தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

புதன்

கேள்வி: அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு இடைத்தரகர் தேவையா?

    இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத்தரகராகவோ ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில
“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்திக்கும் போது பதிலளிக்கிறேன்; எனவே அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்போது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் (என்றுகூறுவீராக!)அல்குர்ஆன் 2 :186)
என “அல்பகறா” (பசுமாடு) என்ற அத்தியாயத்தில் இறைவனும்,
“(நண்பர்களே!) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமாகவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்போதும்) உங்களுடனேயே இருக்கிறான்” (நூல் : முஸ்லிம்)
என்று அண்ணலாரும் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்