தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?


தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? சஃபியுல்லாஹ்

பதில்
சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்தது போன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து விடவும் செய்யும்.
இத்தகையவர்கள் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்பு கேட்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது நன்றாகக் கனைக்க வேண்டும் என்றும், மண் கட்டியை வைத்துக் கொண்டு நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தான் பள்ளிவாசல் கழிவறைகளில் அதிகமான கனைப்புச் சத்தத்தை நாம் செவியுற முடிகின்றது. இவர் நாற்பதடி தூரம் நடப்பதற்குள் தொழுகை முடிந்து விடும்.

திங்கள்

சந்திரனில் டைட்டானியம் அதிகளவில்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம்

காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!


                                           காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மன...ைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!

தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்

மாடுகளின் தோல் விற்றதன் மூலம் கிடைத்த பணமும் ஏழைகளுக்கு விநியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தேனி மாவட்டம் பெரியகுளம் TNTJ சார்பாக  உள்ளுர் வசூல் மூலம் 2 மாடுகளும். தலைமை வரவு மூலம் ஒரு ஆடும் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.மூன்று மாடுகளின் தோல் விற்றதன் மூலம் கிடைத்த பணமும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கூட்டு குர்பானி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாளை ஒட்டி TNTJ தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக இரண்டு மாடும், தலைமை வரவு மூலம் ஒரு மாடும் குர்பானி வழங்கப்பட்டது. சுமார் அரை கிலோ கறி வீதம் பெரியகுளத்தில் ஏழை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான அழகர்சாமி புரம், வாகம்புளித் தெரு, பெரியகுளம் குளக்கரை தெருக்களில் ஏழைகளுக்கு ஆட்டோவில் சென்று அவர்களது வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்கப்பட்டது.

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை-பெரியகுளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் கடந்த 07.11.11அன்று நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

புதன்

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகமெங்கும் பெருநாள் தொழுகைகள் நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி திடல்களில் வைத்து நடத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும்  எதிர்வரும் ஹஜ்  பெருநாள் தொழுகை (2011) கீழ்கண்ட திடல்களில் நடைபெறும்.இன்ஷா அல்லாஹ் ...-
 
தேனிமாவட்டம்
  • கம்பம்  --------------- கம்பம் மெட்டு சாலை ----------  எம்.பஷீர் அஹமது
  • பெரியகுளம்  --------காயிதே மல்லத் திடல்  ------------ஈஸா பரீத்
  • உத்தமபாளையம் --- J.P.நகர் ஆத்து மேடடுத்திடல் ------- அபதாஹிர்

செவ்வாய்

மாநிலத்தலைமையகம் நடத்தும் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களுக்கான இரண்டுநாள் சிறப்பு பயிற்சி முகாமை நமது மாநிலத்தலைமையகம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நவம்பர் 19 மற்றும் 20 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மதுரையில் நடத்தவுள்ளது.
இந்த இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமில் பேச்சாளர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.