தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

சிறை நிரப்பும் போராட்டம் ஒரு வாரம் தள்ளிவைப்பு

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார் கிளைத் தலைவர் யாகூப் அவர்களை வீடு புகுந்து கைது செய்து, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், அன்று மாலை 4 மணிக்கு இதற்கு நியாயம் கேட்க அணி திரண்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதற்கு காரணமாக இருந்த துணை ஆணையாளர் கிரி மற்றும் உதவி ஆணையாளர்கள் செந்தில் குமரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்வரும் 03.01.2013 வியாழன் அன்று ஒரு லட்சம்பேர் பங்கு பெறும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாநில நிர்வாகிகளிடம் ஒரு வாரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததை ஏற்று இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10.01.2013 வியாழன் அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநித் தலைமையகம், சென்னை