறியுள்ளார்கள் என்பதை அவர் அறியமாட்டாரா?'' என்று உமர் (ர) அவர்கள் கூற நான் கேட்டேன்.
நூல் : புகாரி (3460)
தவ்ராத் வேதத்திலுள்ள விதிகளை பேணுகிறோம் என்று சொல்லக்கூடிய யூதர்கள், கொழுப்பு ஹராமாக்கப்பட்டிருந்தும் அவற்றை விற்று பணத்தை திரட்டுபவர்களாக இருந்தார்கள். இதுமட்டுமின்றி வட்டியை வாங்கி வாழ்க்கை நடத்துபவர்களாகவும் மற்ற மக்களின் பணத்தை, செல்வத்தை அநியாயமாக அபகரித்து அதன் மூலம் ஆனந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தார்கள். இந்த யூதர்களின் பண்பு இன்றைய முஸ்ம்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது, தாமாக செத்ததை சாப்பிடக்கூடாது போன்ற ஹராமானவைகளைத் தவிர்ந்து கொள்ளகூடிய முஸ்லிம்களில் எத்தனையோ பேர், வட்டி வரதட்சனை போன்ற தடுக்கப்பட்ட காரியங்களை தைரியமாக செய்வதை பார்க்கின்றோம். இவ்வாறு இருப்பது முஸ்லிமாகவாழ்பவர்களுக்கு அழகல்ல.
இது யூதர்களிடம் தொற்றியிருந்த கொடிய நோய். இதோ இறைவன் கூறுவதை கேளுங்கள். மேலும் யூதர்கள், தங்களது வேதத்தின் சட்டதிட்டங்களை தங்களின் வசதிக்கேற்ப வளைப்பவர்களாக இருந்ததை வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற நிகழ்வொன்றையும் பார்ப்போம்.
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
(அல்குர்ஆன் 4 : 160)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் யூதர்கள் வந்து யூதர்கல் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறினார் கள். அப்போது அவர்கடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்து தவ்ராத்' வேதத்தில் என்ன காண்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபச்சாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும்,
அவர்களுக்குச் சாட்டையடி வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலத்தார்கள்.
(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தைத் தழுவிய)
அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், "நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை (ரஜ்ம்) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்கல் ஒருவர் கல்லெறி தண்டனை பற்றிக் கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், "உன் கையை எடு!'' என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது.
யூதர்கள், "இவர் (அப்துல்லாஹ் பின் சலாம்) உண்மையே சொன்னார், முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது'' என்று சொன்னார்கள். உடனே (விபச்சாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண் அப்பெண்ணைக் கல்லடியிருந்து காப்பதற்காக அவள் மீது கவிழ்ந்து மறைத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (6841)
ஏப்ரல் தீன்குலப் பெண்மணி - 2011
onlinepj.com