தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் கிளை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

திங்கள்

மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
குஜராத் மாநில அரசு இந்தக் கலவர வழக்கை சரியாக விசாரணை நடத்தாது என்று கருதிய உச்சநீதி மன்றம் கலவர வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு SIU என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு தக்க முறையில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சீல் வைத்து உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.அத்வானியே மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் உள்ளதாக தனது சுயசரிதையில் எழுதினார்.

இதுதான் உண்மை என்று இந்திய மக்கள் அனைவரையும் பாஜகவினர் நம்ப வைத்து ஏமாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் SIU வெளியிட்டுள்ளது

நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்தினை முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது
2 G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறை கேடு என்ற பிரச்சனை சில வருடங்களுக்கு முந்தியது என்றாலும் நீரா ராடியாவின் உரையாடல் அம்பலமானவுடன் ராசாவின் ராஜினாவைக் கோரியவர்கள்,பணத்தை விட அதிக மதிப்புள்ள மனித உயிகளைக் கொன்று குவித்த குற்றவாளியான நரேந்திர மோடி விஷயத்தில் மவுனம் காப்பது வியப்பாக உள்ளது.
ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிப்பதற்கு முன்னரும் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மராட்டிய முன்னாள் முதல்வர் மீது குற்றவாளி என்று தீர்ப்பு வருவதற்கு முன்னரும் குற்றச்சாட்டு வந்துவிட்ட காரணத்தினாலேயே பதவி விலகக் கோரிய பாஜக,அதிமுக,மதிமுக மற்றும் சில கட்சிகள் அதை விட பயங்கரமான குற்றச் செயலில் ஈடுபட்டதாக SIU யால் குற்றம் சாட்டப்பட்ட பின் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை.
எனவே மத்திய அரசாங்கம் நரேந்திர மோடி அரசை டிஸ்மில் செய்து கைது செய்ய வலியுறுத்தி இன்று (5.2.11) மாலை 4 மணிக்கு சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்கள்.பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
குறுகிய காலத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல்லாயிரகணக்கானோர் இதில் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்