தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

அறிவிப்பு பீ.ஜைனுல் ஆபிதீன் பொறுப்பும் அமானிதமே


 பொறுப்பும் அமானிதமே
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சமுதாயத்தில் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தினான். இந்த ஜமாஅத்தின் கொள்கையை எதிர்ப்பவர்களும் இந்த ஜமாஅத்தைப் போல் நம்பகமான இயக்கம் வேறு இல்லை என்று நம்பும் அளவுக்கு அல்லாஹ் இந்த ஜமாஅத்துக்குப் பேரருள் புரிந்துள்ளான்.
இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டது முதல் என்னால் இயன்றவரை அப்பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். ஆனால் சமீபகாலமாக உடல் நலனில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற இயலாமல் போவதை நான் உணர்கிறேன். என்மீது சுமத்தப்பட்ட மாபெரும் அமானிதத்தில் குறை வைக்கக்கூடாது என்பதற்காக நான் ஓய்வில் இருக்கும் காலம் வரை யாராவது இப்பொறுப்பைச் சுமந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை நான் நிர்வாகக் குழுவில் வலியுறுத்தியும் அல்லாஹ்வின் அருளால் இப்போது தான் இதற்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.
எம்.ஐ.சுலைமான் அவர்கள் இப்பொறுப்பைச் சுமந்திட ஒப்புக் கொண்டுள்ளார். தலைவராகப் பொறுப்பேற்குமாறுதான் நான்  அவரை வற்புறுத்தினேன். ஆனால் உயர்நிலைக் குழுவும் இதை ஏற்கவில்லை. சுலைமானும் ஏற்கவில்லை. செயல்தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கி எம்.ஐ.சுலைமான் செயல்தலைவராக இருக்கட்டும் என்ற அளவுக்குத் தான் உயர்நிலைக் குழு இதை ஏற்றுக் கொண்டது.
சேலம் மதரஸாவின் கல்வி ஆண்டு முடிந்தவுடன் அனேகமாக ஜூன் மாதம் முதல் எம்.ஐ.சுலைமான் எனது பணிகளைக் கவனிப்பார். தேவைப்படும் போது எனது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வார். அதுவரை என்னால் இயன்ற அளவுக்குப் பொறுப்பை நிறைவேற்றுவேன். ஏற்கனவே நான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்திக் கொடுப்பேன். கிறித்தவர்களுடனான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்து விவாதங்களிலும் எனது பணி எப்போதும் போல் இருக்கும் இன்ஷா அல்லாஹ். அவசர நேரங்களில் எனது உடல் நலனைப் பொருட்படுத்தாமல் பாடுபடுவேன். துஆச் செய்யுங்கள்!

உயர்நிலைக் குழுவின் ஒப்புதலோடு இதை வெளியிடுகிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

வியாழன்

மீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே


முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மீடியாக்களுக்கு எதிராக நாம் ஏன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கக் கூடாது?
நமது நாட்டில் உள்ள அதிகமான நீதிபதிகள் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் தங்கள் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்தே தீர்ப்பு அளிக்கின்றனர். இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. பிராணிகளை வதை செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளது. குருவி வேட்டையாடுவோரையும், பறவைகளை விற்பனை செய்வோரையும் தண்டிக்கும் நீதிமன்றங்கள் ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க என்ன காரணம்? அப்பட்டமாக பிராணிகள் வதை செய்யப்படுவது தெரிந்தும் இதை அனுமதிக்க ஒரே காரணம் ஜல்லிக் கட்டு மத்த்தின் பெயரால் நடத்தப்படுவது தான். அதே நேரத்தில் ஆடு மாடு ஒட்டகம் உணவுக்காக அறுக்கலாம் என்று சட்ட்த்தில் அனுமதி இருந்தும் ஒட்டகம் குர்பானி கொடுக்க நீதி மன்றம் தடை போட்டது. தடையை மீறி அறுப்போம் என்று அறிவித்த பின்னர் மாநில அரசின் தலையீட்டின் காரணமாக தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது.
இதிலிருந்து நீதிபதிகள் சட்ட்தைப் பார்த்து தீர்ப்பளிக்காமல் தங்கள் மத நம்பிக்கையைச் சார்ந்தே தீர்ப்பளிக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் அவர் சில நாட்கள் அதிக பட்சம் 90 நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள். குண்டாஸ், மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். இப்படித்தான் இந்த நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படுகிறது.
ஆனால் முஸ்லிம்கள் மட்டும் பத்து ஆண்டுகள் பதினாலு ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்தனர். இருக்கின்றன. கீழ் நீதிமன்றங்களும் மேல் நீதி மன்றங்களும் முஸ்லிம்களுக்கு மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யும் உரிமையை வெளிப்படையாக மறுத்து வந்தன. வருகின்றன. குண்டு வெடிப்பு வழக்கு என்று காரணம் சொல்லப்பட்டாலும் அதிலும் உண்மை இல்லை. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்பரிவாரத்தினருக்கு ஜாமீன் கிடைக்கிறது. முஸ்லிமுக்கு மட்டும் கிடைப்பதில்லை என்றால் என்ன அர்த்தம்? நீதிபதிகள் சட்ட்டப்படி நடப்பதில்லை. முஸ்லிம் என்ற வெறுப்பின் காரணமாகவே இப்படி நடக்கிறார்கள்.
பட்டியல் போடுவதாக இருந்தால் ஒரு நூலாக எழுதும் அளவுக்கு நீதி மன்றங்களின் பாரபட்சமான போக்குக்கு உதாரணங்கள் உள்ளன.
வேறு விஷயங்களுக்கு நீங்கள் பொது நல வழக்கு தொடர்ந்தால் அதில் நியாயம் வழங்க வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்கள் கருதுவது போல் நீதிபதிகள் பலரும் கருதும் நிலையில் வழக்கு போடுவதால் என்ன பயன்? அது எழுத்துரிமை என்று தீர்ப்பளித்து நியாயம் வழங்குவார்கள்.
முஸ்லிம் சமுதாயம் சம்மந்தப்பட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகாமல் பேச்சு வார்த்தை மூலமும் அரசியல் நடவடிக்கை மூலமும் போராட்டம் மூலமும் சந்திப்பது தான் அறிவுடமை.

சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தாவாப்பணி

இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் சிங்கள் மொழி பேசுவோராகவும், இந்து, முஸ்லிம் கிறித்தவர்கள் தமிழ் மொழி பேசுவோராகவும் உள்ளனர். புத்த மதம் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக இருப்பதாலும் சிங்கள மொழி பிரதான மொழியாகவும் உள்ளதால் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத தமிழர்களும் சிங்கள மொழியையும் படிக்கிறார்கள். ஆனால் சிங்கள மொழி பேசுவோர் பெரும்பாலும் தமிழ் மொழியைப் படிப்பதில்லை. எனவே சிங்கள் மக்கள் மத்தியில் சத்தியப் பிரச்சாரம் சென்றடைய வேண்டுமானால் சிங்கள் மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டால் தான் சாத்தியமாகும்.

இதில் தமிழ் கூறும் முஸ்லிம் அமைப்புகள் போதுமான அளவுக்கு அக்கறை செலுத்தாமல் இருந்த குறையை இலங்கையில் SLTJ (ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைப் பிரிவு) ஓரளவுக்கு நிவர்த்தி செய்து வருகின்றது.
இது வரை 17 நூல்களை சிங்கள் மொழியில் SLTJ வெளியிட்டுள்ளது. SLTJ யின் இலங்கை பொதுச் செயலாளர் அப்துர்ராஸிக் அவர்கள் இந்த நூல்களை சிங்கள் மொழியில் மொழிபெயர்த்து இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்ட்து.
பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கமும் சிங்கள மொழியில் மாற்றம் செய்யும் பணிகளும் முடியும் தறுவாயில் உள்ளது.
இதன் மூலம் சிங்கள மக்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு இஸ்லாத்தில் ஈர்க்கப்பட்டும் வருகின்றன. அல்ஹம்து லில்லாஹ்
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட நூல்களில் சில




புத்தகம் கிடைக்குமிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தக நிலையம் இல 241யு, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை மாளிகாவத்தை கொழும்பு -10.
தொடர்புகளுக்கு 0112677974 0774781472

நன்மைகளைப் பாழாக்காதீர்...!

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்: நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!
இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மண் படிந்துள்ளது.அதன் மீது மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் : 2 : 264)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன் அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் (அறிவிப்பவர்: அபூஉமாமா அல் பாஹிலி (ரலி) ஸூனன் நஸயி)

இறை நம்பிக்கையைப் பாழ்படுத்தும் காரியங்கள் உலகில் எத்தனையோ  நிறைந்துள்ளன. சிறு, பெரும் பாவங்கள் என வகைவகையாய் இறை மார்க்கம் அடையாளம் காட்டியுள்ளதில் பெரும்பாலானவற்றை நாம் அறிந்து வைத்துள்ளோம்.  இருந்தபோதும், ஈமான் பலம் பெறுவதற்காக நமக்கேற்படும்  பல சோதனைகளை அல்லாஹ்விற்காக என்ற தூய மனதோடு பொறுமை காக்கின்றோமா? என்பதை அன்றாடம் சுய ஆய்வு செய்து கொள்ள நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். 

காரணம் புகழ் என்பது எப்பேர்ப்பட்ட அறிஞனான மனிதனையும் அசைத்துப் பார்க்கும் ஒரு போதை!  தன்னையுமறியாமல் உள்ளத்தில் சலனத்தை எற்படுத்தும் அந்த போதைக்குப் பலியானவர்கள் கூடவே தற்பெருமை தலைக்கணம் போன்றவற்றையும் போனஸாகப் பெற்று விடுகின்றனர். இதனால் முகஸ்துதிக்குப் பலியாகும் அவலமும் ஏற்பட்டு விடுகிறது.

இறைவிசுவாசிகளாகிய ஏகத்துவப் பாதையில் பயணிப்போர் மேற்சொன்ன புகழ்ச்சிக்கு இடம் தருவார்களேயானால் அல்லது அதைப் பற்றிய விழிப்புணர்வை கைகொள்ளாமல் இருப்பார்களேயானால் சரியான பாதையை விட்டு அவர்களது வாழ்வு தடுமாறத் துவங்கும்.

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ மக்களோ அந்நாளில் பயன் தராது. (அல்குர்ஆன் 26: 88-89)

உள்ளுணர்வுகளில் சில மகிழ்வலைகளை ஏற்படுத்தி நான் என்ற தலைக்கணத்தில் நம்மையும் அறியாமல் தத்தளிக்க வைக்கும் இந்த உணர்வுகளைப் பற்றி எச்சரிக்கையுடனிருப்பது மறுமை வாழ்விற்கு சிறந்தது.  காரணம், அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் செய்யப்படும் அமல்களில் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை மழுங்கச் செய்து மனிதர்களிடம் பெருமை தேடும் மறைவான இணைவைப்பு எனும்  கொடுமைக்குக் கொண்டு செல்லும் அபாயம் இதிலுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றி தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டபோது அவர்கள் ரியா என்று பதிலளித்தார்கள். (மஹ்முத் பின் லபித் (ரலி) முஸ்னத் அஹ்மத்)

ஒரு மனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார்.இதுவே மறைவான இணைவைப்பாகும் (இப்னுமாஜா)

கண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது:

தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடு தான், (அவர்கள்) அற்பமான எதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள் (அல்குர்ஆன் 107:4-7) என்று எச்சரித்துக் கூறுகிறான். 

அல்லாஹ்விற்காக என்ற எண்ணமில்லாமல் செய்யப்படும் அமல்கள் கேடாகவே முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான். உண்மையான இறைநம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வை மட்டுமே மனதில் கொண்டு  வணக்கத்தில் ஈடுபடுவார்கள். மற்றவர்களிடமிருந்து எவ்வித வெகுமதியையோ நன்றியையோ அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்.

இதில் தொழுகை என்ற அமல் மட்டுமல்லாமல், நோன்பு, ஹஜ், தர்மம்,  மற்றும் மார்க்கம் அனுமதிக்கும் நன்மையான காரியங்கள் எந்தவொன்றாயிருந்தாலும் அதை நமக்கு அருட்செய்த இரட்சகனாகிய அல்லாஹ்வுக்காக மட்டுமே என்ற தூய நிய்யத்துடன் செயல்படுத்த வேண்டும். அதை விடுத்து பிறர் மெச்சுவதற்காக என்ற நிய்யத் ஏற்படுமேயானால் நமது நல்லறங்கள் பாழாகி விடும்.

உதாரணமாக பள்ளிவாசலுக்கு ஒரு டியூப்லைட் ஒருவர் வாங்கிக் கொடுத்திருப்பார். அது ஒரு சிறிய அற்பமான செலவுதான் ஆனால் அதில் தன் பெயர்,குடும்பப்பெயர், அட்ரஸ் எல்லாவற்றையும் அந்த டியூப்லைட்டில் எழுதி பள்ளியில் மாட்டி வைத்திருப்பார்.

ஒரு சின்ன டியூப்லைட் அன்பளிப்பு செய்யும் விஷயத்தில் எந்த மாதிரியெல்லாம் மக்கள் விளம்பரம் தேடுகின்றனர்? எனும்போது வேறு பல தர்ம காரியங்கள், பள்ளி கட்டுமானம், ஜகாத், இஸ்லாம் கூறும் பொதுக் காரியங்கள் போன்றவற்றில்; மக்கள் முகஸ்துதிக்குப் பலியானால் என்ன நிலையாகும்?

இஸ்லாம் என்ற கொள்கையும் கோட்பாடும் எத்தகைய அந்தஸ்துடையது! அது எப்பேர்ப்பட்ட நுண்ணறிவாளனால் அருளப்பட்டது என்ற கருத்தை வலுவாக சிந்திக்க வேண்டும். அதைப் பின்பற்றுவதன் மூலம் மனிதர்கள் அதற்குண்டான பரிபூரண கூலியை கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்களா? என்பதை ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

உலகில் தங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களுக்கே சரியான கூலி தராத, தர முடியாத,  தர மறுக்கின்ற இந்த மகாத்மாக்கள் மகத்துவமிக்க ஏகநாயனுக்காக செய்யக் கூடிய காரியங்களுக்கு என்ன தந்து விட முடியும்?

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.(அல்குர்ஆன் 4:38) 

நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (அனஸ்(ரலி) புகாரி 6492)

மூபிகாத் என்றால் பேரழிவை உண்டாக்குபவை என்று பொருள். இதுவெல்லாம் சிறிய பாவம் தானே என்று நாம் மலிவாகக் கருதும் சில செயல்கள், அல்லாஹ்விடம் பெரும் தண்டனைக்குரிய குற்றங்களாக மாறி விடுவதுண்டு.    

அல்லாஹ்வுடைய உதவி தவிர வேறு எந்த உதவியுமில்லாத மறுமை நாளில் முகஸ்துதியை விரும்பிய மனிதனுக்கு என்ன கூறப்படும்?

மறுமையில் கூலி கேட்கும்போது, உலகில் யாருக்காக செய்தாயோ அவர்களிடமே கேட்டுக் கொள் என்று கூறப்படும் (புகாரி)

ஒரு காரியத்தை எண்ணும்போதும் செய்யும்போதும் வல்ல நாயன் அல்லாஹ் அதை நன்கறிகிறான். இந்த பிரபஞ்சத்தில் எதுவும் அவனுக்கு மறைந்ததல்ல என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வலுவாக இருக்க வேண்டும். மேலும், நம் செயலுக்குண்டான கூலியை,  சரியான கூலியை அல்லாஹ் தருவான் அவன் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அனைத்தையும் கண்காணிப்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் வலுவாக இருக்க வேண்டும். 

திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்:

மனிதனை படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.(அல்குர்ஆன் 50:16-18)
இப்படிப்பட்ட கூர்மையான ஆற்றல் நிறைந்த நிர்வாகியான அல்லாஹ்வின் தன்மையை உணராமல் மலிவான விளம்பரங்களில் நாட்டங் கொள்வது நன்மையைப் பாழாக்கி விடும்.ஒவ்வொரு அம்சத்திலும் தூய்மையைப் பற்றி பிடிப்பது ஏக இறைநம்பிக்கையாளனின் தலையாய பண்பாக இருத்தல் வேண்டும்.

ஒரு மனிதர் இயலாமையினால் உதவி கேட்கிறார்.  கல்விக்காகவோ, மருத்துவத்திற்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ அல்லது இயல்பு வாழ்க்கைக்கோ உதவி கேட்கும்போது செய்கிறோம். செய்துவிட்டு உதவி பெற்றவரிடமிருந்து மிகுந்த மரியாதையை எதிர்பார்க்கிறோம். பிரதிபலனாக எதை எதையெல்லாமோ எதிர்பார்க்கின்றனர். உதவிபெற்றவரும் நன்றிகடனாக மிகுந்த மதிப்பு மரியாதை தருகிறார். உபசரிக்கிறார். நாள்பட நாள்பட இந்த உபசரிப்பில் ஏதேனும் குறை ஏற்பட்டுவிட்டால் போதும் உதவி செய்தவர் மனபக்குவமின்றி தான் கொடுத்து உதவியதை சொல்லிக் காட்டுவார் பார்த்தீர்களா? அவன் எப்படியிருந்தான்? என்ன மாதிரி தவிப்பில் இருந்தான்! நான் அன்று உதவி செய்யாவிட்டால் இவரின் நிலை என்னவாக இருக்கும்? இன்றைக்கு இவன் எப்படி நம்மோடு மரியாதைக் குறைவாக  நடக்கிறான். பாருங்கள் என்று சொல்லி; காண்பித்து, தொல்லை தருவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்களை வல்ல நாயன் அல்லாஹ் தன் திருமறையின் வாயிலாக எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.  

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லைத்தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும் மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன். சகிப்புத் தன்மை மிக்கவன். (2:262-263)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்து உதவியதை சொல்லி காட்டுபவர், தன்னுடைய கணுக்கால் கீழே ஆடையை இழுத்து சென்றவர், பொருளை விற்பனை செய்வதற்காக பொய் சத்தியம் செய்தவர்,இத்தகைய மூன்று பேரிடமும் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான், பார்க்கவும் மாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும் கடுமையான வேதனையும் உண்டு. (அபுதர் கிஃபாரி (ரலி) முஸ்லீம்)

நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (அல்குர்ஆன். 2: 272) 

ஜூன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்;லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான் என்று கூறியதைக் கேட்டேன் (சலமா பின் குஹைல் புகாரி 6499)

நன்மைகள் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் அருட்கொடையாகும். அவற்றை அவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் செயல்படுத்துவதில் தான் ஈமானின் வெற்றி உள்ளது. ஈமானுக்கு வெற்றி தரும் நன்மைகளை பாழாக்காதீர்கள். 

நன்றி: துபை TNTJ

சனி

வாழ்நாளை அதிகமாக்கும் நோன்பு


வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்
வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
National Institute on Ageing  என்ற நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் "வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (alzheimer ' s  disease  ), பார்கின்சன் நோய் (parkinson disease ), மற்றும் மூளை தேய்மான நோய்களான degenerative  disease  களில் இருந்து இந்த விரதம் மூலம் பாதுகாப்பு பெறலாம். கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன தூதுகள் எனப்படும் Chemical messengers  தூண்டப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்கள் ..
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்பார்கள் – ஆதாரம் நஸாயீ 2320, 2321,  2322

 The Daily Telegraph’  என்ற பத்திரிகை இவ்வாறு  கூறுகிறது 
"உணவை அதிகம் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நட்த்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த அதே விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே நம்பி இருந்தனர்.
இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும் ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த நேர்மறையான (positive effect  ) விளைவைக் கண்டுபிடித்து விட்டனர்
தற்போது பேராசிரியர் மார்க் மாட்சொன், neurosciences  ஆய்வக நிறுவனத்தின் தலைவர் Prof Mark Mattson, head of the institute's laboratory of neurosciences இவ்வாறு கூறுகிறார் "கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும்.. ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது.intermittent bouts of fasting, என்ற இடைவெளி விட்ட விரதம், அதாவது, கொஞ்ச இடைவெளியில் எந்த உணவையும் அறவே தடுப்பது, அதற்க்கு அப்புறம் தனக்கு வேண்டியதை , தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்று கூறுகிறார்.
இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும். மற்ற சமயத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்ட்தாக இருப்பதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே அதிகமான விரதங்கள் உள்ளன. மேலும் பிற சமய விரதத்தின் போது திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான க்லோரிகள் கிடைத்து விடும். மேலும் சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதை தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவ்ற்றை சாப்பிடலாம் என்று உள்ளது. எனவே இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. இன்னும் சில விரதங்கள் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நனமையை அடைய முடியாது.
ஆனால் முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ சைஅவமோ திடமோ திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. உண்வாக கருதப்படாத பச்சைத்தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் சுமார் பன்னிரண்டு மணி நேரம் என்ற் அளவில் ஓரளவு நீண்ட நேரம் கொண்ட்தாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாக பெற முடிகிறது. அதே நேரத்தில் காலவறையற்ற அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் போல் இருந்து மனிதனைக் கொல்லாமல் இரவு முழுவதும் விருமியதை உண்ணலாம் என்று இஸ்லாமிய நோன்பில் உள்ளது.
பொதுவாக மற்றவர்களை விட முஸ்லிம்கள் கட்டுபாடில்லாம அதிக அசைவ  உணவை உட்கொண்டாலும், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் வாழ்நாட்கள் குறைவதாக இல்லை. இது நோன்பினால் கிடைத்த நன்மையாக இருக்கக் கூடும்.
டாக்டர் முஹம்மது கிஸார்