தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!

கடையில்மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?

உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?

தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.

இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.

இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார் ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?

இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.

மேலும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவரும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவரல்ல என்பதற்கு காரணம் அவர்கள் கோமாதைவை குலதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதல்ல. விவசாயத்திற்கும், பாலுக்கும் பயன்படும் கால்நடைகளை அவர்கள் கொல்ல விரும்பவதில்லை. ஆனால் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் வேறு வழியில்லை. இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. மேலைநாடுகள் போல இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலை இங்கு இல்லை. இதன்றி கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் என்பது குடும்பத்தின் பெரிய செலவுகளை ஏற்கும் ஒரு மலிவான முதலீடாக இருக்கின்றது. அவைகள் இறைச்சிக்கென்றே வளர்க்கப்படுகின்றன.

மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.

வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. அக்காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, ஜைன மதங்கள் விவசாயப் பொருளாதாரத்தை காக்கும் வண்ணமும் கால்நடையை பாதுகாக்கும் பொருட்டும் சைவ உணவுப் பழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. அதன் பின்னரே பார்ப்பனிய இந்து மதத்தில் சைவ உணவுப் பழக்கம் வந்ததோடு அசைவ உணவு உண்பவர்களை இழிவாக பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை. அதற்கு இந்துமதவெறி அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் பார்ப்பனப் பண்பாட்டு பாசிசமே காரணமாகும். ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.

மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

இதற்கு மேல் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?

அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.

அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!

சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!
vinavu

திங்கள்

வளி மண்டலத்தில் அதிகரிக்கும் நைட்ரஜன்.

நம்மைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் 78% நைட்ரஜன் (N2) வாயுவும், 21% நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜன்(O2) வாயுவும், 1% கார்பன்- டை- ஆக்ஸைடும் (CO2) மற்ற மந்த வாயுக்களும் ஆர்கான் (Ar), நியான்(Ne) அடங்கியுள்ளன. நைட்ரஜன் எல்லாவித உயிரினங்களுக்கும் அத்தியாவசியமானது. நியூக்ளிக் அமிலம் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றின் மிக முக்கிய அங்கமாக விளங்கக்கூடியது. உணவு உற்பத்தியைப் பெருக்கி, உலக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் நைட்ரஜனின் அளவு சுற்றுப்புறச்சூழலில் அதிகரிப்பதனால் பெரும் பாதிப்பை சந்திக்க போகிறோம் என்பதுதான் இப்போது உலகளவிலான பிரச்சினை.

மனித குலத்தின் பல்வேறு வகையான செயல்களாலும், மிக முக்கியமாக வேளாண்மை, மரபுசார் எரிபொருள் மூலம் பெறப்படும் வெப்ப ஆற்றல் போன்றவற்றிலிருந்து வெளியேறும் நைட்ரஜன், வளிமண்டலத்தில் சேருவதனால் சுற்றுப்புறச்சூழலில் நைட்ரஜனின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சுற்றுப்புறச்சூழல் மட்டுமன்றி மனித உடல்நலம் மற்றும் உயிரினங்கள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உலக வெப்பமயமாதலுக்கும் வழி வகுக்கிறது.

வளி மண்டலத்தில் 78% நைட்ரஜன் இருப்பினும், தாவரங்களுக்கு பயன்படும் வகையில் இல்லை. மூலக்கூறு நிலையில் காணப்படும் நைட்ரஜனை (N2) நேரடியாக பயன்படுத்த இயலாது. மேலும் மூலக்கூறு நிலையில் உள்ள நைட்ரஜன் (N2) அணுக்களுக்கிடையே காணப்படும் முப்பிணைப்பு இயற்கையில் மிகவும் உறுதியானது. இப்பிணைப்பை உடைப்பதற்கு குறிப்பிடத்தக்க ஆற்றல் தேவைப்படுகிறது. தாவரங்கள் இவ்வகை நைட்ரஜனை உபயோகிக்க வேண்டுமானால், நைட்ரஜனுடன் வேறு ஏதேனும் வேதிப்பொருள்கள் அல்லது தனிமங்கள் இணைந்த நிலையில் சேர்மங்களாக இருக்கவேண்டும். இவ்வகை நைட்ரஜனை வினைபடு நைட்ரஜன் எனலாம். புவிப்பரப்பில் உள்ள உயிரியல் ரீதியான, ஒளி வேதியியல் தன்மையுடைய கதிர்வீசும் செயல்திறன் கொண்ட அனைத்து வகை நைட்ரஜன் வடிவங்களும் வினைபடு நைட்ரஜன் ஆகும்.

வினைபடு நைட்ரஜன் சரியான அளவு தாவரங்களுக்கு கிடைக்காமல்போனால் தாவர வளர்ச்சி மற்றும் தானிய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். முழுமையான உற்பத்தி அளவைப் பெற இயலாது. தாவர வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணி நைட்ரஜன் என்பது மறக்க முடியாத உண்மை. அதே வேளையில் மிகுதியான வினைபடு நைட்ரஜனின் அளவு சுற்றுப்புறச்சூழலுக்கும், மனித உடல் நலத்திற்கும் பல்வேறு வகையான தீங்கு விளைவிப்பதுடன், சமூக மற்றும் பொருளாதாரத்திற்கும் பெரும் சீர்கேடு உண்டாக்கும்.

வினைபடு நைட்ரஜன் இயற்கை முறையினாலோ அல்லது மனித செயல்பாடுகளினாலோதான் உருவாக்கப்படுகிறது. இயற்கையான முறைகளில் மின்னல் மற்றும் காடுகளில் ஏற்படும் தீ போன்றவற்றின் மூலம் உருவாகும். அதீத வெப்பத்தினால் மூலக்கூறு நைட்ரஜனின் முப்பிணைப்பு உடைக்கப்பட்டு, வினைபடு நைட்ரஜனாக மாற்றப்படுகிறது. மேலும் சோயா பீன்ஸில் காணப்படும் ஒருவித பாக்டீரியா நுண்ணுயிரிகளாலும், கடலில் உள்ள நீல- பச்சை- ஆல்கா (பாசி) அல்லது சைனோ பாக்டீரியாக்களாலும் (இசஎ) எனப்படும் உயிரி நைட்ரஜன் பொருத்துதல் (பிக்ஷேசன்) முறையில் வினைபடு நைட்ரஜன் உருவாக்கப்படுகிறது.

ஆக்கத்திலிருந்து அழிவு

19-ஆம் நூற்றாண்டின் மத்திய காலக்கட்டத்திற்கு முன்பு, வேளாண்மைக்கு தேவையான வினைபடு நைட்ரஜன் கால்நடைகளின் எரு உபயோகித்தும், பயிர்சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தியும் இயற்கையான முறையிலேயே பெறப்பட்டு வந்தது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மனிதர்களின் உணவுத் தேவைகள் அதிகரித்தன. உணவுத் தேவைக்களுக்காக விளைநிலங்களில் அதிக உற்பத்தி தேவைப்பட்டது. அதே வேளையில், யுத்ததளவாடங்கள் தயாரிக்க நைட்ரைடு (N3-) களின் தேவை வினைபடு நைட்ரஜன் உற்பத்தி செய்ய மேலும் நெருக்கடி உருவாக்கியது. இது 1909-ஆம் ஆண்டு மூலக்கூறு நிலையிலுள்ள நைட்ரஜனிலிருந்து உயர் அழுத்த வேதி முறையில், வினைபடு நைட்ரஜனை (உரம்) செயற்கையான முறையில் உருவாக்குதலை பிரிட்ச்ஹேபர் எனும் ஜெர்மானிய அறிவியலர் கண்டுபிடிக்க அடிகோலியது. 1913- ஆம் ஆண்டு கார்ல் போஸ் மிக அதிக அளவில் வினைபடு நைட்ரஜன் உரங்களை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தார். மேலும் செயற்கை முறையில் நைட்ரஜன் பொருத்துதல் (BNF) வழி நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களிலிருந்து அம்மோனியா (NH3) சேர்க்கை மூலம் உரங்கள் தயாரிக்கப்பட்டது.

அம்மோனியா உரங்கள் (NH3) மிகச்சிறந்த வினைபடு நைட்ரஜன் கொண்டவை. இவ்வாறு தயாரிக்கப்படும் உரங்களைக் கொண்டு மனிதர்களுக்குத் தேவையான உணவு, கால்நடை தீவனங்கள் ஆகிய வேளாண்மை உற்பத்தி தீவிரப்படுத்தப்படுகிறது.

வேளாண்மை உற்பத்தியை பெருக்க பயன்படுத்தப்படும் உரங்களிலிருந்து அம்மோனியா (NH3) நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) மற்றும் நைட்ரஜன் மோனாக்ஸைடு (NO) போன்ற நச்சுப்பொருட்கள் சுற்றுபுறச்சூழலில் விடப்படுவதனால் அதிலுள்ள நைட்ரேட் அயனி (NO-3) மற்றும் அம்மோனியம் அயனி (NH+4)கள் வெளியேறி நில மேற்பரப்பிலுள்ள நீர் மற்றும் நிலத்தடிநீர் ஆகியவற்றில் கலந்து மாசுபடுத்துகின்றன.

மரபுசார் எரிபொருட்களை (பெட்ரோலிய எரிபொருட்கள்) எரிப்பதற்கு வளிமண்டல காற்று தேவைப்படுகிறது. காற்றிலுள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு எரியும்போது, காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் உயர் வெப்பநிலையில் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து நைட்ரஜன் மோனோக்ஸைடாகவும் (NO) நைட்ரஜன்- டை- ஆக்ஸைடாகவும் (NO2) மாறி சுற்றுப்புறச்சூழலில் விடப்படுகிறது. இதனைப் பொதுவாக சஞல என்று குறிப்பிடப்படுகிறது. சஞல மற்றும் பல்வேறு வகையான வினைபடு நைட்ரஜன் உயரே சென்று மேகங்களில் உள்ள நீர்த்துளிகளுடன் (ஈரப்பதம்) வினைபுரிந்து, மழை அல்லது பனிப்பொழிவினூடே நைட்ரிக் அமில மழையாக (NHO3) மண்ணிலும் நீர்நிலைகளிலும் பொழிகிறது. மேலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நீர்நிலைகளில் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வகையான பாசிகள் வளர்வதனால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு, நீர்வாழ் உயிரி வகைகளின் அழிவிற்கு காரணமாகிறது. சஞல வெளியேறுவதனால் உருவாகும் நச்சுத்துகள், நாம் சுவாசிக்கும் காற்றினூடே சென்று பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

1998-ஆம் ஆண்டிலிருந்து 2010 வரையிலான கால அளவில் சுமார் 150 மில்லியன் டன் முதல் 200 மில்லியன் டன் வரை வினைபடு நைட்ரஜன் உரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. வினைபடு நைட்ரஜனின் உற்பத்தி வருடந்தோறும் உயர்ந்துகொண்டே செல்லும் வாய்ப்பும் காணப்படுகிறது. 2050- ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 9 மில்லியன் உலக மக்கள் தொகை உயர்விற்கு தேவையான உணவு இன்றைய அளவைவிட 70% அதிகமாக இருக்குமென உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவிக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு வருடமும் சுமார் 44 மில்லியன் டன் அதிகமாக உணவு உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைக் காட்டிலும் 38% அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் பயிர் செய்யப்படும் விவசாய நிலம் குறைவு. இயற்கையான வனங்களையும், புல்வெளிகளையும், சதுப்பு நிலங்களையும் தவிர்த்துவிட்டு, பயிர்செய்யப்படும் விவசாய நிலம், ஒவ்வொரு வருடமும் கூட்டுவதென்பது இயலாத காரியம். மேலும் இயற்கை வனாந்திரங்களை விவசாய நிலங்களாக்குவது கூரைக்கு தீவைப்பதைப் போன்றது. சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படும். ஆகையால் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலைப் பெறுவதற்கு செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகரிக்கும் மக்கள்தொகை, ஊட்டச்சத்துக் குறைபாடு களைவதன் தேவை, அதிகரிக்கும் மாமிச உணவுத்தேவை, சுற்றுப்புறச்சூழல் பாதிக்காமலிருக்க எண்ணெய் வித்துக்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பதன் தேவை ஆகிய காரணங்களால் நைட்ரஜன் உரங்கள் தயாரிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

அதிகரித்துவரும் மக்கள்தொகையினால் வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியன சுற்றுப்புறச்சூழலில் வினைபடு நைட்ரஜனை வெளியேற்றும் மூலங்கள். பல்வேறு வளரும் நாடுகளில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக நீர்நிலைகளிலும், நதிகளிலும் விடப்படுகிறதெனவும், 35% க்கும் குறைவான நகரங்களில் மட்டுமே (வளரும் நாடுகளில்) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதாகவும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) தெரிவிக்கிறது.

கடந்த வருடம் பிரிட்டீஷ் பெட்ரோலியத்தின் (BP) எண்ணெய் கிணறு கசிவினால் ஏற்பட்ட சீர்கேட்டினை ஐ.நா. வசதியாக மறந்துவிட்டது. கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் போது மூன்றாவது நிலையில்தான் நைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், அனைத்து நாடுகளும் முதல்நிலை சுத்திகரிப்பு மட்டுமே மேற்கொண்டு கழிவுகளை சுற்றுச்சூழலில் வெளியிடும் நிகழ்வுகள்தான் இன்று அரங்கேறி வருகிறது.

பசுமையக வாயுவான (greenhouse gas) கார்பன்- டை- ஆக்ஸைடு (CO2) மட்டுமல்ல சுற்றுப்புறச்சூழல் மாசாவதற்கு முக்கிய காரணம், நைட்ரஜன் மிகுந்த மண் மற்றும் நீர்நிலை ஆகியவற்றிலிருந்து வெளிவரும் நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) மாசு ஏற்படுத்தக்கூடியது. 100 ஆண்டுகளில் நைட்ரஸ் ஆக்ஸைடினால் உலக வெப்பநிலையை அதிகரிக்கும் சாத்தியம் சம அளவு நிறைகொண்ட கார்பன் - டை- ஆக்ஸைடு வாயுவினால் அதிகரிப்பதைப் போல் 298 மடங்கு அதிகம் என காலநிலை மாற்றத்திற்கான ஐ.பி.சி.சி. குழு (IPCC- Intergovernmental panel on climate change)தன்னுடைய நான்காம் மதிப்பீட்டு (AR4 - Fourth Assessment Report) அறிக்கையில் கூறுகிறது. வளிமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்ஸைடின் அடர்த்தி தொழில்யுகம் தொடங்குவதற்கு முன்பிருந்த காலகட்டத்தைவிட 18% அதிகரித்துள்ளது. மேலும் அது 1980-லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 0.3% அளவிற்கு உயர்ந்து வருகிறது.

ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிக்கையின்படி, நான்கில் மூன்று பங்கிற்கும் மேல் நைட்ரஸ் ஆக்ஸைடு மனித செயல் களினாலும், நைட்ரஜன் உரங்கள் உபயோகிப்பதனாலும் கால்நடை எருவிலிருந்தும் வெளிவிடப்படுகின்றது. வளி மண்டலத்தில் ஓசோன் (O3) உருவாவதற்கு முன்னோடியாகத் திகழும் நேர்மறை கதிர்வீச்சு (வெப்பமாகுதல்) நிகழ்வதற்கும் NOX குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.

அகில உலக காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தைகளின்போது IPCC மதிப்பீடுகளானது பசுமை வீடு வாயுக்களில் ஒன்றாக நைட்ரஸ் ஆக்ஸைடை (மறைமுகமாக) உட்படுத்தி, வெளியிடப்படும் அளவு குறைக்கப்பட வேண்டுமென கூறியதே தவிர, நீண்ட கால அளவுகளில் நைட்ரஜன் சுற்று மாறுவதனால் ஏற்படும். பாதிப்புகளை உட்படுத்த தவறிவிட்டது. மாசுகட்டுப்படுத்த மரபுசார் எரிசக்தியிலிருந்து வெளியேறும் ஈஞ2வை மாத்திரம் கட்டுப்படுத்தினால் போதாது, கார்பன் - நைட்ரஜன் இடையே நடைபெறும் வேதிவினைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அறிவியலர்கள்.

கார்பன் - நைட்ரஜன் தொடர்பு இதுவரை மதிப்பீடு செய்யப்படாததே காலநிலை மாற்றம் பேச்சுவார்த்தைகளில் நைட்ரஜன் பங்கினை பற்றிய வாதங்களை தவிர்க்கப்பட்டு வருவதுதான் முக்கிய காரணம்.

வளிமண்டலத்தில் வினைபடு நைட்ரஜனின் அளவு உயர்ந்து வரும் அபாயத்தின் முக்கியத்துவத்தினையும், அது காலநிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள அறிவியலர்கள் மதிப்பீடு செய்ய முயற்சி மேற்கொண்டு, நைட்ரஜன் அளவு மேலாண்மை (அ) நிர்வாகத்திற்கான கொள்கை வரைவுகளை உருவாக்கியுள்ளனர். இதன் விளைவாக 2003-ஆம் ஆண்டு அனைத்து நாடுகளின் அறிவியல் சபை (International Council for Science) பூகோளம்- உயிர்கோளம் திட்டத்தின் கீழ் இன்டர்நேஷனல் நைட்ரஜன் இனிசியேடிவ் எனும் அமைப்பை தொடங்கியுள்ளது. தற்போது, இந்தியாவில் இந்திய நைட்ரஜன் குழு (ING) மனித செயல்களினால் வெளியேறும் வினைபடு நைட்ரஜனின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முயற்சிதான் 5-வது அகில உலக நைட்ரஜன் மாநாடு டெல்லியில் சென்ற மாதம் நடைபெற்றது.

நைட்ரஜன் வெளியீடு நிர்வகிப்பதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவில் CO2 அளவை கட்டுப்படுத்தலாம், சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம் என தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை மனதில்கொண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐ.நா.வின் காலநிலை மாறுபாடு (Cop15) மாநாட்டில் "நைட்ரஜன் மற்றும் காலநிலை' பற்றிய வரைவு அறிக்கை உருவாக்குவது என பல நாடுகள் இணைந்து பேசி முடிவெடுத்தன.

இவ்வாண்டு டெல்லி நைட்ரஜன் மாநாட்டில் விளக்கப்பட்டறையில் வில்லியம் எரிஸ்மான் "நைட்ரஜன் மற்றும் காலநிலை' என்னும் தலைப்பில் வரைவு அறிக்கையை சமர்பித்தார். இதன் இறுதி அறிக்கை இம்மாதம் சமர்பிக்கப்படும். ஒடஈஈ -யின் 5-வது மதிப்பீட்டு அறிக்கை 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்படும்.

சுற்றுப்புறச்சூழலில் வெளியிடப்படும் கார்பன்- டை- ஆக்ஸைடு அளவில் பகுதி அளவை தாவரங்கள் உறிஞ்சிக்கொள்கின்றன. ஆனால் அது உறிஞ்சப்படும் அளவை நிர்ணயிப்பதில் நைட்ரஜன் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு வினைபடு நைட்ரஜன் உருவாக்கப்பட்டுவிட்டால் அது ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சுற்றுச்சூழலில் தங்கியிருக்கும். வேளாண்மையின் மூலம் உருவாக்கப்படும் வினைபடு நைட்ரஜனில் பகுதி அளவு மீண்டும் மூலக்கூறு நைட்ரஜனாக (N2) மாற்றமடைகிறது. எஞ்சியுள்ளவை, சுற்றுச்சூழலில் தங்கி, நீர்நிலைகளிலோ, நிலத்தடி நீரிலோ, நன்னீரிலோ, மனித உடல்நலத்திற்கோ, பயிர்களுக்கோ கேடு விளைவிக்கும்.

காலநிலை மாற்றத்தில் வினைபடு நைட்ரஜனின் நேரடித் தொடர்பானது நைட்ரஸ் ஆக்ஸைடு உருவாகி சுற்றுச்சூழலில் தங்கியிருத்தல், புவியின் வெப்பநிலையை உயரச்செய்தல், புவியின் மிகக்குறைந்த உயரத்திலேயே ஓசோன் படலம் உருவாக்க துணைபுரிதல் ஆகியவை. வினைபடு நைட்ரஜன், தாவரங்களின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து காரணியை கட்டுப்படுத்துவதால், சுற்றுச்சூழலில் அதன் உயர்ந்த அளவு (சரியான) உள்ளபோது, தாவரங்கள் CO2 எடுத்துக்கொள்ளும் அளவு நிலையாக இருக்கும். வினைபடு நைட்ரஜன் அளவு மேலும் உயரும்போது CO2 எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்து தாவர- மண் அமைப்பு நிலையற்ற தன்மையுடையதாகிறது.
ஐரோப்பிய நைட்ரஜன் மதிப்பீட்டுத் திட்டத்தின் கணிப்புப்படி, சுற்றுப்புறச் சூழலில் வினைபடு நைட்ரஜனின் உயர்வு காரணமாக தாவரங்கள் CO2எடுத்துக்கொள்வதாலும் ஏரோசோல் உருவாவதினாலும் ஏற்படும் குளிர்வு (-43 மில்லி வாட்/ மீ2) வெப்பமடைதலைக் (25 மில்லி/வாட் மீ2) காட்டிலும் அதிகம். மொத்த குளிர்வு -18 மில்லி வாட்/ மீ2 அளவிற்கும், 0 மில்லி வாட்/மீ2க்கும் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடு இருப்பதாக தோன்றவில்லை.

எனவே கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை கணக்கில் எடுத்துக்கொண்டு, நைட்ரஜன் உயர்வு சுற்றுப்புறச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்து, அதனை கட்டுப்படுத்த வழிவகை செய்வதே சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க இனிவரும் உலகம் மேற்கொள்ள வேண்டிய தலையாய கடமை. தவறினால் உலகம் இனி மெல்ல அழியும்!
source:பொது அறிவு உலகம்

யார்? இந்த ரஜினிகாந்த்

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா?

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
இந்த பத்திரிக்கைகள்தான் ஆதிக்க சக்திகளின் கைகளில் போகி விட்டது என்று பார்த்தால். மீதம் இருக்கும் இந்த வலைத்தலங்கலாவது உருப்படியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் என்றால்? இவர்களும் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல பதிவர்கள் கூட சினிமா செய்திகளை போட்டால்தான் நம் இணைய தளத்தையும், நாம் போடும் போஸ்ட்களையும் முன்னுரிமை தருவார்கள் என்ற மனநிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

!
எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம். அன்புடன்: ஆசிரியார் புதியதென்றல் 

வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்.


வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.

மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வகுப்பு கலவரங்களை தடுக்க அளவுகோல்களை வெளியிடவும், மறுவாழ்வு திட்டங்களை தயாராக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என வரைவு மசோதா தெரிவிக்கிறது.சேர்மன், துணை சேர்மன் தவிர ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆணையத்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும் எனவும், மீதம் 4 பேர் பெண்கள் எனவும் மசோதா கூறுகிறது.

ஆணையத்தின் உறுப்பினர்கள் மீது எவ்வித வழக்குகளும் இருக்க கூடாது.இதன் உறுப்பினர்களின் பதவிக்கான கால வரம்பு ஆறு வருடங்களாகும். சுயமாக வழக்கை எடுத்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. அரசும் அரசுசாரா நிறுவனங்களும் புரியும் குற்றங்களும் விசாரணை எல்லைக்கு உட்படும்.பிரதமர் தலைவராக செயல்படுவார். எதிர்கட்சி தலைவர், உள்துறை அமைச்சர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். மத்திய செயலாளர் மட்ட அதிகாரி ஆணையத்தில் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார்.மேலும் மாநில, மாவட்ட மட்டங்களில் கணக்கெடுப்பு குழு உருவாக்கப்படும்.மாநில அளவில் முதன்மை செயலாளர் சேர்மனாகவும், மாவட்ட நீதிபதியும், ஏதேனும் மனித உரிமை குழுவின் பிரதிநிதி உறுப்பினராக இருப்பார். இக்குழு விசாரணை நடத்தி இழப்புகளை மதிப்பீடு செய்யும்.மறுவாழ்வு திட்டம் தயார்செய்யும். மாவட்ட அளவில் கலெக்டர் தலைவராக இருப்பார்.

ஏதேனும் ஒரு குழுவில் அங்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு இழிவு ஏற்படுத்தும்விதமாக தனிநபருக்கோ, அவரது சொத்துக்களுக்கோ, காயமோ, ஆபத்தோ ஏற்படுத்தும் விதமான திட்டமிட்ட, எதேச்சையான எவ்வகையிலான செயல்களும் தொடர் செயல்களும் வகுப்புவாத தாக்குதலாக கருதப்படும். குழு என்பதன் பொருள் மத, மொழி சிறுபானமையினரோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினர்களோ ஆவர் என மசோதா தெளிவு படுத்துகிறது.தனிநபருக்கோ, அவருடைய சொத்துக்களுக்கோ உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் மனசாட்சியின் படியும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டால் அவரை பாதிக்கப்பட்டவராக கருதப்படும்.

கலவரத்தை கட்டுப்படுத்தவும், அதனை தடுப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்காத உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், மேல் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத பணியாளர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக கருதப்படுவர்.அமைப்புரீதியான கலவரம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.எஸ்.ஐக்கு கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள் இக்குற்றங்களை விசாரிப்பர்.பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் அளிக்கும் வாக்குமூலங்களில் மாற்றம் செய்தால் அல்லது மேலதிகமாக ஏதேனும் சேர்த்தால் அத்தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மற்றும் போலீஸ் டெபுட்டி கமிஷனர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும்.வாக்குமூலத்தின் நகலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லது தகவல் அளித்த நபர்களுக்கு அளிக்கவேண்டும்.இதர சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகலை பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு.
thoothu

ஞாயிறு

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை!



 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
 
ஷிராஸ் எனும் நகரில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இத்தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் கொலை,பாலியல், வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் என்பவற்றுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் எனவும், இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத்தண்டனை வழங்கப்படுவது நியாயமானதே என ஈரான் அரச விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தில் மாத்திரம் 143 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவிற்கு அடுத்த படியாக அதிகபடியான மரண தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
                                                                    4tamilmedia

சனி

பெரியகுளம் எம்.எல்.ஏ., அலுவலகம் தேனியில் செயல்பட நடவடிக்கை

தேனி : பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் தேனியில் செயல்படும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி, பெரியகுளம் தனித்தனி தொகுதிகளாக இருந்த போது தேனியில் பெரியகுளம் ரோட்டில் பெத்தாட்ஷி விநாயகர் கோயில் அருகிலும், பெரியகுளத்தில் அழகர்சாமிபுரத்திலும் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் கட்டப்பட்டது. தேனி, பெரியகுளம் தொகுதிகள் மறுசீரமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர், எந்த எம்.எல்.ஏ., அலுவலகத்தை செயல்படுத்துவது என்ற குழப்பம் எழுந்தது. தற்போதைய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லாசரிடம் அதிகாரிகள் கருத்துகேட்டனர். தேனியில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள் இருப்பதாலும், முக்கிய அரசு அலுவலகங்கள் இருப்பதாலும் தேனியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தையே பயன்படுத்த முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தேனியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை லாசர் பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
                                                                          நன்றி். தினமலர்

முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள்

தேனி:பத்தாம் வகுப்பு மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் வருமாறு:பெரியகுளம் கல்வி மாவட்டத்தில்,தேனி என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ் (493/500)முதல் இடத்தையும், தேனி என்.எஸ்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா, ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செந்தான் அமுதன், மருதுபாண்டி ஆகியோர் (491/500) இரண்டாம் இடத்தையும் பெற்றனர். என்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிரோஷினி (490/500)மூன்றாம் இடத்தையும் பெற்றனர். உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில், போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மே.நி.ப.,மாணவர் அமர்நாத்(493/500) முதல் இடத்தையும், உத்தமபாளையம் முகமது பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி, போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் பள்ளி மாணவி பிரியங்கா, ராயப்பன்பட்டி செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா, கூடலூர் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஞான சங்கீத்ராஜ் ஆகியோர்(491/500) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.மூன்றாம் இடத்தை ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மே.நி.பள்ளி மாணவி சவீதா, செயின்ட் ஆக்னஸ் பெண்கள் மே.நி. பள்ளி மாணவி திவ்யபாரதி, ராயப்பன்பட்டி எஸ்.யு.எம்.மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது ரமீஷ் ஆகியோர் (490/500)மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ், (493/500) கூறுகையில், அதிகாலை 4 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் படிப்பேன். பள்ளியில் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வுகள் பயனுள்ளதாக அமைந்தன. என்றார்.போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் அமர்நாத்(493/500) கூறுகையில், "தொடர்ந்து தேர்வுகள் நடத்தியதும், வெளி ஆசிரியர்களை கொண்டு அவற்றை திருத்தி மதிப்பெண் வழங்கியதும், அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்தது.'என்றார்.இவர்கள் இருவரும் தேனி வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.இ.ஞானசங்கீத்ராஜ், (491/500)கூறுகையில் (என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, கூடலூர்) டியூசனுக்கு செல்லாமல் திட்டமிட்டு படித்தேன். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து விடுவேன். இரவு 10 மணிக்கு மேல் கண்விழித்து படிப்பதில்லை. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தது கூடுதல் மதிப்பெண் பெற உதவியாக இருந்தது என்றார்.
                                                                        நன்றி். தினமலர்

வெள்ளி

என் மகன் தீவிரவாதி இல்லை; நியாஸின் தாய் பேட்டி

பிரான்ஸில் சந்தேகத்தின் பேரில் கைதான மேலூரைச் சேர்ந்த பொறியாளர் முகமது நியாஸ் எந்தத் தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர்; அவரை பிரான்ஸிலிருந்து மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் பாத்திமா தெரிவித்தார்.

பிரான்ஸ் விமான நிலையத்தில், சிமி இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் முகமது நியாஸ் உள்ளிட்ட சிலரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பிரான்ஸ் போலீஸார் அளித்த தகவலின் பேரில், மத்திய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக மதுரை மாவட்டம், மேலூர் சந்தைப்பேட்டை தெருவில் வசித்துவரும் முகமது நியாஸின் தாயார் பாத்திமா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

"என் கணவர் அப்துல் ரஷீத், மதுரையில் உள்ள தனியார் நூற்பாலையில் துணை மேலாளராகப் பணிபுரிந்தவர். இப்போது கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார்.

எங்கள் மகன் முகமது நியாஸ், மதுரை மேலப்பொன்னகரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பின்னர் கீழக்கரை பாலிடெக்னிக்கில் படித்தார். திருச்சி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியாளர் பட்டம் பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவருக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது சரியல்ல. அவருக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருந்தால் நாங்களே போலீஸில் ஒப்படைத்து இருப்போம். எவ்விதமான குற்றச் செயலிலும் என் மகன் ஈடுபட்டது இல்லை.

ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?

புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தபோது, என் மகன் இங்குதான் தங்கியிருந்தார். அப்போது, இன்டர்நெட் மூலம் ஹபீப்புன்னிஸா என்ற பெண்ணை பார்த்ததாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம்.

எந்தவிதமான குற்றச் செயலிலும் தொடர்பு இல்லாத என் மகனை பிரான்ஸ் போலீஸாரிடமிருந்து மீட்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார் அவர்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தீவிரவாதி என கைது செய்யப்பட்ட பெங்களூரை சார்ந்த டாக்டர் ஹனீஃப் பின்னர் குற்றமற்றவர் என தெரியவந்து அந்நாடு விடுதலை செய்தது. ஹனீஃபின் நிலைமை தான் நியாஸிற்கு ஏற்பட்டிருக்குமோ என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது

வியாழன்

அமெரிக்கா -அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது

அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள், நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச்சூறாவளிக்கு இன்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை, 200ஐ தாண்டி விட்டது.

அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் தேதி, மணிக்கு 320 கி.மீ., வேகத்தில், "டொர்னடோ' என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில், 122 பேர் பலியாயினர். அதைத் தொடர்ந்து, நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில், ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. இதில், ஐந்து பேர் பலியாயினர். எல் ரெனோ நகரில், "டொர்னடோ' தாக்கியதில், ஒரு காஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. எல் ரெனோ நகரில் பதிவான குறிப்புகளின்படி, "டொர்னடோ' மணிக்கு 243 கி.மீ., வேகத்தில் வீசியுள்ளது.ஒக்லஹாமா நகரின் கனடியன் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன.அதேபோல், கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்களையும் "டொர்னடோ' தாக்கியது. இதில், அர்கன்சாஸ் மாகாணத்தில் பிராங்க்ளின் மற்றும் ஜான்சன் பகுதிகளில் இருவர் பலியாயினர். கன்சாஸ் மாகாணத்தில் இருவர் பலியாயினர்.இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், ஏற்கனவே, "டொர்னடோ'வால் பாதிக்கப்பட்ட மிசவுரி மாகாணத்தின் ஜாப்ளின் நகர மக்கள், மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்."டொர்னடோ' பயணித்த பகுதிகளில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவைப் பொறுத்தவரை, இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால், மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளை, அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 29ம் தேதி நேரில் பார்வையிடுவார் என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வீணாகும் காய்கறிகளை கொண்டு மண்புழு உரம்: கவுன்சிலர் எதிர்பார்ப்பு

பெரியகுளம் : மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்து நகராட்சிக்கு வருவாயினை பெருக்கவேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட உழவர்சந்தை, தென்கரை மார்க்கெட், வடகரை சின்னமார்க்கெட் பகுதிகளில் மொத்த வியாபார கடைகளும், சில்லரை வியாபார கடைகளும் உள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி, கிராமப்பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் காய்கறிகள் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ காய்கறிகள் விற்பனையாகிறது. இவற்றில் தினமும் குறைந்த பட்சம் 50 கிலோ காய்கறிகள் அழுகி, அடிபட்டு வீணாக மார்க்கெட் பின்புறம் மற்றும் வராகநதியில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குப்பை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வராகநதியில் அழுகிய காய்கறிகளை கொட்டுவதால் நீர் மாசுபடுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் வீணாகும் காய்கறிகளை சேகரித்து மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்கமுன் வரவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிளஸ் 2 மார்க் பட்டியலுக்கு... வசூல் செய்யும் பள்ளிகள் மீது...நடவடிக்கை

பெரியகுளம் : பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 44 மேல்நிலைபள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் நேற்று முதல் மார்க் பட்டியல் தப்படுகிறது. இப்பட்டியல்களை இலவசமாக வழங்குமாறு அரசு தெரிவித்துள்ளது. எச்சரிக்கை: கடந்த ஆண்டில் சில பள்ளிகளில் பிளஸ் 2 மார்க் பட்டியல் மற்றும் டி.சி., வழங்கப்படும் போது மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. எச்சரிக்கை: அதேபோல் தற்போது மாணவ, மாணவிகளிடம் மதிப்பெண் பட்டியல் வழங்கும்போது பணம் வசூல் செய்யும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலகம் எச்சரித்துள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மார்க் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் வழங்க எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்யும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.

செவ்வாய்

இந்த வார உணர்வில்.. (மே 27)


தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,049 பேர் ஹஜ் பயணம்

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,049 பேர் புனித ஹஜ் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 24) நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தமிழக ஹஜ் குழுத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார்.

இதில் டி.கே.எம்.சின்னையா பேசியதாவது: இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு 3,049 பேர் செல்லவுள்ளனர். மத்திய அரசிடம் வலியுறுத்தி அடுத்த ஆண்டு தமிழகத்துக்கு கூடுதல் இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றார்.

அபுபக்கர் பேசியதாவது: 2010-ல் 2,994 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அரசின் கூடுதல் ஒதுக்கீட்டின்போது 4,147 பேர் சென்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 10,458 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் குலுக்கல் மூலம் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய 3,049 பேர் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அவருடன் ஒருவர் சேர்ந்து செல்லும் சிறப்பு திட்டத்தின் கீழ் குலுக்கல் இன்றி நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வகையில் தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகள் 980. மீதமுள்ள 2,069 பேர் பொது ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள சுமார் 7,400 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு கூடுதல் ஒதுக்கீட்டின்போது தேர்வு செய்யப்படுவர். தமிழகத்துக்கு கூடுதல் ஹஜ் பயண இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 1,500 ஹஜ் பயணிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் சந்தானம், தமிழக ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நுழைவுத்தேர்வு:கேரளாவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து முஸ்லிம் மாணவர்கள் சாதனை

கேரள மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் 77,335 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை முஸ்லிம் மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மலப்புறத்தை சார்ந்த இர்ஃபான் 944.7887 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கல்லூரி பேராசிரியரான இவரது தந்தை இறந்துவிட்டார். கொல்லம் மாவட்டத்தை சார்ந்த என்.ஷம்மி 934.5009 மதிப்பெண்களை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் திருச்சூர் மாவட்டத்தில் முதலிடத்தை எம்.எ.அஹ்மத் கபீர் பெற்றுள்ளார்.

திங்கள்

கோத்ரா:குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல் முறையீடு

கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீவைப்பு வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 31 பேர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ஹாஜி பிலால், முஹம்மது கர்கர், பின்யாமின் பெஹ்ரா, ஹஸன் சார்க்கா, யூசுஃப் ஸர்தா, மெஹபூப் அஹ்மத் ஆகியோரும், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டோரும் மேல் முறையீடு செய்துள்ளனர். கோடைக்கால விடுமுறை முடிந்த பிறகு உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.எம்.பன்சால் தெரிவித்துள்ளார்.

2011 மார்ச் மாதம் 1-ஆம் தேதி சிறப்பு விசாரணை நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. 2002-இல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்களின் மேல் சுமத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக கொலைச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்!


திருச்சி: திருச்சி அருகே பாடலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.


சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது.  பாடலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்..



திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .மி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை. லாரியை பிடிக்க அருகில் உள்ள மாவட்ட எல்லை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பலியான அமைச்சர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லலப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது மரியம் தியேட்டரில் வைக்கப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

விபத்தில் பலியான பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

 சட்டசபை முதன் முதலாக இன்று கூடவிருந்தது. இதில் தற்காலிகமாக நேற்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தமிழரசன் இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் விபத்தில் அமைச்சர் இறந்து விட்டதால் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சபை கூடுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரின் உடலை பார்க்க முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதியம் ஒரு மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்படவிருக்கிறார்.

சமச்சீர் கல்வி இல்லை ; பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது; தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு

இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் , இது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


முதல்வராக பதவியேற்ற ஜெ., இன்று அமைச்சர்களுடன் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலர், மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், மற்றும் வரும் நிதியாண்டில் செயல்பட வேண்டிய கல்வி நிலை குறித்தும் , மின்வெட்டு சமாளிப்பது , மக்கள் பணிகள் விரைந்து நடக்க அதிகாரிகளை முடுக்கி விடுவது , பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

சம்சீர்கல்வி கல்வித்தரம் உயர்த்தும்படியாக இல்லை: அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழி செய்யாது . எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும் , இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை வரும் 15 ம் தேதி திறக்கலாம் என்றும் உத்தரவிடப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதம் 6 ம்தேதி மேட்டூர் அணையை திறக்கவும் உத்தரவிடப்பட்டது. வழக்கமாக 12 ம் தேதிக்கு பின்னர் தான் அணை திறக்கப்படும் ஆனால் இந்த முறை விரைந்து திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு

மக்கள் பணியாற்ற முன்வந்திருக்கும் 120 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!

தேர்தல் கமிசன் விதித்திருந்த நடைமுறைகளுள் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துக்கணக்கு, குற்றப் பின்னணி ஆகியவைகளையும் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்க வேண்டும் என்பதும் அடங்கும். அத்தகைய நடைமுறை மூலம் தமிழக சட்டசபைக்கு எம்எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களோடு ஆய்வு செய்யப்பட்டதில் 234 எம்.ஏல்.ஏக்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள். இது மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 52% ஆகும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல்.ஏ.க்களில் 57 பேர் மட்டும்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

தற்போதைய 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் 23 திமுக எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள். ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மூன்றுபேரும், 146 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 55% பேரும் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.

மக்கள் நலப்பணியில் கோடீஸ்வரர்கள் ஆர்வமாக ஈடுபட்டிருப்பது, உலக நாடுகளிடையே நமது ஜனநாயகத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது. என்றாலும், கோடிகளைத் தக்கவைத்து நிரந்தர கோடீஸ்வரர்களாக இருக்கவே, அவர்களில் பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரியாமலா இருக்கும்?
-INNERAM

சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்களை தயார் செய்ய நீதிபதி சச்சாரிடம் ஆலோசனை-மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள மாநிலத்தில் 34 ஆண்டுகளாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு முதல்வராக பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார்.


முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளைக் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.அப்பொழுது அவர் கூறியதாவது:விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் இருந்து சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்படும். இது தான் மேற்கு வங்க அமைச்சரவையின் முதல் முடிவு மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜங்கல் மஹால் பகுதிக்கு சிறப்புத் பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.

டெல்லியில் பிரதமர் அலுவலகம் இருப்பது போன்று கொல்கத்தாவில் விரைவில் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படும். இதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து மேற்கொள்ள முடியும். சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும். மாநிலத்தில் சட்டம், ஒழுங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அரசியல் விவகாரங்களால் கைது செய்யப்பட்டோர் குறித்து ஆய்வு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். வாரத்தில் சனிக்கிழமை கட்டாய அமைச்சர்கள் உள்பட அனைவருக்கும் கட்டாய செயல்தினமாகும். சிறுபான்மை மக்களுக்காக நலத்திட்டங்களை உருவாக்க நீதிபதி சச்சாரின் உதவி தேடப்படும். இவ்வாறு மம்தா கூறினார்.

வெள்ளி

இறைத்தூதரை அவமதித்த மாத இதழின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் முஸ்லிம்கள் போராட்டம்

காமிக் வேர்ல்டு என்ற மாத இதழ் இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களைக்குறித்து மோசமான கற்பனை சித்திரங்களும், பொய்கள் அடங்கிய வாழ்க்கை சரித்திரத்தையும் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளாரின் மீது கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக அவதூறுகளை அள்ளி வீசுவது தொடர்கதையாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக டயமண்ட் காமிக்ஸ் பப்ளிசிங் ஹவுஸ் டெல்லியிலிருந்து பிரசுரித்த காமிக் வேர்ல்ட் டைஜஸ்ட் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளை வெளியிட்டது.இதில் நபி(ஸல்)அவர்களைக்குறித்த மோசமான கற்பனை சித்திரங்களும், அவர்களுடைய வாழ்க்கை சரித்திரத்தை திரித்து, பொய்களை கலந்து மாத இதழில் வெளியிட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அவதாரமான(அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) முஹம்மது நபியின் படங்களுக்கு முன்பு பூஜை செய்வதாகவும், நபிகளார் தனது காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கு சென்று மக்கள் அச்சுறுத்தியதாகவும் ’இறைத்தூதர் முஹம்மது யார்?’ என்ற தலைப்பில் அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.இதனை கண்டித்து முஸ்லிம்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தினர்.நபி(ஸல்)அவர்களை அவமதித்த காமிக் வேர்ல்ட் பத்திரிகையின் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

நெய்வேலி மின் திட்டத்திற்கு அனுமதி

தமிழகத்தில் 5,907 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அனல் மின் நிலையம் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழுப்பு நிலக்கரியைக் கொண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உதவும் இந்த திட்டத்தை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் செயல்படுத்துகிறது. இந்த மின் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.இந்த புதிய மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தென்மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு பிரிவுகளாக இந்த மின் திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் இது அமைக்கப்படுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், நெய்வேலியில் மூன்று அனல் மின் நிலையங்களை ஏற்கனவே இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன்

ஷஹீத் உசாமா பின் லேடன் பற்றிய உண்மையான ஆவணத்தொகுப்பு



முஸ்லிம் உம்மாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் ஷெய்க் அஷ் சஹீத் உஸாமா பின் லாதின் தொடர்பாக்க பலரும் பல கதைகளை சொல்லிவருகின்றனர் அந்த கதைகளில் பல கதைகள் மேற்கு உளவு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கதைகளும் மிடியாக்களில் உலா வரும் வேலை இன்னும் பலரும் ஊகங்களின் அடிப்படையிலும் கதைகளை சொல்லிவருகின்றனர் இந்த வேளையில் அல் ஜெஸீரா தொலைக்காட்சி அவர் பற்றிய சிறிய ஆவணம் ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது அந்த ஆங்கில ஆவணம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.



அந்த ஆவணத்தில் தன்சானியா , கென்யா அமெரிக்கா தூதரகங்களை தாம் தகவில்லை என்ற ஷெய்க் உஸாமாவின் மறுப்பு பதிவாகியுள்ளதுடன் அவர் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ எதிரானவர் அல்லர் ஆனால் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்ளைக்கு எதிரானவர் என்று அவர் தெரிவித்ததும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பானது அதேவேளை அஷ் சஹீத் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்ஸாம் ஆப்கானிஸ்தானில் அவரின் ஜும்மாஹ் குத்பாவின் பின்னர் அவரின் குழந்தைகளுடன் கொல்லப்பட்டமை தொடர்பில் CIA, மொசாட் ஆகியவற்றுடன் மிக பிரதான சூத்திரதாரியாக ரஷிய KGB யும் சந்தேகிக்கப்பட்டமை சுட்டிகாட்டப் படவேண்டிய விடயமாகும்,  அல் ஜெஸீரா தொலைக்காட்சியின் இந்த ஆவணம் ஓரளவு நடுநிலை பார்வையை வழங்குகின்றது.

25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்.)

டி.ராஜேந்திரன் - உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி.,-(சிறைத் துறை ஏ.டி.ஜி.பி.,)

எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., - (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏ.டி.ஜி.பி.,)

கே.ராதாகிருஷ்ணன் - தமிழ்நாடு மின்வாரிய விழிப்புப்பணி ஏ.டி.ஜி.பி., - (சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,)

எஸ்.ஆர்.ஜாங்கிட் - நாகர்கோயில் போக்குவரத்துக் கழகத்தின் விழிப்புப் பணி முதன்மை அலுவலர் - (மத்திய போலீஸ் சேர்க்கைப் பள்ளி, சென்னை (தலைமையிடம்).

எம்.எஸ்.ஜாபர் சேட் - ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அலுவலர்

பி.சிவணான்டி - திருச்சி மாநில போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம் கோட்டம்)முதன்மை விழிப்புப் பணி அலுவலர் - (மேற்கு மண்டல ஐ.ஜி., கோவை.)

பி.தாமரை கண்ணன் - சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையாளர், சென்னை - (ஐ.ஜி., நிர்வாகம் (சென்னை)

சஞ்சய் அரோரா - போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் - (குற்றப் பிரிவு மற்றும் போலீஸ் தலைமையிட கூடுதல் ஆணையாளர்.)

அபய் குமார் சிங் - குற்றப் பிரிவு மற்றும் போலீஸ் தலைமையிட கூடுதல்

ஆணையாளர் - (சென்னை போலீஸ் தலைமையிட ஐ.ஜி.,)

ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் - ரயில்வே டி.ஐ.ஜி., - (விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,)

கே.பி.சண்முக ராஜேஸ்வரன் - சென்னை போலீஸ் தென் மண்டல இணை ஆணையாளர் - (திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.,)

கே.சங்கர் - சென்னை போலீஸ் மத்திய மண்டல இணை ஆணையாளர் - (மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்புதல்.)

என்.கே.செந்தாமரைக் கண்ணன் - சென்னை போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையாளர் - (ஆயுதப்படை ஐ.ஜி.,)

கே. பவானீஸ்வரி - சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையாளர் - (கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.,)

ஆஸ்ரா கர்க் - சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் - (மதுரை மாவட்ட எஸ்.பி.,)

ஆர்.சுதாகர் - சென்னை போலீஸ் போக்குவரத்து துணை ஆணையாளர் (தெற்கு) - (தருமபுரி மாவட்ட எஸ்.பி.)

ஜோஷி நிர்மல் குமார் - சென்னை போக்குவரத்து துணை ஆணையாளர் (வடக்கு) - (திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,)

அனிஷா ஹுசைன் - சென்னை போக்குவரத்து துணை ஆணையாளர்(மத்தியப் பகுதி) - (தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை கமாண்டட், வீராபுரம்.)

எஸ்.வி.கருப்பசாமி - மயிலாப்பூர் துணை ஆணையர் (சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளர்)

ஆர்.திருநாவுக்கரசு - தியாகராய நகர் துணை ஆணையர் (குற்றப்பிரிவு தகவல் ஒருங்கிணைப்புப் பிரிவு கண்காணிப்பாளர் )

கே.ஏ.செந்தில்வேலன் - அடையார் துணை ஆணையர் (தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,)

அஸ்வின் எம்.கோட்னீஸ் - புளியந்தோப்பு துணை ஆணையர் (கடலூர் மாவட்ட

எஸ்.பி.,).

அவினாஷ்குமார் - வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 11 வது படைப்பிரிவு கமாண்ட்ண்ட்).

டி.எஸ்.அன்பு - பூக்கடை துணை ஆணையர் (வேலூர் மாவட்ட எஸ்.பி.,).

என்.கண்ணன் - திருவல்லிக்கேணி துணை ஆணையர் (கோயம்புத்தூர் மாவட்ட எஸ்.பி.)

செவ்வாய்

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!

ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

இந்தத் தேர்தலில் கொங்குவேளாளர், தேவர், நாடார், நாயுடு முதலான ஆதிக்க சாதி சங்கங்கள் – கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியை ஆதரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் ஆதரித்த்து எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அங்கத்தினர்கள் வீட்டில் வடை பாயாசத்தோடு கொண்டாடி வருவது குறித்து அறிவீர்களா? ஆதாரம் வேண்டுவோர் அந்தக் கொண்டாட்டத்தை தினுசு தினுசாக நடத்தி வரும் தினமலர் பத்திரிகையை புரட்டினாலே போதும்!

இந்துத்வாவின் இந்திய நாயகன் மோடி, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் முதலானோர் ஜெயா பதவி ஏற்பு விழாவில் முக்கிய நாயகர்கள். தமிழகத்தில் பா.ஜ.க தனியாக போட்டியிட்டதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு. “இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களிலே ஒரே இந்து முதல்வர் புரட்சித் தலைவிதான்” என்று பார்ப்பன இந்து முன்னணி இராமகோபாலன் வாயால் பாராட்டப்பட்டிருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.க என்று ஒரு அரசியல் கட்சியே தேவையில்லையே?

அப்படித்தான் தினமலரும் ‘அம்மா’வின் அறிவிக்கப்படாத கோயாபல்சாக எழுதி வருகிறது. தினமலரை அதன் விரிவான செய்தி கவரேஜூக்காக வாசகர்கள் பார்க்கிறார்கள் என்றால் வருபவர்களை கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக போயஸ்தோட்டம் உள்ளிட்ட அக்ரகாரங்களுக்கு அழைத்துச்செல்வதை தினமலர் ஒரு கடமையாகவே செய்கிறது.

ஜெய கும்பலின் வெற்றியை புதிது புதிதாக எழுதி வரும் தினமலர் அதில் ஒன்றாய் இந்த பெரிய கோவில் சமாச்சாரத்தை வெளியிட்டிருக்கிறது. பெரியகோவிலுக்கு செல்லும் பிரபலங்கள் தமது பதவியையோ இல்லை உயிரையோ இழப்பார்கள் என்பது ஐதீகமாம். ஏற்கனவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், சங்கர்தயாள் சர்மா போன்றவர்களுக்கு அப்படி நடந்திருக்கிறதாம். அவர்கள் உயிரை இழந்தார்களா, இல்லை பதவியை இழந்தார்களா, இல்லை இரண்டையும் இழந்தார்களா என்பதை மட்டும் தினமலர் குறிப்பிடவில்லை.

சென்ற ஆண்டு பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த கருணாநிதியும் அந்த சென்டிமெண்டை மனதில் கொண்டு முன்வாசல் வழியாக வராமல் பின்வாசல் வழியாக கோவிலுக்கு சென்றாராம். அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா இப்போது திகார் சிறையில் இருக்க கருணாநிதியோ பதவியை இழந்திருக்கிறாராம்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி இறப்பதற்கு கூட இதுதான் காரணமென்று இப்போதே தினமலர் அறிவித்திருக்கிறது. இருக்கட்டும், ராசா பேசிய அதே விழாவில் நாட்டிய பிரபலம் பத்மா சுப்பிரமணியம் ஆயிரம் நடனக் கலைஞர்களோடு பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினாரே அவரும் பிரபலம்தானே? தினமலர் ஆய்வு முடிவுப்படி அவரும் இதற்கு முன்போ இல்லை கூடிய சீக்கிரமோ மண்டையைப் போடவேண்டுமே? ஒரு வேளை இந்த உயிர் துறக்கும் பெரியகோவில் சாஸ்திரம் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் கிடையாதோ?

எப்படியெல்லாம் மூடநம்பிக்கையை வெட்கமற்று அயோக்கியத்தனமான முறையில் பரப்புகிறார்கள் பாருங்கள்! தனது கோவிலுக்கு வரும் பிரபலங்களை ஒரு ஆண்டவன் கொல்கிறான் என்றால் அவன் கடவுளா இல்லை டிராகுலாவா? இதற்கு முன் இப்படி பல பிரபங்களை அந்த பெருவுடையார் கொன்றிருக்கிறான் என்றால் அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றத்தை நிரூபித்து தூக்கில் போடுவதுதானே சரியாக இருக்கும்?

பெரியகோவில் குடமுழுக்கின் போது தீவிபத்து ஏற்பட்டு ஐம்பது பேர் செத்துப் போனார்களே அதற்கு என்ன காரணம்? அதை வைத்து தினமலர் பாணியில் ஒரு செய்தி வெளியிடுவதாக இருந்தால், “தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடக்கும் போது கண்டிப்பாக ஐம்பது பேர்கள் இறப்பார்கள்” என்றல்லவா இருக்கும்?

சபரிமலையில் ஆண்டுதோறும் நெரிசல் ஏற்பட்டு பல ஐயப்ப்ப சாமிகள் பரிதாபமாக சாகிறார்கள். இன்று கூட திருப்பதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஐம்பது பக்தர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இது போக அமர்நாத், காசி, மதுரா என்று எல்லா பக்தி சுற்றுலாக்களின் போதும் விபத்து நடந்து பலர் சாகிறார்கள். இதையும் தினமலர் பாணியில் “புண்ணிய ஷேத்தரங்களுக்கு சென்றால் மரணம் நிச்சயம்” என்று வெளியிடலாமே? பார்ப்பன தினமலர் அப்படி வெளியிட்டால் பெரியகோவில் சென்டிமெண்டையும் நாம் மன்னித்து விடலாம்.

கொலைகார சங்கரச்சாரி ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

தினமலரின் இளவல் அந்துமணி என்ற இரமேஷ் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்தார் என்ற செய்தி பல பத்திரிகைகளில் வந்து நாறியதே, அதன்படி தினமலரில் புனைபெயரில் எழுதும் அத்தனைபெரும் பொறுக்கிகள் என்று ஒரு சென்டிமெண்டை நாம் ஏன் ஆரம்பித்துவைக்கக் கூடாது?

கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதற்கு சற்றும் குறைவில்லாத படி தினமலரும் தனது பார்ப்பன முட்டாள்தனங்களை கக்கி வருகிறது. இன்னும் ஐந்தாண்டு காலத்தில் இந்தக்கூட்டம் என்னவெல்லாம் ஆடப்போகிறதோ தெரியவில்லை.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். எடுப்போம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லுக்கோதா உபநிடதத்தின் படி பெயரில் வெற்றியை தாங்கியிருக்கும் பெண் ஆட்சியாளரை புகழ்ந்து பாடும் புலவர்கள் (தற்போது பத்திரிகைகள்- அதன் முதலாளிகள், ஆசிரியர்கள்) அனைவரும் சரியாக ஒன்பது மாதங்கள், ஒன்பது வாரங்கள், ஒன்பது நாட்கள், ஒன்பது மணிகள், ஒன்பது நிமிடங்கள், ஒன்பது விநாடியில் ரத்தம் கக்கி சாவார்கள் என்று போட்டிருப்பது நிச்சயம் பலிக்குமாம். ஏனெனில் ஒன்பது என்ற எண் அந்த அல்லிராணியின் ராசியான எண்ணாம்.

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் ஒன்று அந்த அல்லிராணி ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியை இழக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப் புலவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி ஒருபோதும் பாட்டு எழுதாமல் இருக்க வேண்டுமாம். ஆக புலவர்கள் பாட்டை நிறுத்தப் போகிறார்களா இல்லை ரத்தம் கக்கி சாகப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
vinavu

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு: தொழிற்பிரிவு மாணவர்களுக்கு இடம் மறுக்கும் கல்லூரிகள்

பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பிளஸ்-2-வில் அதிக அளவிலான மாணவர்கள் முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 மற்றும் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கும் காரணத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இம்முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில் மொத்தம் 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தக் கல்லூரிக்கு இப்போது 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் அதே பகுதியில் உள்ள மற்ற கல்லூரிகளிலும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளைக் காட்டிலும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய பி.காம். பட்டப் படிப்புக்கே மாணவ, மாணவிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்டு, சில கல்லூரிகள் அரசு உதவி பெறும் திட்டத்தின் கீழ் வரும் சில படிப்புகளையும், சுயநிதி படிப்புகளாக மாற்றி லாபம் சம்பாதித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, பிளஸ்-2-வில் தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு, சில கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடம் தர மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அமைந்தகரையைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, பிளஸ்-2-வில் தொழில் பிரிவில் படித்துள்ளார். 1200-க்கு 930 மதிப்பெண் பெற்ற இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில், பி.காம். படிப்பில் சேர விரும்பி விண்ணப்பம் கோரியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகிகள் பிளஸ்-2 தொழில் பிரிவுக்கு பி.காம். பிரிவில் இடம் கிடைக்காது. எனவே, வேறு பிரிவை தேர்வு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி வணிகப் பிரிவு பேராசிரியர் ரவி கூறியது:

அரசு ஆணையின்படி, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு, பி.காம். படிப்பில் 20 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆணையை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.

இம்முறை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆணையை பிறப்பிக்க தாமதமாகலாம். இருந்தபோதும், 2010-11 கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையையே கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்.

ஆனால், கல்லூரிகள் அரசு உத்தரவை மதிப்பதே இல்லை. லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

சில அரசு கல்லூரிகளும், தங்களுடைய தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, தொழிற்பிரிவு மாணவர்களை பி.காம். படிப்பில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகின்றன. பல்கலைக்கழகமும் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிவதற்குள், உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு: தொழிற்பிரிவு மாணவர்களுக்கு இடம் மறுக்கும் கல்லூரிகள்

பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பிளஸ்-2-வில் அதிக அளவிலான மாணவர்கள் முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 மற்றும் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கும் காரணத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இம்முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில் மொத்தம் 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தக் கல்லூரிக்கு இப்போது 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் அதே பகுதியில் உள்ள மற்ற கல்லூரிகளிலும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளைக் காட்டிலும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய பி.காம். பட்டப் படிப்புக்கே மாணவ, மாணவிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்டு, சில கல்லூரிகள் அரசு உதவி பெறும் திட்டத்தின் கீழ் வரும் சில படிப்புகளையும், சுயநிதி படிப்புகளாக மாற்றி லாபம் சம்பாதித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, பிளஸ்-2-வில் தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு, சில கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடம் தர மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அமைந்தகரையைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, பிளஸ்-2-வில் தொழில் பிரிவில் படித்துள்ளார். 1200-க்கு 930 மதிப்பெண் பெற்ற இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில், பி.காம். படிப்பில் சேர விரும்பி விண்ணப்பம் கோரியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகிகள் பிளஸ்-2 தொழில் பிரிவுக்கு பி.காம். பிரிவில் இடம் கிடைக்காது. எனவே, வேறு பிரிவை தேர்வு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி வணிகப் பிரிவு பேராசிரியர் ரவி கூறியது:

அரசு ஆணையின்படி, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு, பி.காம். படிப்பில் 20 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆணையை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.

இம்முறை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆணையை பிறப்பிக்க தாமதமாகலாம். இருந்தபோதும், 2010-11 கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையையே கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்.

ஆனால், கல்லூரிகள் அரசு உத்தரவை மதிப்பதே இல்லை. லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

சில அரசு கல்லூரிகளும், தங்களுடைய தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, தொழிற்பிரிவு மாணவர்களை பி.காம். படிப்பில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகின்றன. பல்கலைக்கழகமும் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிவதற்குள், உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி

2011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

  • 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி பெறுவார்கள்.
  • 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • டிப்ளமோ, தொழிற்பயிற்சி கல்வி,இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பு உட்பட பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை 15.07.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் 2011 12 ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது.

பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியர்களிடமிருது பெறப்படம் விண்ணப்படிவங்களை சரிபார்த்து, மாணவ மாணவியரின் 1-) பெயர், 2) பிறந்த தேதி 3) மதம் 4) தந்தை அல்லது பாதுகாவலர் பெயர் 5) ஆண்டு வருமானம்  6) பள்ளி கல்லூரியின் முகவரி 7) பின்கோடு 8) தொலைபேசி எண் 9) மாணவர்களின் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் மொத்தம் 50 விழுக்காடு 10) சேர்க்கை கட்டணம் 11) கற்பிப்புக் கட்டணம் 12) தேர்வுக் கட்டணம், ஆய்வக¢கட்டணம் 13) இதர பராமரிப்பு கட்டணம் 14) மாணவர் விடுதியில் தங்கி பயில்பவரா அல்லது தங்காமல் பயில்பவரா 15) மாணவர்களின் வங்கி சேமிப்பு விபரங்கள் 16) வங்கியின் பெயர் ஆகியவற்றை புதுபிப்பித்தலுக்கான கேட்புபட்டியலை 10&07&2011 அன்றுக்குள்ளும் புதியதற்கான கேட்பு பட்டியலை 25.07.2011 தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று பெற வேண்டும்.

மேலதிக விபரங்களை http://tnminoritiesscholarship.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

திங்கள்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு நிபந்தனை

எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை) தகுதி கோரும் மாணவர்கள், ஆதாரங்களுக்கான பிரதியை கட்டாயம் வைக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை பட்டதாரி) தகுதி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்த ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ல், கல்விக் கட்டணம் ரூ.4,000-த்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோன்று பி.இ. படிப்பில் மொத்த ஆண்டுக் கட்டணத்தில், கல்விக் கட்டணம் ரூ.7,500-க்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
நிபந்தனை ஏன்? கடந்த கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 6,440. இதே போன்று பி.இ. படிப்பில் சேர கடந்த ஆண்டு விண்ணப்பித்த 1 லட்சத்துக்கு 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 78,000 ஆகும்.
பி.இ. படிப்புக்கான விண்ணப்பத்தின்போது குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவோரிடமிருந்து தலைமையக தாசில்தார் ஆதாரச் சான்றிதழ் பிரதியை (ஜெராக்ஸ் பிரதி) அண்ணாபல்கலைக்கழகம் பெற்று, அதை ஆய்வு செய்து கலந்தாய்வின்போது தகுதி கோரிய மாணவருக்கு ஒப்புதல் வழங்குவதை அண்ணா பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவோரிடம் அதே நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி, எம்.பி.பி.எஸ். படிப்பில் ரூ.4,000 கல்விக் கட்டண விலக்கைக் கோருவோருக்கு வசதியாக விண்ணப்ப-தகவல் தொகுப்பேட்டில் விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவதற்கான தலைமையக தாசில்தார் சான்றிதழ் பிரதியை கட்டாயம் இணைக்க வேண்டும். இவ்வாறு சான்றிதழ் பிரதி இல்லாத விண்ணப்பங்கள், பொதுப் பிரிவு விண்ணப்பங்களாகக் கருதப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவினர் கவனிக்க: முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 அல்லது படிவம் 2-ஐ பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. கடந்த ஆண்டுகளைப் போன்று மேலே குறிப்பிட்ட சிறப்புப் பிரிவினருக்கு என தனி விண்ணப்ப முறை கிடையாது.
விளையாட்டுப் பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கவுன்டருக்கு ""நேரில் வந்து கொடுப்பது'' அவசியமாகும் என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.