தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வியாழன்

முஸ்லிம் சிறுமி படுகொலை:தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை

லகிம்பூரில்(உ.பி) நிக்ஹஸன் போலீஸ் நிலையத்திற்கு அருகே 14 வயது முஸ்லிம் சிறுமி மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை கமிஷனின் பிரதிநிதிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.


ஐ.பி.எஸ் அதிகாரிகளான பி.எஸ்.ராவ் மற்றும் அனில் சர்மா ஆகியோர் இந்த விசாரணையை நடத்துகின்றனர். நேற்று முன்தினம் 14 வயதான முஸ்லிம் சிறுமி போலீஸ் ஸ்டேசனுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் மரணித்து காணப்பட்டார். தேசிய மனித உரிமை கமிஷனின் விசாரணைக்குழு சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். இச்சம்பவத்தைக் குறித்து பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தாமாகவே வழக்கை பதிவுச்செய்து விசாரணையை துவக்கியுள்ளது தேசிய மனித உரிமை கமிஷன்.