தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாளை ஒட்டி TNTJ தேனி மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக இரண்டு மாடும், தலைமை வரவு மூலம் ஒரு மாடும் குர்பானி வழங்கப்பட்டது. சுமார் அரை கிலோ கறி வீதம் பெரியகுளத்தில் ஏழை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான அழகர்சாமி புரம், வாகம்புளித் தெரு, பெரியகுளம் குளக்கரை தெருக்களில் ஏழைகளுக்கு ஆட்டோவில் சென்று அவர்களது வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்கப்பட்டது.