தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

பெண்ணொருவர் ரயில் மோதி சிறுகாயங்களுடன் தப்பிக்கும் நேரடிக் காட்சி

இலங்கையில் இதல்கஸ்ஹின்ன என்னும் பிரதேசத்தில் தண்டவாளத்தின் அருகாமையால் நடந்து வந்த பெண் ஒருவர் ரயில் வருவதை அவதானிக்காமல் ரயிலில் மோதுகின்ற நேரடிக் காட்சியை ஒருவர் படம் பிடித்துள்ளார்.

18 வயதுடைய மலையக தமிழ் பெண் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளகியுள்ளார். ஆனாலும் ரயிலின் கரையோரத்தில் மோதுண்டதன் காரணத்தால் அவர் வெளியில் தள்ளப்பட்டு சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார்.

இச்சம்பவம் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின் கருத்து தெரிவித்த பெண் தான் நடந்து வரும் பொழுது தவறுதலாகவே மோதுண்டதாகவும் தனக்கு உடம்பில் பெரிய வலி இல்லையென்றும் தெரிவித்துள்ளார். அவருடைய தம்பி பின் அவரை அழைத்து செல்வதை கானொளியில் காணலாம்.