தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

எது நாட்டுப்பற்று?

சுதந்திர தினம் என்பது சிலருக்கு மது அருந்துவது, சிலருக்கு உல்லாசம், இன்னும் பலருக்கு கொடி ஏற்றுவது இனிப்பு வழங்குவதுடன் நின்று விடுகின்றன. 
முஸ்லிம்களை பொறுத்தவரை கொடியை வணங்குவது நாட்டுபற்றல்ல. அந்நிய நாட்டவன் ஒருவன் நமது மண்ணை அபகரித்தால் நமது மக்களை தாக்க வந்தால் அவனிடமிருந்து நமது மண்ணையும் நமது மக்களையும் காப்பது தான் உண்மையான நாட்டு பற்று. அந்த வேளையில் உயிரே போனாலும் அதற்காக கவலைப்படாமல் சாக தயாராவது தான் நாட்டுப்பற்று. அதை இந்திய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அந்நிய நாட்டவனை நாம் எதிர் கொள்ளும் போது நாம் உயிர் நீத்தால் மறுமையில் சொர்க்கத்தை தருவதாக இறைவன் வாக்களிக்கின்றான். இது இஸ்லாமிய கொள்கைகளில் ஒன்று. எனவே இந்திய மண்ணையும் மக்களையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. 

இந்த சுதந்திர தினத்தில் நமது நாட்டுப்பற்றை புதுப்பிப்போம்