தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய்

மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக பிடி ஆணை-arrest warrant

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை (arresst warrant)பிறப்பித்துள்ளது.


அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

எனவே, அவர்களுக்கு எதிராகப் பிடி ஆணைப் பிறப்பித்து (arrest warrant) நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.