தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

மாநிலத்தலைமையகம் நடத்தும் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களுக்கான இரண்டுநாள் சிறப்பு பயிற்சி முகாமை நமது மாநிலத்தலைமையகம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நவம்பர் 19 மற்றும் 20 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மதுரையில் நடத்தவுள்ளது.
இந்த இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமில் பேச்சாளர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

குறிப்பு:
· மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யும் பேச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
· பேச்சாளர்கள் முன்கூட்டியே தங்களது பெயரை மாவட்ட நிர்வாகிகளிடம் பதிவு செய்து மாநிலத்தலைமையகம் வழியாக நுழைவு அனுமதிச்சீட்டை பெற வேண்டும்.
· பேச்சாளர்கள் அனைவருக்கும் போக்குவரத்து தொகையை தலைமையகமே வழங்கும்.
· இரண்டு நாட்கள் முழுமையாக ஒதுக்கி நாம் ஏற்பாடுசெய்துள்ள மண்டபத்தில் தங்க வேண்டும்.
· அந்த இரண்டுநாளும் மாணவர்கள் போலத்தான் பேச்சாளர்கள் நடத்தப்படுவார்கள்.
· குர்-ஆன் ஹதீஸ் ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றில் ஈடுபடும் முதல் நிலை பேச்சாளர்களுக்கு இதில் அனுமதி இல்லை
எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயிற்சி முகாமில் அனைத்து மாவட்ட அளவிலான பேச்சாளர்களும் கலந்துகொள்ள இப்போதே தயாராகும்படி கேட்டுக்கொள்கின்றோம். ரயில் மார்க்கமாக வரக்கூடியவர்கள் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு : 9952035333